செய்திகள் :

"முஸ்லிம் பெண்களை அழைத்து வந்தால் வேலை" - பாஜக முன்னாள் எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு

post image

உத்தரப் பிரதேசத்தில், முஸ்லிம் பெண்களை அழைத்து வரும் இந்து இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக பாஜக முன்னாள் எம்எல்ஏ ஒருவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் உள்ள டோமரியாகஞ்ச் தொகுதியின் முன்னாள் பாஜக எம்எல்ஏ-வாக இருந்தவர் ராகவேந்திர பிரதாப் சிங். இவர் அடிக்கடி இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சுக்களைப் பேசி சர்ச்சையில் சிக்குபவர். இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், அங்கிருந்த இளைஞர்களைப் பார்த்து, " முஸ்லிம் பெண்ணை அழைத்து வரும் இந்து இளைஞருக்கு, நாங்கள் வேலை ஏற்பாடு செய்து கொடுப்போம்" என்று பேசியிருக்கிறார்.

அவர் இவ்வாறு பேசியதும் கூட்டத்தில் இருந்தவர்கள் "ஜெய் ஸ்ரீ ராம்" என்று கோஷமிட்டுள்ளனர்.

ராகவேந்திர பிரதாப் சிங்கின் இந்த பேச்சு, சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்றத்தைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆம் ஆத்மி கண்டனம்

இது"குற்றச் செயல்களை நேரடியாகத் தூண்டும் செயல்" என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சஞ்சய் சிங் கடுமையாக சாடியுள்ளார். மேலும் இதுகுறித்து காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "இந்துக்களே, நீங்கள் வேலை விரும்பினால், முதலில் ஒரு கெட்டவராக மாறி, வேறு மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் ஓடிவிடுங்கள்" என்று பாஜக கூறுகிறது.எந்த இந்து பெற்றோர் தங்கள் மகன்கள் இழிவானவர்களாக இருக்க விரும்புகிறார்கள்?இது உலகில் இந்து மதத்தின் அடையாளமாக மாறுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ராகவேந்திர பிரதாப் சிங் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

முதல்வர் விஜய்யா? ADMK உடன் கூட்டணியா? - TVK Arun Raj Interview

கரூர் சம்பவத்துக்கு பிறகு முதல் முதலாக தவெக நிர்வாகிகள் பனையூர் அலுவலகத்தில் கூடி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். விஜய்யின் அடுத்தக்கட்ட பிரசாரப் பயணம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது... மேலும் பார்க்க

துணை ஜனாதிபதி நிகழ்ச்சி; `போலீஸ் விளக்கம் ஏற்க முடியாது; மத்திய அரசு உதவி நாடுவோம்'- வானதி சீனிவாசன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், “துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய திட்டமிடப்பட்டது. ... மேலும் பார்க்க

கேரளா: `பெண்களுக்கு மாதம் ரூ.1000'- புதிய அறிவிப்புகளை வெளியிட்ட பினராயி விஜயன்!

கேரள மாநிலத்தில் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து 2026 ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதை கருத்தில் கொண்டு இப்போதே பல தாராள திட்டங்களை அறிவித்துள்ளார் கேரள முதல்வ... மேலும் பார்க்க

SIR மூலம் வாக்குத் திருட்டு; பா.ஜ.க.வின் திட்டத்தை முறியடிக்க நவம்பர் 2-ல் அனைத்து கட்சி கூட்டம்

தென்காசியில் நடைபெற்ற அரசு நலத்திட்டம் வழங்கும் விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் பேசுகையில், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பிரேமாவிற்கு கலைஞர் கனவு இல்லத் திட்டத்தி... மேலும் பார்க்க

Trump: 'ரொம்பக் கெடுபிடியானவர்; போரை நாங்கள் தொடர்வோம் என்றார்'- மோடி குறித்து டிரம்ப் பேச்சு

அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி குறித்துப் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.தென் கொரியாவில் ஆசியா - பசிஃபிக் பொருளாதார ஒத்துழைப்புக் கூட்டமைப்பின் ( APEC) தலைவர்கள் கல... மேலும் பார்க்க