செய்திகள் :

Trump: 'ரொம்பக் கெடுபிடியானவர்; போரை நாங்கள் தொடர்வோம் என்றார்'- மோடி குறித்து டிரம்ப் பேச்சு

post image

அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி குறித்துப் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது. 

தென் கொரியாவில் ஆசியா - பசிஃபிக் பொருளாதார ஒத்துழைப்புக் கூட்டமைப்பின் ( APEC) தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் பேசிய டிரம்ப், “அணு ஆயுத பலம் கொண்ட இரு நாடுகள் (இந்தியா- பாகிஸ்தான்) தங்களுக்குள் தீவிரமாக மோதிக் கொண்டிருந்தன.

டிரம்ப்
டிரம்ப்

நான் மத்தியஸ்தம் செய்தபோது அவர்கள் இருவருமே நாங்கள் போரைத் தொடர்வோம் என்றனர். இருவருமே வலுவானவர்கள்.

பிரதமர் மோடி மிகவும் நல்லவர். ஆனால் அவர் ரொம்பக் கெடுபிடியானவரும்கூட. `போரை நாங்கள் தொடர்வோம்' என்றார்.

நான் மோடியிடம், `நீங்கள் போரைத் தொடர்ந்தால் உங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் இல்லை' என்றேன்.

பின்னர் பாகிஸ்தான் அரசிடமும் அதையே சொன்னேன். பின்னர் அவர்களே என்னை அழைத்து போரை நிறுத்துவதாகச் சொன்னார்கள்.

மோடி
மோடி

நான் இந்தியாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்து வருகிறேன். எனக்குப் பிரதமர் மோடி மீது மிகுந்த அன்பும், மரியாதையும் இருக்கிறது.

எங்களுக்குள் நல் உறவும் உள்ளது. அதேபோல் பாகிஸ்தான் பிரதமரும் சிறந்த போராளி தான் ” என்று பேசியிருக்கிறார்.

கேரளா: `பெண்களுக்கு மாதம் ரூ.1000'- புதிய அறிவிப்புகளை வெளியிட்ட பினராயி விஜயன்!

கேரள மாநிலத்தில் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து 2026 ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதை கருத்தில் கொண்டு இப்போதே பல தாராள திட்டங்களை அறிவித்துள்ளார் கேரள முதல்வ... மேலும் பார்க்க

SIR மூலம் வாக்குத் திருட்டு; பா.ஜ.க.வின் திட்டத்தை முறியடிக்க நவம்பர் 2-ல் அனைத்து கட்சி கூட்டம்

தென்காசியில் நடைபெற்ற அரசு நலத்திட்டம் வழங்கும் விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் பேசுகையில், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பிரேமாவிற்கு கலைஞர் கனவு இல்லத் திட்டத்தி... மேலும் பார்க்க

மீண்டும் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல்; 100-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை - ட்ரம்ப் பதில் என்ன?

'நான் நிறுத்திய எட்டாவது போர் இது' - இப்படி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெருமை பீற்றிக்கொண்ட இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர் மீண்டும் ஆரம்பிக்கிறது போலும். இஸ்ரேல் தாக்குதல் நேற்று காசா மீது தாக்குதலை தொடங்கியு... மேலும் பார்க்க

'நாங்கள் தலைமறைவாக இருந்தோமா? உண்மை என்ன தெரியுமா?’ - விளக்கும் சி.டி.ஆர்.நிர்மல் குமார்

தவெக கட்சியின் அன்றாட செயல்பாடுகளை கவனிக்க 28 உறுப்பினர்கள் கொண்ட நிர்வாகக்குழு ஒன்றை விஜய் அறிவித்திருந்தார். அந்த நிர்வாகக்குழுவின் முதல் ஆலோசனைக்கூட்டம் இன்று நடந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் கரூர... மேலும் பார்க்க

"முஸ்லிம் பெண்களை அழைத்து வந்தால் வேலை" - பாஜக முன்னாள் எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு

உத்தரப் பிரதேசத்தில், முஸ்லிம் பெண்களை அழைத்து வரும் இந்து இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக பாஜக முன்னாள் எம்எல்ஏ ஒருவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேச மாநிலம் சித்தார்த்... மேலும் பார்க்க

பீகார் தேர்தல் 2025: `குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை' -இந்தியா கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள்

பீகாரில் அடுத்த மாதம் 6-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.இதை முன்னிட்டு இந்தியா கூட்டணியும், தேசிய ஜனநாயக கூட்டணியும் அனல் பறக்க பிரச்சாரங்களை செய்து வருகின்றன. நேற்று இந்தி... மேலும் பார்க்க