செய்திகள் :

கேரளா: `பெண்களுக்கு மாதம் ரூ.1000'- புதிய அறிவிப்புகளை வெளியிட்ட பினராயி விஜயன்!

post image

கேரள மாநிலத்தில் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து 2026 ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதை கருத்தில் கொண்டு இப்போதே பல தாராள திட்டங்களை அறிவித்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன். அதுபோன்று கேரளா பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைந்ததற்கு ஆளும் சி.பி.எம் கூட்டணியில் உள்ள சி.பி.ஐ கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதையடுத்து அந்த திட்டம் குறித்தும் ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சரவை கூட்டத்தில் இதுபோன்ற பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மாநிலத்தில் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஏழு பேர் கொண்ட அமைச்சரவை துணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த துணைக் குழுவிற்கு பொதுக் கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி தலைவராகவும்,  அமைச்சர்கள் கே.ராஜன், பி.பிரசாத், ரோஷி அகஸ்டின், பி. ராஜீவ், ஏ.கே.சசீந்திரன், கே. கிருஷ்ணன்குட்டி ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். துணைக்குழுவின் ஆய்வு அறிக்கை வெளியிடப்படும் வரை திட்டம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்படும். இந்த விவரம் மத்திய அரசுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்படும்.

P.M Shri
பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைந்த கேரளா

உலகுக்கே முன்மாதிரியாக அதிதீவிர வறுமை ஒழிப்பு நிலையை கையில் எடுத்துள்ளோம். அதன் ஒருபாகமாக பெண்கள் பாதுகாப்புக்காக புதிய திட்டம் தொடங்கப்படும். சமூக பென்சன் பெறாத சமூகத்தில் பின்தங்கிய பெண்கள், திருநங்கைகள் உள்ளிட்டோருக்கு மாதம் 1000 ரூபாய் பெண்கள் பாதுகாப்பு பென்சன் வழங்கப்படும். 35 வயது முதல் 60 வயது வரையிலான 33,34,000 பெண்கள் இதன்மூலம் பயன்பெறுவார்கள். இதற்காக ஆண்டுக்கு 3800 கோடி ரூபாய் செலவிடப்படும். இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் நிதி உதவி வழங்கும் திட்டத்தின்படி 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிகிரி-க்கு பிறகு பயிற்சி வகுப்புகளில் படிப்பவர்களுக்கும், போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் மாதம் 1000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். இதன்மூலம் 5 லட்சம் இளைஞர்கள் பயன்பெறுவார்கள். இதற்காக அரசு ஆண்டுக்கு 600 கோடி செலவிடும்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

குடும்பத்தின் ஐஸ்வர்யம் என்ற அடிப்படையில் பெண்களுக்கு குடும்பஸ்ரீ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது உலகின் மிகப்பெரிய பெண்கள் கூட்டமைப்பாகும். குடும்பஸ்ரீ அமைப்பின் 19470 ஏரியா டெவலப்மெண்ட் சொசைட்டிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக ஆண்டுக்கு 23.40 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். இந்த 3-ம் புதிய திட்டங்களாகும். சமூகத்தில் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு சமூக பாதுகாப்பு பென்சன் மாதம் 1600 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அதை மாதம் 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். நெல் கொள்முதல் விலையாக கிலோவுக்கு 28.20 வழங்கப்படுகிறது. அது 30 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிதி நெருக்கடி தந்தபோதும் இந்த திட்டங்களை எல்லாம் செயல்படுத்துகிறோம். அனைத்து திட்டங்களும் நவம்பர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்" என்றார்.

முதல்வர் விஜய்யா? ADMK உடன் கூட்டணியா? - TVK Arun Raj Interview

கரூர் சம்பவத்துக்கு பிறகு முதல் முதலாக தவெக நிர்வாகிகள் பனையூர் அலுவலகத்தில் கூடி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். விஜய்யின் அடுத்தக்கட்ட பிரசாரப் பயணம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது... மேலும் பார்க்க

துணை ஜனாதிபதி நிகழ்ச்சி; `போலீஸ் விளக்கம் ஏற்க முடியாது; மத்திய அரசு உதவி நாடுவோம்'- வானதி சீனிவாசன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், “துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய திட்டமிடப்பட்டது. ... மேலும் பார்க்க

SIR மூலம் வாக்குத் திருட்டு; பா.ஜ.க.வின் திட்டத்தை முறியடிக்க நவம்பர் 2-ல் அனைத்து கட்சி கூட்டம்

தென்காசியில் நடைபெற்ற அரசு நலத்திட்டம் வழங்கும் விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் பேசுகையில், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பிரேமாவிற்கு கலைஞர் கனவு இல்லத் திட்டத்தி... மேலும் பார்க்க

Trump: 'ரொம்பக் கெடுபிடியானவர்; போரை நாங்கள் தொடர்வோம் என்றார்'- மோடி குறித்து டிரம்ப் பேச்சு

அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி குறித்துப் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.தென் கொரியாவில் ஆசியா - பசிஃபிக் பொருளாதார ஒத்துழைப்புக் கூட்டமைப்பின் ( APEC) தலைவர்கள் கல... மேலும் பார்க்க

மீண்டும் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல்; 100-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை - ட்ரம்ப் பதில் என்ன?

'நான் நிறுத்திய எட்டாவது போர் இது' - இப்படி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெருமை பீற்றிக்கொண்ட இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர் மீண்டும் ஆரம்பிக்கிறது போலும். இஸ்ரேல் தாக்குதல் நேற்று காசா மீது தாக்குதலை தொடங்கியு... மேலும் பார்க்க