செய்திகள் :

துணை ஜனாதிபதி நிகழ்ச்சி; `போலீஸ் விளக்கம் ஏற்க முடியாது; மத்திய அரசு உதவி நாடுவோம்'- வானதி சீனிவாசன்

post image

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், “துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய திட்டமிடப்பட்டது. இதற்காக அங்கு போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டு, கட்சி தொண்டர்கள் கூட மிக தூரத்தில் நிற்க வைக்கப்பட்டனர்.

வானதி சீனிவாசன்

திடீரென 2 நபர்கள் பாதுகாப்பு தடையை மீறி சாலையில் வேகமாக வந்தனர். திட்டமிட்டு நிகழ்ச்சியை சீர்குலைப்பதற்காக வந்தார்கள் என சந்தேகப்படுகிறோம். இந்தப் பிரச்னை தொடர்பாக காவல்துறை அளித்துள்ள விளக்கத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

அந்தப் பகுதி என்பது இதற்கு முன்பாக சி.பி.ஆர் எம்பியாக இருந்த காலத்தில் குண்டு வெடிப்பு நடந்த இடம். கடந்த 2022-ம் ஆண்டு சங்கமேஸ்வரர் கோயில் முன்பாக கார் வெடிகுண்டு விபத்து நடைபெற்ற இடம். நாட்டின் மிகப்பெரிய தலைவர் வரும்போது, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு இருப்பதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

பைக்கில் வந்த இளைஞர்கள்

உண்மையாகவே அவர்கள் மது போதையில் தான் வந்தார்களா அல்லது இதன் பின்னணியில் தீவிரவாத இயக்கம் உள்ளதா என்பதை விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுக அரசு என்பதால் தான் எங்களுக்கு சந்தேகமாக உள்ளது. குற்றவாளிகளின் பெயர்களை கூட காவல்துறை சொல்லவில்லை. அவர்கள் மீதி ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்கள் எப்படி சாதாரணமாக வர முடியும். உண்மையை கண்டறிந்து மக்களுக்கு சந்தேகத்தை போக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

சி.பி. ராதாகிருஷ்ணன்

அவ்வளவு கட்டுப்பாடுகள் இருக்கும்போது, எவ்வளவு தைரியம் இருந்தால் இவர்கள் போவார்கள். காவல்துறை இந்த விஷயத்தை ஏன் திசை திருப்புவது சந்தேகமளிக்கிறது. காவல்துறை உண்மையை வெளி கொண்டு வரவில்லை என்றால், மத்திய அரசின் உதவியை நாடி நடவடிக்கை எடுப்போம்.” என்றார்.

முதல்வர் விஜய்யா? ADMK உடன் கூட்டணியா? - TVK Arun Raj Interview

கரூர் சம்பவத்துக்கு பிறகு முதல் முதலாக தவெக நிர்வாகிகள் பனையூர் அலுவலகத்தில் கூடி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். விஜய்யின் அடுத்தக்கட்ட பிரசாரப் பயணம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது... மேலும் பார்க்க

கேரளா: `பெண்களுக்கு மாதம் ரூ.1000'- புதிய அறிவிப்புகளை வெளியிட்ட பினராயி விஜயன்!

கேரள மாநிலத்தில் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து 2026 ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதை கருத்தில் கொண்டு இப்போதே பல தாராள திட்டங்களை அறிவித்துள்ளார் கேரள முதல்வ... மேலும் பார்க்க

SIR மூலம் வாக்குத் திருட்டு; பா.ஜ.க.வின் திட்டத்தை முறியடிக்க நவம்பர் 2-ல் அனைத்து கட்சி கூட்டம்

தென்காசியில் நடைபெற்ற அரசு நலத்திட்டம் வழங்கும் விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் பேசுகையில், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பிரேமாவிற்கு கலைஞர் கனவு இல்லத் திட்டத்தி... மேலும் பார்க்க

Trump: 'ரொம்பக் கெடுபிடியானவர்; போரை நாங்கள் தொடர்வோம் என்றார்'- மோடி குறித்து டிரம்ப் பேச்சு

அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி குறித்துப் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.தென் கொரியாவில் ஆசியா - பசிஃபிக் பொருளாதார ஒத்துழைப்புக் கூட்டமைப்பின் ( APEC) தலைவர்கள் கல... மேலும் பார்க்க

மீண்டும் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல்; 100-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை - ட்ரம்ப் பதில் என்ன?

'நான் நிறுத்திய எட்டாவது போர் இது' - இப்படி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெருமை பீற்றிக்கொண்ட இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர் மீண்டும் ஆரம்பிக்கிறது போலும். இஸ்ரேல் தாக்குதல் நேற்று காசா மீது தாக்குதலை தொடங்கியு... மேலும் பார்க்க