டிரேடிங்கில் CSK வருகிறாரா வாஷிங்டன் சுந்தர்? - அஸ்வின் பகிர்ந்த தகவல்!
டிரேடிங்கில் CSK வருகிறாரா வாஷிங்டன் சுந்தர்? - அஸ்வின் பகிர்ந்த தகவல்!
வருகின்ற ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. மிகப் பெரிய தோல்வியில் இருந்து அணியை மீட்டெடுக்க நிர்வாகம் சில முக்கிய மாற்றங்களை மேற்கொள்வதாகத் தகவல்கள் வந்திருக்கின்றன.
அதில் குறிப்பாக, குஜராத் அணியைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், சென்னை அணிக்கு டிரேடிங் மூலம் பெறப்படுவதாகக் கூறப்பட்டு வருகிறது.

கடந்த சீசனை கடைசி இடத்தில் முடித்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வலுப்படுத்த திறமையான வீரர்கள் வேண்டுமென ரசிகர்கள் குரலெழுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசியுள்ளார் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல்லில் டிரேடிங், மிட் சீசன் டிரான்ஸ்ஃபர் போன்றவையெல்லாம் அதிகமாக நடப்பது இல்லை என விளக்கமளித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அஸ்வின் வாஷிங்டன் சுந்தரிடமே பேசியதாக கூரியுள்ளார். அஷ்வின் தெரிவித்ததன்படி, வாஷிங்டன் சுந்தர் அவரிடம் கூறியது: "குஜராத்துல போன வருஷம் நான் ஃபுல்லா எல்லா மேட்ச்சும் விளையாடல. ஆனா நான் ரொம்ப என்ஜாய் பண்ணினேன் அண்ணா. இங்க என்னோட கிரிக்கெட்டிங்குமே, கிரிக்கெட்டிங் ஆஸ்பெக்ட்டமே நல்லா வளர்ந்திருக்கு.
பேட்டிங்கும் சரி, பௌலிங்கும் சரி எனக்கு நிறைய ஒர்க் பண்றதுக்கு வால்யூம் கிடைச்சச்சு. பிராக்டீஸ் எல்லாம் அவுட்ஸ்டாண்டிங்கா இருக்கு. ரொம்ப என்ஜாய் பண்ணேன் நான் லாஸ்ட் இயர். அதனால நான் பர்சனலா டீமோட ரொம்ப ஹாப்பி அண்ணா. எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்னு நினைக்கிறேன்.
டிரேடிங் பற்றி நான் எந்த விதமான தொடர்பும் செய்யல. அணி நிர்வாகம் தரப்பில் கம்யூனிகேஷன் பண்ணி இருந்தாங்கன்னா எனக்கு அதை பத்தி தெரியல. நான் வாழ்க்கையில் இப்ப இருக்குற இடத்தில் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்".

.jpg)















