செய்திகள் :

Rohit Sharma: 38 வயதில் நம்பர் 1; ICC தரவரிசையில் முதல் இடம் பிடித்த ரோஹித் சர்மா

post image

ஐசிசி (ICC) ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா முதல் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ரோஹித் சர்மா மொத்தமாக 202 ரன்கள் எடுத்திருந்தார்.

இதில் ஒரு சதமும், ஒரு அரைசதமும் அடங்கும். இதன் மூலம் ரோஹித் சர்மா தொடர் நாயகன் விருதை வென்றார்.

இதன் காரணமாக அவருடைய புள்ளிகள் 781 என்ற அளவிற்கு உயர்ந்துள்ளன.

ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா

இதன் மூலம் ஐசிசி ஒரு நாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்திருக்கிறார்.

தனது 38-வது வயதில் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்து அசத்தி இருக்கும் ரோஹித் சர்மாவிற்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ரோஹித் சர்மா 781 புள்ளிகள் பெற்று உள்ள நிலையில், 764 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தை ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் ஸட்ரான் பிடித்திருக்கிறார்.

745 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தில் சுப்மன் கில் இருக்கிறார்.

டிரேடிங்கில் CSK வருகிறாரா வாஷிங்டன் சுந்தர்? - அஸ்வின் பகிர்ந்த தகவல்!

வருகின்ற ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. மிகப் பெரிய தோல்வியில் இருந்து அணியை மீட்டெடுக்க நிர்வாகம் சில முக்கிய மாற்றங்களை மேற்கொள்வதாகத் தகவல்கள் வந்திருக்கின... மேலும் பார்க்க

Shreyas Iyer: 'ஸ்ரேயஸ் ஐயர் நன்றாக இருக்கிறார்' - சூர்யகுமார் யாதவ் அப்டேட்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியின் போது இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயருக்கு, அலெக்ஸ் கேரி அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முயன்றபோது பலத்த காயம் ஏற்பட்டது. விலா எலும்பில் ஸ்ரேயஸ்... மேலும் பார்க்க

பிரதிகா ராவல் காயம்; அரையிறுதியில் இந்திய மகளிர் கிரிக்கெட்டின் சேவாக் - கம்பேக் தரும் ஷபாலி!

நடப்பு மகளிர் உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் அக்டோபர் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கிறது.முதல் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தும் தென்னாப்பிரிக்காவும் மோதுகின்றன. இரண்டாவது அரையிற... மேலும் பார்க்க

Karun Nair: "எனக்கு சிறப்பான விஷயங்கள் கிடைத்திருக்க வேண்டும்" - ரஞ்சியில் 174* விளாசிய கருண்!

இந்தியாவின் முதல் தர கிரிக்கெட்டில் இரண்டு ஆண்டுகளாக சிறப்பான பங்களிப்பைச் செலுத்தி வருபவர் கருண் நாயர். இரண்டு ரஞ்சி கோப்பை தொடர்களில் 1553 ரன்கள் சேர்த்து கலக்கினார். இதனை தொடர்ந்து இந்திய தேர்வுக் ... மேலும் பார்க்க

Womens World Cup: அரையிறுதிப் போட்டி மழையால் கைவிடப்பட்டால் என்ன நடக்கும்; விதிகள் என்ன கூறுகிறது?

இந்தியா, இலங்கை இணைந்து நடத்திவரும் 13-வது மகளிர் உலகக் கோப்பைத் தொடரின் லீக் சுற்று போட்டிகள் முடிந்துவிட்டன.ஆஸ்திரேலியா (13 புள்ளிகள்), இங்கிலாந்து (11 புள்ளிகள்), தென்னாப்பிரிக்கா (10 புள்ளிகள்), இ... மேலும் பார்க்க

அரையிறுதியில் இந்தியாவுக்குப் பின்னடைவு; காயத்தால் உலகக் கோப்பையிலிருந்து விலகிய பிரதிகா ராவல்!

நடப்பு மகளிர் உலகக் கோப்பைத் தொடரின் லீக் சுற்று போட்டிகள், இந்தியா vs வங்காளதேசம் போட்டியுடன் நேற்று நிறைவடைந்தது.புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்... மேலும் பார்க்க