செய்திகள் :

மீண்டும் மீண்டும்; கோவை அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி - வனத்துறை விசாரணை!

post image

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ஜக்கனாரி பகுதியில் வனப்பகுதி அருகே திருமலைராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. வன எல்லையை ஒட்டியுள்ள அந்தத் தோட்டத்தின் அருகிலேயே வனத்துறை சார்பில் வெட்டப்பட்ட அகழியும் உள்ளது.

யானை

அங்கு சுமார் 15 வயது மதிக்கதக்க ஆண் யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் சொல்லப்பட்டது. அந்தத் தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். யானை அமர்ந்த நிலையில் உயிரிழந்திருந்தது.

மேலும் அகழியை ஒட்டி மின்வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் யானை மின்வேலியில் சிக்கி உயிரிழந்ததா அல்லது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததா என்று வனத்துறையினர் விசாரணை நடத்தினார்கள். வனத்துறையினர் முன்னிலையில் மருத்துவக்குழுவினர் இன்று காலை அந்த யானைக்கு பிரேத பரிசோதனை செய்தனர்.

வனத்துறை விசாரணை

மின்வேலியின் கம்பியில் சிக்கி யானையின் தும்பிக்கை மற்றும் தோல் பகுதிகள் தீயில் கருகியது தெரிந்தது. பிரேத பரிசோதனையில் யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

பொதுவாக மின்வேலிக்கு பேட்டரி மூலம் தான் இணைப்பு கொடுக்க வேண்டும். ஆனால் திருமலைராஜ் நேரடியாக மின் இணைப்பு கொடுத்தது விசாரணையில் கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக வனத்துறையினர் திருமலைராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மின்வேலி

திருமலைராஜ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் கூறியுள்ளனர். இதேபோல கடந்த வாரம் தொண்டாமுத்தூர் அருகே ஒரு யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் என நம்பிய தாய், மகள்; பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மகள் - காவலர்கள் வெறிச்செயல்

ஆந்திராவைச் சேர்ந்த திருமணம் ஆகாத 25 வயது இளம் பெண் தன்னுடைய வளர்ப்புத் தாயிடம், `திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கிரிவலம் சென்று வழிபட வேண்டும்’ என்று சொல்ல, தாயும் மகளும் கடந்த செப்டம்பர்... மேலும் பார்க்க

திண்டுக்கல்: கல்லூரி மாணவி பரிதாப மரணம்; கருவை கலைக்க நாட்டு மருந்து குடித்தாரா? - போலீசார் விசாரணை

திண்டுக்கல்லைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி, கடந்த 24-ஆம் தேதி வயிற்று வலி காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்."17 வயது கல்லூரி மாணவி க... மேலும் பார்க்க

ராணுவ அதிகாரி வேஷம்: `பாலியல் வன்கொடுமை செய்ய நாடகம்' - போலீஸில் சிக்கிய இளைஞர்

பெண் மருத்துவருடன் பழக இராணுவ அதிகாரி போல வேடமிட்ட டெலிவரி முகவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.டெல்லியில் உள்ள சத்தர்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆரவ் மாலிக் (27). இவர் தனியார்... மேலும் பார்க்க

கோவை அதிமுக பிரமுகர் மனைவி கொலை; கைதான ஓட்டுநர் - விசாரணையில் அதிர்ச்சி

கோவை பன்னீர்மடை ஊராட்சி முன்னாள் தலைவரும், அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான கவி சரவணக்குமார், தன் மனைவி மகேஸ்வரி (47) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். தாளியூர் பகுதியைச் சேர்ந்த சுர... மேலும் பார்க்க

ஆணவக்கொலையால் சீரழிந்த இரண்டு குடும்பங்கள் - `சாதி' யால் பறிபோன உயிர்கள்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு இராமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த இளங்கலை பட்டதாரியான ராமசந்திரன் (24) பால் கறவை தொழில் செய்து வந்திருக்கிறார். அப்பா செல்வம் ஆட்டோ ஒட்டுநர். உடல்நிலை சரியில்லாத நிலையில் ... மேலும் பார்க்க

சென்னை: நள்ளிரவில் பைக் டாக்ஸியில் பயணித்த வடமாநில இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - டிரைவர் கைது

வட மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் கணவருடன் சென்னை, மதுரவாயலில் வசித்து வருகிறார். இவர், கடந்த 26.10.2025-ம் தேதி இரவு பைக் டாக்ஸி மூலம் பள்ளிக்காரணைக்கு சென்றிருக்கிறார். பின்னர், அதே பைக... மேலும் பார்க்க