டிரேடிங்கில் CSK வருகிறாரா வாஷிங்டன் சுந்தர்? - அஸ்வின் பகிர்ந்த தகவல்!
'நாங்கள் தலைமறைவாக இருந்தோமா? உண்மை என்ன தெரியுமா?’ - விளக்கும் சி.டி.ஆர்.நிர்மல் குமார்
தவெக கட்சியின் அன்றாட செயல்பாடுகளை கவனிக்க 28 உறுப்பினர்கள் கொண்ட நிர்வாகக்குழு ஒன்றை விஜய் அறிவித்திருந்தார். அந்த நிர்வாகக்குழுவின் முதல் ஆலோசனைக்கூட்டம் இன்று நடந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் கரூர் சம்பவம் குறித்தும் விஜய்யின் அடுத்தக்கட்ட பிரசாரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.

கூட்டத்தை முடித்துவிட்டு வந்த அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், ``அடுத்தக்கட்ட கட்சிப் பணிகள் குறித்தும் தேர்தல் குறித்தும் பேசினோம். இது கட்சியுடைய core கமிட்டி.
அரசியல் கட்சிகளின் பிரசாரத்துக்கு Common SOP வேண்டுமென உயர் நீதிமன்றத்தை அனுகியிருக்கிறோம். இன்னும் 10 நாட்களில் வரைமுறைகளை வகுக்குமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது. அந்த வரைமுறைகள் வந்த பிறகு பிரசாரத்தை தொடர்வோம்.
எங்களுக்கு எவ்வளவு தடைகள் இருந்ததென எல்லாருக்கும் தெரியும். கரூரில் சம்பவம் நடந்த அன்று அதிகாலை 3 மணி வரை நாங்கள் கரூருக்கு வெளியே காத்திருந்தோம். கரூருக்குள் செல்ல எங்களுக்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. எல்லா இடத்திலும் எங்களின் நிர்வாகிகளை தாக்கினார்கள்.
மக்கள் எங்கள் கட்சியின் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். என்ன நடந்தது என்பது மக்களுக்கு தெரியும். 41 பேர் உயிரிழந்ததுதான் எங்களுக்கு மீள முடியாத சோகம். கரூரில் எவ்வளவு போலீஸ் இருந்தார்கள் என எல்லாருக்கும் தெரியும்.

எந்த எந்த இடங்களில் எவ்வளவு போலீஸ் பணியமர்த்தப்பட்டிருந்தனர் என்பதை அவர்களால் கொடுக்க முடியுமா? 2500 டூவிலர்கள் தலைவரின் வாகனத்தை சுற்றி வந்தன. 1மணி நேரத்தில் கடக்க வேண்டிய இடத்தை நாங்கள் கடக்க 7 மணி நேரம் ஆனது. உள்ளரங்கில் நடக்கும் கூட்டத்துக்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்வோம். பொது இடத்தில் நடக்கும் கூட்டத்துக்கு காவல்துறைதானே எல்லா பாதுகாப்புகளையும் செய்து கொடுக்க வேண்டும்? அதற்காகத்தானே நாங்கள் முறையாக அனுமதி கேட்டிருந்தோம்? கரூரில் காவல்துறையினர் எதற்காக தடியடி நடத்தினர்? அமைதியான கூட்டத்தில் எதற்கு தடியடி? இதுசம்பந்தமாக மனித உரிமை ஆணையத்திடம் முறையிட்டிருக்கிறோம்.
நாங்கள் யாரும் தலைமறைவாக இல்லை. எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை. அவ்வளவுதான்.
எங்கள் கட்சியை முடக்க முடியாது. இதை விட பெரிய தடைகளையெல்லாம் நாங்கள் தைரியமாக எதிர்கொள்வோம். SIR சம்பந்தமான அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு செல்வோமா இல்லையா என்பதை அடுத்து அறிவிப்போம். இந்த நிர்வாகக்குழு கூட்டத்தின் முடிவுகள் அத்தனையும் தலைவரிடம் கொடுக்கப்படும்.' என்றார்.

கரூர் சம்பவத்தில் அதிமுகவும் பாஜகவும் தவெகவுக்கு ஆதரவளித்தே? அவர்களுடன் கூட்டணி செல்வீர்களா? எனும் கேள்விக்கு,
'ஒரு மாதத்துக்கு முன்பிருந்த நிலைப்பாட்டில் அப்படியே இருக்கிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை.' என்றார்.















