செய்திகள் :

'நாங்கள் தலைமறைவாக இருந்தோமா? உண்மை என்ன தெரியுமா?’ - விளக்கும் சி.டி.ஆர்.நிர்மல் குமார்

post image

தவெக கட்சியின் அன்றாட செயல்பாடுகளை கவனிக்க 28 உறுப்பினர்கள் கொண்ட நிர்வாகக்குழு ஒன்றை விஜய் அறிவித்திருந்தார். அந்த நிர்வாகக்குழுவின் முதல் ஆலோசனைக்கூட்டம் இன்று நடந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் கரூர் சம்பவம் குறித்தும் விஜய்யின் அடுத்தக்கட்ட பிரசாரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.

சி.டி.ஆர்.நிர்மல் குமார்
சி.டி.ஆர்.நிர்மல் குமார்

கூட்டத்தை முடித்துவிட்டு வந்த அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், ``அடுத்தக்கட்ட கட்சிப் பணிகள் குறித்தும் தேர்தல் குறித்தும் பேசினோம். இது கட்சியுடைய core கமிட்டி.

அரசியல் கட்சிகளின் பிரசாரத்துக்கு Common SOP வேண்டுமென உயர் நீதிமன்றத்தை அனுகியிருக்கிறோம். இன்னும் 10 நாட்களில் வரைமுறைகளை வகுக்குமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது. அந்த வரைமுறைகள் வந்த பிறகு பிரசாரத்தை தொடர்வோம்.

எங்களுக்கு எவ்வளவு தடைகள் இருந்ததென எல்லாருக்கும் தெரியும். கரூரில் சம்பவம் நடந்த அன்று அதிகாலை 3 மணி வரை நாங்கள் கரூருக்கு வெளியே காத்திருந்தோம். கரூருக்குள் செல்ல எங்களுக்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. எல்லா இடத்திலும் எங்களின் நிர்வாகிகளை தாக்கினார்கள்.

மக்கள் எங்கள் கட்சியின் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். என்ன நடந்தது என்பது மக்களுக்கு தெரியும். 41 பேர் உயிரிழந்ததுதான் எங்களுக்கு மீள முடியாத சோகம். கரூரில் எவ்வளவு போலீஸ் இருந்தார்கள் என எல்லாருக்கும் தெரியும்.

சி.டி.ஆர்.நிர்மல் குமார்
சி.டி.ஆர்.நிர்மல் குமார்

எந்த எந்த இடங்களில் எவ்வளவு போலீஸ் பணியமர்த்தப்பட்டிருந்தனர் என்பதை அவர்களால் கொடுக்க முடியுமா? 2500 டூவிலர்கள் தலைவரின் வாகனத்தை சுற்றி வந்தன. 1மணி நேரத்தில் கடக்க வேண்டிய இடத்தை நாங்கள் கடக்க 7 மணி நேரம் ஆனது. உள்ளரங்கில் நடக்கும் கூட்டத்துக்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்வோம். பொது இடத்தில் நடக்கும் கூட்டத்துக்கு காவல்துறைதானே எல்லா பாதுகாப்புகளையும் செய்து கொடுக்க வேண்டும்? அதற்காகத்தானே நாங்கள் முறையாக அனுமதி கேட்டிருந்தோம்? கரூரில் காவல்துறையினர் எதற்காக தடியடி நடத்தினர்? அமைதியான கூட்டத்தில் எதற்கு தடியடி? இதுசம்பந்தமாக மனித உரிமை ஆணையத்திடம் முறையிட்டிருக்கிறோம்.

நாங்கள் யாரும் தலைமறைவாக இல்லை. எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை. அவ்வளவுதான்.

எங்கள் கட்சியை முடக்க முடியாது. இதை விட பெரிய தடைகளையெல்லாம் நாங்கள் தைரியமாக எதிர்கொள்வோம். SIR சம்பந்தமான அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு செல்வோமா இல்லையா என்பதை அடுத்து அறிவிப்போம். இந்த நிர்வாகக்குழு கூட்டத்தின் முடிவுகள் அத்தனையும் தலைவரிடம் கொடுக்கப்படும்.' என்றார்.

சி.டி.ஆர்.நிர்மல் குமார்
சி.டி.ஆர்.நிர்மல் குமார்

கரூர் சம்பவத்தில் அதிமுகவும் பாஜகவும் தவெகவுக்கு ஆதரவளித்தே? அவர்களுடன் கூட்டணி செல்வீர்களா? எனும் கேள்விக்கு,

'ஒரு மாதத்துக்கு முன்பிருந்த நிலைப்பாட்டில் அப்படியே இருக்கிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை.' என்றார்.

முதல்வர் விஜய்யா? ADMK உடன் கூட்டணியா? - TVK Arun Raj Interview

கரூர் சம்பவத்துக்கு பிறகு முதல் முதலாக தவெக நிர்வாகிகள் பனையூர் அலுவலகத்தில் கூடி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். விஜய்யின் அடுத்தக்கட்ட பிரசாரப் பயணம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது... மேலும் பார்க்க

துணை ஜனாதிபதி நிகழ்ச்சி; `போலீஸ் விளக்கம் ஏற்க முடியாது; மத்திய அரசு உதவி நாடுவோம்'- வானதி சீனிவாசன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், “துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய திட்டமிடப்பட்டது. ... மேலும் பார்க்க

கேரளா: `பெண்களுக்கு மாதம் ரூ.1000'- புதிய அறிவிப்புகளை வெளியிட்ட பினராயி விஜயன்!

கேரள மாநிலத்தில் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து 2026 ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதை கருத்தில் கொண்டு இப்போதே பல தாராள திட்டங்களை அறிவித்துள்ளார் கேரள முதல்வ... மேலும் பார்க்க

SIR மூலம் வாக்குத் திருட்டு; பா.ஜ.க.வின் திட்டத்தை முறியடிக்க நவம்பர் 2-ல் அனைத்து கட்சி கூட்டம்

தென்காசியில் நடைபெற்ற அரசு நலத்திட்டம் வழங்கும் விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் பேசுகையில், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பிரேமாவிற்கு கலைஞர் கனவு இல்லத் திட்டத்தி... மேலும் பார்க்க

Trump: 'ரொம்பக் கெடுபிடியானவர்; போரை நாங்கள் தொடர்வோம் என்றார்'- மோடி குறித்து டிரம்ப் பேச்சு

அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி குறித்துப் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.தென் கொரியாவில் ஆசியா - பசிஃபிக் பொருளாதார ஒத்துழைப்புக் கூட்டமைப்பின் ( APEC) தலைவர்கள் கல... மேலும் பார்க்க