செய்திகள் :

பசும்பொன் தேவர் குருபூஜை: பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் காவலர் மாரடைப்பால் உயிரிழந்த சோகம்

post image

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 63 வது குருபூஜை விழா கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் நடைபெறுகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த விழா நேற்று காலை கணபதி ஹோமம் மற்றும் முதல் கால பூஜையுடன் தொடங்கியது. தேவர் நினைவிட அறங்காவலர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் உலக நன்மை வேண்டி பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் மகா யாகசாலை பூஜையுடன் தொடங்கிய இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

விழாவின் முக்கிய நாளான நாளை பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக அமைச்சர்கள், அனைத்து கட்சித் தலைவர்கள் மரியாதை செய்ய உள்ளனர்.

யாகசாலை பூஜை
யாகசாலை பூஜை

தலைவர்களின் வருகை காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கென பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 150 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பாதுகாப்புப் பணிக்கு வந்திருந்த பெண் காவலர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த தலைமைக் காவலர் கலைவாணி
உயிரிழந்த தலைமைக் காவலர் கலைவாணி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அனைத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருபவர் கலைவாணி (41). துணை ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு, பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள தற்காலிக ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் தலைமைக் காவலர் கலைவாணிக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு கமுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கலைவாணி உறங்கச் சென்றுள்ளார். அப்போது கலைவாணிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடன் வந்திருந்த மற்ற காவலர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் காவலர் உயிரிழந்த சம்பவம் போலீஸாரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Apollo: தமிழ்நாட்டின் மிகப்பெரிய பக்கவாத சிகிச்சை வசதி கொண்ட சென்னை அப்போலோ

சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனைகள், பக்கவாதத்திற்கு அதிநவீன சிகிச்சைகளை அளிக்கும் தனது 'அப்போலோ அட்வான்ஸ்ட் ஸ்ட்ரோக் நெட்வொர்க்’ (Apollo Advanced Stroke Network)-ஐ விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது. ... மேலும் பார்க்க

சிறுநீரகப் பிரச்னையுடன் தமிழக விவசாயிகள்; எச்சரிக்கும் சர்வதேச மருத்துவ இதழ்!

அரை நூற்றாண்டுக்கு முன்புவரை நீரிழிவு, புற்றுநோய், ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களை மிக மிகக் குறைவாகத்தான் கண்டு வந்தோம். ஆனால், இப்போதோ இந்த வாழ்வியல் பிரச்னைகளால் பாதி... மேலும் பார்க்க

Grokipedia: விக்கிபீடியாவுக்கு போட்டியாக க்ரோக்பீடியா - எலான் மஸ்கின் திட்டம் என்ன?

அரசியல் முதல் வரலாறு வரை எது பற்றிக் கேட்டாலும் விக்கிபீடியாவில் அனைத்தும் கிடைக்கும். சில நிமிடங்களில் ஒரு தகவல் குறித்த அடிப்படையான தகவல்களை தெரிந்துகொள்ள உலகின் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படும் ... மேலும் பார்க்க

ரூ.15 கோடியில் குதிரை, ரூ.23 கோடியில் எருமை! - புஷ்கர் கண்காட்சியில் கவனம் ஈர்த்த விலங்குகள்

ராஜஸ்தானில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற புஷ்கர் கால்நடை கண்காட்சி, இந்த ஆண்டும் களைகட்டியது. ஆயிரக்கணக்கான கால்நடைகள் பங்கேற்றுள்ள இந்த கண்காட்சியில் முக்கிய நட்சத்திரங்களாக ரூ.15 கோடி மதிப்புள்ள... மேலும் பார்க்க

700 மரங்களுடன் ஜாக்கி ஷெராஃப் பண்ணை வீடு: ஏரி முதல் திறந்த தியேட்டர் வரை சுவாரஸ்ய ரகசியங்கள்!

பாலிவுட் நடிகர்கள் அனைவருக்கும் மும்பைக்கு வெளியில் பண்ணை வீடுகள் உள்ளன. ஷாருக் கானுக்கு மகாராஷ்டிராவின் கடற்கரை நகரமான அலிபாக்கில் பண்ணை வீடு உள்ளது. சல்மான் கானுக்கு மும்பை அருகில் பன்வெல் என்ற இடத்... மேலும் பார்க்க

போலி ஈனோ தயாரிப்பில் ஈடுபட்ட இருவர் கைது - வெளியான அதிர்ச்சித் தகவல்

டெல்லியில் போலி ஈனோ தயாரிக்கும் தொழிற்சாலையை டெல்லி காவல்துறை குற்றப்பிரிவு கண்டுபிடித்துள்ளது. இந்த சோதனையில் 91,000-க்கும் மேற்பட்ட போலி ஈனோ பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி... மேலும் பார்க்க