செய்திகள் :

போலி ஈனோ தயாரிப்பில் ஈடுபட்ட இருவர் கைது - வெளியான அதிர்ச்சித் தகவல்

post image

டெல்லியில் போலி ஈனோ தயாரிக்கும் தொழிற்சாலையை டெல்லி காவல்துறை குற்றப்பிரிவு கண்டுபிடித்துள்ளது. இந்த சோதனையில் 91,000-க்கும் மேற்பட்ட போலி ஈனோ பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சந்தீப் ஜெயின் மற்றும் ஜிதேந்தர் என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியின் இப்ராஹிம்பூர் பகுதியில் போலி அமிலநீக்கி (antacid) தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருவதாக டெல்லி காவல்துறை குற்றப்பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், ஈனோவின் பெயரில் போலியாகத் தயாரிக்கப்பட்ட 91,000-க்கும் மேற்பட்ட பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும், உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள், நிறுவன முத்திரையுடன் கூடிய ரோல்கள், ஸ்டிக்கர்கள், மற்றும் இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

arrest
arrest

இவ்வாறு தயாரிக்கப்படும் போலியான தயாரிப்புகளை உட்கொள்வதால் வயிற்றில் எரிச்சல், அமிலத்தன்மை அதிகரிப்பு, ஒவ்வாமை ஆகியவை ஏற்படக்கூடும்.

இதுபோன்ற போலி தயாரிப்புகள் எந்தவித தரப் பரிசோதனையும் இல்லாமல் தயாரிக்கப்படுவதால், அவற்றுக்கு மருத்துவ அங்கீகாரம் இருக்காது. எனவே பொதுமக்கள் பொருட்களை வாங்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Apollo: தமிழ்நாட்டின் மிகப்பெரிய பக்கவாத சிகிச்சை வசதி கொண்ட சென்னை அப்போலோ

சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனைகள், பக்கவாதத்திற்கு அதிநவீன சிகிச்சைகளை அளிக்கும் தனது 'அப்போலோ அட்வான்ஸ்ட் ஸ்ட்ரோக் நெட்வொர்க்’ (Apollo Advanced Stroke Network)-ஐ விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது. ... மேலும் பார்க்க

சிறுநீரகப் பிரச்னையுடன் தமிழக விவசாயிகள்; எச்சரிக்கும் சர்வதேச மருத்துவ இதழ்!

அரை நூற்றாண்டுக்கு முன்புவரை நீரிழிவு, புற்றுநோய், ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களை மிக மிகக் குறைவாகத்தான் கண்டு வந்தோம். ஆனால், இப்போதோ இந்த வாழ்வியல் பிரச்னைகளால் பாதி... மேலும் பார்க்க

Grokipedia: விக்கிபீடியாவுக்கு போட்டியாக க்ரோக்பீடியா - எலான் மஸ்கின் திட்டம் என்ன?

அரசியல் முதல் வரலாறு வரை எது பற்றிக் கேட்டாலும் விக்கிபீடியாவில் அனைத்தும் கிடைக்கும். சில நிமிடங்களில் ஒரு தகவல் குறித்த அடிப்படையான தகவல்களை தெரிந்துகொள்ள உலகின் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படும் ... மேலும் பார்க்க

ரூ.15 கோடியில் குதிரை, ரூ.23 கோடியில் எருமை! - புஷ்கர் கண்காட்சியில் கவனம் ஈர்த்த விலங்குகள்

ராஜஸ்தானில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற புஷ்கர் கால்நடை கண்காட்சி, இந்த ஆண்டும் களைகட்டியது. ஆயிரக்கணக்கான கால்நடைகள் பங்கேற்றுள்ள இந்த கண்காட்சியில் முக்கிய நட்சத்திரங்களாக ரூ.15 கோடி மதிப்புள்ள... மேலும் பார்க்க

700 மரங்களுடன் ஜாக்கி ஷெராஃப் பண்ணை வீடு: ஏரி முதல் திறந்த தியேட்டர் வரை சுவாரஸ்ய ரகசியங்கள்!

பாலிவுட் நடிகர்கள் அனைவருக்கும் மும்பைக்கு வெளியில் பண்ணை வீடுகள் உள்ளன. ஷாருக் கானுக்கு மகாராஷ்டிராவின் கடற்கரை நகரமான அலிபாக்கில் பண்ணை வீடு உள்ளது. சல்மான் கானுக்கு மும்பை அருகில் பன்வெல் என்ற இடத்... மேலும் பார்க்க

பசும்பொன் தேவர் குருபூஜை: பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் காவலர் மாரடைப்பால் உயிரிழந்த சோகம்

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 63 வது குருபூஜை விழா கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் நடைபெறுகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த விழா நேற்று காலை கணபதி ஹோமம் மற்றும் முதல் கால பூஜையுடன் தொடங்கியது.... மேலும் பார்க்க