செய்திகள் :

Suriya: ``ஒரு அண்ணனாக, அதற்கு நான் ரவி தேஜாவுக்கு நன்றி சொல்கிறேன்!'' - சூர்யா

post image

ரவி தேஜாவின் 75-வது திரைப்படமான ‘மாஸ் ஜதாரா’ திரைப்படம் இம்மாதம் 31-ம் தேதி திரைக்கு வருகிறது. படத்தில் கதாநாயகியாக ஶ்ரீலீலா நடித்திருக்கிறார்.

ரவி தேஜாவின் ஆஸ்தான மாஸ் மசாலா பார்முலாவில் உருவாகியிருக்கும் இந்த ‘மாஸ் ஜதாரா’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக நடிகர் சூர்யா கலந்துகொண்டு ரவி தேஜா குறித்து பேசியுள்ளார்.

Mass Jathara
Mass Jathara

சூர்யா பேசுகையில்,
“இன்று நான் ரவி தேஜாவின் ரசிகராக பேசுகிறேன். ஃபேன் பாயாக நான் இங்கு சில விஷயங்களைப் பகிர விரும்புகிறேன்.

கார்த்தியும் ஜோதிகாவும் இங்கு இருந்திருந்தால், நான் சொல்வதைவிட அவர்கள் ரவி தேஜாவைப் பற்றி அதிகமாகச் சொல்வார்கள்.

நான் கார்த்தியிடமும் ஜோதிகாவிடமும் ரவி தேஜாவின் பெயரை எடுத்தாலே, அவர்கள் பல விஷயங்களைப் பகிர்வார்கள். ரவி தேஜாவுடனான அவர்களுடைய அனுபவங்களையும் அவர்கள் சொல்லிவிடுவார்கள்.

அதீத எனர்ஜிக்கு ஒரு மனித உருவம் இருந்தால், அதுதான் ரவி தேஜா என ஒரு ரசிகராக நான் இதை சொல்வேன். இவர்களை இத்தனை ஆண்டுகளாக கொண்டாடும் ரசிகர்களுக்கும் நான் மரியாதை தருகிறேன்.

சாதாரண மனிதரின் வாழ்க்கையை திரையில் பெரிதளவில் கொண்டு வருபவர் ரவி தேஜா. அப்படியான கதாபாத்திரங்களுக்கு இவரைப் போல வேறு யாராலும் நியாயம் செய்ய முடியாது.

சிரிப்புதான் சிறப்பானதாலும் கடினமானதுமான கலை வடிவம். இத்தனை ஆண்டுகள் பார்வையாளர்களை எண்டர்டெயின் செய்வதற்கு தனக்கென ஒரு தனி வழியையும் வைத்திருக்கிறார் ரவி தேஜா.

பல வருடங்களாக மில்லியன் கணக்கான ரசிகர்களை மனதாரச் சிரிக்கவைக்கிறார் ரவி தேஜா.

Suriya - Mass Jathara
Suriya - Mass Jathara

அதை மீண்டும் மீண்டும் செய்வது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது.
கார்த்திக்கு ‘சிறுத்தை’ (ரவி தேஜா நடித்த ‘விக்ரமர்குடு’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்குதான் ‘சிறுத்தை’) மிகவும் முக்கியமான திரைப்படம்.

ஒரு அண்ணனாக, அதற்காக நான் அவருக்கு நன்றி சொல்கிறேன். தமிழ் ஆடியன்ஸையும் அவர் தொடர்ந்து எண்டர்டெயின் செய்து வருகிறார். சிலருக்கே மட்டுமே இப்படியான திறமைகள் இருக்கும்.

ரஜினி சாரிடம் இந்த காமெடி டைமிங் இருக்கும். பச்சன் சாரிடமும் அது இருக்கும்.
அவருடைய ரசிகராக நீங்களும் எங்களை எண்டர்டெயின் செய்து வருகிறீர்கள். இந்த மாதம் 31-ம் தேதி ரவி தேஜாதான்!” என்றார்.

வள்ளுவன்: ``சிவகாசி; ஒரு காட்சிக்காக என் மீதும், விஜய் மீதும் வழக்கு பதிவு செய்தார்கள்" - பேரரசு

விஷால் நடிப்பில் வெளியான 'நான் சிவப்பு மனிதன்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்த தெலுங்கு நடிகரான சேத்தன் சீனு நடித்திருக்கும் படம் வள்ளுவன். இயக்குநர் சங்கர் சாரதி இயக்கத்தில் உருவாக... மேலும் பார்க்க

Mass Jathara: `சமீபகாலமாக உங்களை எரிச்சல் அடையச் செய்திருக்கிறேன்; ஆனால், இம்முறை!' - ரவி தேஜா உறுதி

ரவி தேஜா நடித்திருக்கும் `மாஸ் ஜதாரா' திரைப்படம் வருகிற 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இது ரவி தேஜாவின் 75-வது திரைப்படம். `தமாகா' படத்தைத் தொடர்ந்து இந்த மாஸ் மசாலா தெலுங்கு படத்தில் ஶ்ரீலீல... மேலும் பார்க்க

வள்ளுவன்: ``வெள்ளையாக இருப்பதால் வாய்ப்பு மறுக்கப்பட்டேன்" - நடிகர் சேத்தன் சீனு உருக்கம்

விஷால் நடிப்பில் வெளியான 'நான் சிவப்பு மனிதன்' படத்தில் நடித்த சேத்தன் சீனு நடித்திருக்கும் படம் வள்ளுவன். இயக்குநர் சங்கர் சாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தை ஆறுபடை புரொடக்ஷன் நிறுவனம... மேலும் பார்க்க

Vijay: "சண்டக்கோழி விஜய்க்காக எழுதின கதை; ஆனா" - நடிகர் விஷால் ஷேரிங்

2005-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின் நடிப்பில் வெளியான 'சண்டக்கோழி' படம் ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு 'சண்டக்கோழி 2' வெளியானது.இந்நிலையில் விஷால் தனது யூடியூப் ச... மேலும் பார்க்க

Bison: ``உன் படைப்பைப் பார்த்து பெருமைப்படுகிறேன்'' - மாரிசெல்வராஜை பாராட்டிய மணிரத்னம்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையில் வெளியாகியிருக்கும் படம் 'பைசன்'. இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது... மேலும் பார்க்க

பைசன்: 'இயக்குநர் திலகம்' பட்டம் வழங்கிய வைகோ; `அன்புத் தம்பி மாரி செல்வராஜ்’ - பாராட்டிய துரை வைகோ

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள சாதிய சமூக ஏற்றத்தாழ்வுகளை மீறி, தடைகளை உடைத்து சாதிக்கும் இளைஞரின் ஸ்போர்ட்ஸ் திரில்லர் 'பைசன்' படத்தை அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் பலரும் ப... மேலும் பார்க்க