செய்திகள் :

தாசில்தாரைக் கடித்த வெறிநாய்கள்; களத்தில் இறங்கிய கலெக்டர்; அலுவலர்களுக்கு நோட்டீஸ்

post image

தாசில்தார் ஒருவரை வெறி நாய் கடித்த சம்பவத்தால் கலெக்டரே களத்தில் இறங்கி அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவது சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேசியதாஸ்

சிவகங்கையில் வசிக்கும் மாவட்ட தேர்தல் பிரிவு தாசில்தார் மேசியதாஸ் நடைபயிற்சி முடித்துவிட்டு, திருப்பத்தூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவரைத் துரத்தி வந்த வெறிநாய்கள், அவரது காலை கடித்து குதறியது, காயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனே சிவவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் நகர் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்த தகவலறிந்த கலெக்டர் பொற்கொடி சிவகங்கையிலுள்ள தெருக்களில் உடனே ஆய்வு செய்தார்.

கலெக்டர் பொற்கொடி

அப்போது பல இடங்களில் வெறி நாய்கள் சுற்றி வந்ததும், ஏற்கெனவே குழந்தைகள், பெரியவர்களை நாய்கள் கடித்துள்ளதும் விசாரனையில் தெரியவந்தது.

இதையடுத்து, நகராட்சி ஆணையர் அசோக்குமாருக்கு போன் செய்தபோது அவர் எடுக்கவிக்லையாம்.

அதோடு அவருக்கும், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் நந்தகோபாலுக்கும் அனுப்பியுள்ள நோட்டீசில் 'மனிதர்கள் மீது தெரு நாய்கள் தாக்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க பலமுறை வலியுறுத்தியும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை, இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன? உங்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது, அதற்கான விளக்கத்தை 3 தினங்களுக்குள் அளிக்கவேண்டும்' என விளக்கம் கேட்டுள்ளார்.

கலெக்டரின் நோட்டீஸ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிவகங்கை நகராட்சி அலுவலர்கள் தரப்பில், "நகரிலுள்ள 200 தெரு நாய்களில் 135 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்திவிட்டோம், மீதியுள்ள நாய்களுக்கு தடுப்பூசி போட தயாராகி வருகிறோம், தற்போது தாசில்தாரை கடித்த இரு நாய்களையும் பிடித்து தடுப்பூசி செலுத்திவிட்டோம்" என்று தெரிவித்துள்ளனர்.

வெறிநாய்

"நாய்களின் தொல்லையாலும், வெறி நாய்க்கடியாலும் பொதுமக்கள் கதறும்போதெல்லாம் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம், தங்கள் அலுவலர் பாதிக்கப்பட்டவுடன் விரைந்து நடவடிக்கை எடுக்கிறார்கள், சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விளக்கம் கேட்கிறார்கள்" என்று சிவகங்கை மக்கள் பேசி வருகிறார்கள்.

மும்பை: மாநகராட்சி தேர்தல்; `சுயமாக முடிவெடுக்கலாம்!’ - காங்கிரஸை கைகழுவ தயாராகும் உத்தவ்?

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் ஜனவரி மாதம் மாநகராட்சி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. ஏற்கனவே மாநகராட்சி வார்டுகள் குலுக்கல் முறையில் எது பெண்களுக்கானது என்பத... மேலும் பார்க்க

Mexico: அதிபர் மீது அதிருப்தி; மெக்சிகோவிலும் வெடித்த Gen Z போராட்டம் - ஏன், என்ன நடந்தது?

இந்தோனேசியா, வங்கதேசம், மடகாஸ்கர் மற்றும் நேபாளத்தில் ஆளும் அரசாங்கத்தின் பல்வேறு நிர்வாகக் கோளாறுகளை எதிர்த்து மிகப் பெரிய 'ஜென் Z' போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்கள் அனைத்தும் அந்தந்த நாடுக... மேலும் பார்க்க

Pa.Ranjith:``கம்யூனிஸ்ட்டுகள் ஏன் அம்பேத்கரை வாசிக்கவில்லை?" - பா.ரஞ்சித் முன்வைக்கும் குற்றச்சாட்டு

நீலம் பண்பாட்டு மையம் சார்பில், சென்னை தேனாம்பேட்டையில் அறிஞர் ராஜ் கௌதமன் நினைவு விருது வழங்கும் விழா நடைபெற்றது. 2025-ம் ஆண்டுக்கான அறிஞர் ராஜ் கெளதமன் நினைவு விருது ஆய்வாளர், எழுத்தாளர் வ.கீதா அவர்... மேலும் பார்க்க

கேரளா: `என்னுடைய மகன் மன அழுத்தத்தில் இருந்தான்' - SIR பணிச்சுமையால் BLO அதிகாரி தற்கொலை

பிகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை, நாட்டின் பிற மாநிலங்களிலும் விரிவுபடுத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்திருக்கிறது.அதன்படி, அடுத்த ஆண... மேலும் பார்க்க

தேமுதிக: ``28 லட்சம் மக்கள் கலந்துகொண்ட மாநாடு அசம்பாவிதம் நடந்ததா?'' -தேனியில் பிரேமலதா விஜயகாந்த்

தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 'உள்ளம் தேடி! இல்லம் நாடி!' என்ற பெயரில் தேனி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது வான வேடிக்கைகளுடன் மேளம் முழங்க தேவராட்டத்துடன் பிரேமலதா ... மேலும் பார்க்க