செய்திகள் :

Pa.Ranjith:``கம்யூனிஸ்ட்டுகள் ஏன் அம்பேத்கரை வாசிக்கவில்லை?" - பா.ரஞ்சித் முன்வைக்கும் குற்றச்சாட்டு

post image

நீலம் பண்பாட்டு மையம் சார்பில், சென்னை தேனாம்பேட்டையில் அறிஞர் ராஜ் கௌதமன் நினைவு விருது வழங்கும் விழா நடைபெற்றது. 2025-ம் ஆண்டுக்கான அறிஞர் ராஜ் கெளதமன் நினைவு விருது ஆய்வாளர், எழுத்தாளர் வ.கீதா அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ``அம்பேத்கரை ஏன் கம்யூனிஸ்ட்டுகள் வாசிக்கவில்லை என்ற கேள்வி எனக்குள் இருந்துகொண்டே இருக்கிறது.

பா.ரஞ்சித் - தோழர் வ.கீதா
பா.ரஞ்சித் - தோழர் வ.கீதா

ஆரம்ப காலகட்டங்களிலேயே அம்பேத்கரை கம்யூனிஸ்ட்டுகள் சரியாக வாசித்திருந்தால், இந்த மண்ணுக்கான சரியான புரிதலுடன்கூடிய அரசியலை ஏற்படுத்தியிருக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

உலகளவில் கம்யூனிஸ்ட் சித்தாந்தம்தான் மிக முக்கியமான அரசியலாக இருக்கிறது என நம்புகிறேன். ஆரம்பத்திலேயே அம்பேத்கரையும் கம்யூனிஸ்ட் தோழர்கள் கையில் எடுத்திருந்தால், இந்தியாவிலும் நவம்பர் புரட்சி ஏற்பட்டிருக்கும்.

அதன் போதாமைகளையும், அம்பேத்கரை வாசிப்பதைத் தடுக்கும் கூறுகளையும் நான் யோசித்திருக்கிறேன். ஆரம்பத்தில் அவர்களுக்குள் நிகழ்ந்த கருத்து வேறுபாடுகள்தான் காரணமா என்றும் சிந்தித்திருக்கிறேன்.

தலித் கம்யூனிஸ்ட்டுகள் அம்பேத்கரை வாசித்திருக்கிறார்கள் என்பதையும், தலித் அல்லாத கம்யூனிஸ்ட்டுகள் அம்பேத்கரை வாசிப்பதில் தயக்கம் காண்பித்திருக்கிறார்கள் என்பதையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். அதே நேரம் தலித்தாக இருப்பதால் மட்டுமே அம்பேத்கரிஸ்ட்டாக மாறிவிட முடியாது.

பா.ரஞ்சித்
பா.ரஞ்சித்

அம்பேத்கர் என்ன விரும்பினார்... என்ன சொல்லியிருக்கிறார் என்பதையெல்லாம் வாசித்து, புரிந்து, எடுத்துச் செல்வதில்தான் அம்பேத்கரிஸ்ட்டாக மாறமுடியும். மேலும், தன்னை அம்பேத்கரிஸ்ட்டாக அறிவித்துக்கொள்வதில் நிறைய தயக்கம் தலித்துகளிடமே இருக்கிறது.

குறிப்பாக தமிழ்நாட்டின் அரசியல் சூழலில் இருக்கும் தலித்துகளிடம் இருக்கிறது. இப்போது வ.கீதா அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டதற்கும் விமர்சனங்கள் வரும். விமர்சனங்கள்தான் நம்மை முன்னேற்றும். அந்த வகையில் விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது" என்றார்.

மும்பை: மாநகராட்சி தேர்தல்; `சுயமாக முடிவெடுக்கலாம்!’ - காங்கிரஸை கைகழுவ தயாராகும் உத்தவ்?

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் ஜனவரி மாதம் மாநகராட்சி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. ஏற்கனவே மாநகராட்சி வார்டுகள் குலுக்கல் முறையில் எது பெண்களுக்கானது என்பத... மேலும் பார்க்க

Mexico: அதிபர் மீது அதிருப்தி; மெக்சிகோவிலும் வெடித்த Gen Z போராட்டம் - ஏன், என்ன நடந்தது?

இந்தோனேசியா, வங்கதேசம், மடகாஸ்கர் மற்றும் நேபாளத்தில் ஆளும் அரசாங்கத்தின் பல்வேறு நிர்வாகக் கோளாறுகளை எதிர்த்து மிகப் பெரிய 'ஜென் Z' போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்கள் அனைத்தும் அந்தந்த நாடுக... மேலும் பார்க்க

தாசில்தாரைக் கடித்த வெறிநாய்கள்; களத்தில் இறங்கிய கலெக்டர்; அலுவலர்களுக்கு நோட்டீஸ்

தாசில்தார் ஒருவரை வெறி நாய் கடித்த சம்பவத்தால் கலெக்டரே களத்தில் இறங்கி அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவது சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.மேசியதாஸ்சிவகங்கையில் வசிக்கும் மாவட்ட தேர... மேலும் பார்க்க

கேரளா: `என்னுடைய மகன் மன அழுத்தத்தில் இருந்தான்' - SIR பணிச்சுமையால் BLO அதிகாரி தற்கொலை

பிகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை, நாட்டின் பிற மாநிலங்களிலும் விரிவுபடுத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்திருக்கிறது.அதன்படி, அடுத்த ஆண... மேலும் பார்க்க

தேமுதிக: ``28 லட்சம் மக்கள் கலந்துகொண்ட மாநாடு அசம்பாவிதம் நடந்ததா?'' -தேனியில் பிரேமலதா விஜயகாந்த்

தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 'உள்ளம் தேடி! இல்லம் நாடி!' என்ற பெயரில் தேனி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது வான வேடிக்கைகளுடன் மேளம் முழங்க தேவராட்டத்துடன் பிரேமலதா ... மேலும் பார்க்க