செய்திகள் :

குன்னூர்: திடீரென கலைந்த தேன்கூடு; அலறியடித்த பண்ணை பணியாளர்கள்!

post image

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகில் உள்ள வண்டிச்சோலை பகுதியில் வனத்துறையின் நாற்றாங்கால் செயல்பட்டு வருகிறது. பல்வேறு வகையான தாவர நாற்றுகளை உற்பத்தி செய்து விநியோகம் செய்து வருகின்றனர். நாற்று உற்பத்தியில் பெண் பணியாளர்களை ஈடுபடுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இன்று காலை 6 பெண் பணியாளர்கள் வழக்கமான பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். அருகில் இருந்த தேன்கூடு திடீரென கலைந்த நிலையில்,

Rep images AI

நூற்றுக்கணக்கான தேனீக்கள் வெளியேறி அருகில் இருந்த பண்ணை பணியாளர்களை கொட்டியுள்ளன. வலியால் பெண்கள் அலறித்துடிப்பதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் பணியாளர்கள், தேனீக்களிடம் சிக்கிய பெண்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து தெரிவித்த வனத்துறையினர், " 6 பெண்களை தேனீக்கள் கொட்டியுள்ளன.‌ லேசான பாதிப்பு ஏற்பட்ட 5 பெண்களுக்கும் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட பெண்கள்

தனமணி என்ற பெண்ணிற்கு பாதிப்பு சற்று அதிகமாக காணப்படுவதால் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உரிய நேரத்தில் இவர்கள் மீட்கப்பட்டதால் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கவில்லை. இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் " என்றனர்.

திண்டுக்கல்: மதுரை நான்கு வழிச் சாலையில் கவிழ்ந்த இராட்சத லாரி; போக்குவரத்து பாதிப்பு | Photo Album

இராட்சச லாரி கவிழ்ந்ததில்இராட்சச லாரி கவிழ்ந்ததில்இராட்சச லாரி கவிழ்ந்ததில்இராட்சச லாரி கவிழ்ந்ததில்இராட்சச லாரி கவிழ்ந்ததில்இராட்சச லாரி கவிழ்ந்ததில்இராட்சச லாரி கவிழ்ந்ததில்இராட்சச லாரி கவிழ்ந்ததில்... மேலும் பார்க்க

திண்டுக்கல்: கொடை ரோடு அருகே ராட்சச இறக்கை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து; எப்படி நிகழ்ந்தது?

திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு அருகே மதுரை-திண்டுக்கல் தேசிய நான்கு வழிச்சாலையில் தூத்துக்குடியில் இருந்து மகாராஷ்டிராவை நோக்கி இராட்சச காற்றாலை இறக்கையை ஏற்றி கொண்டு கன்டெய்னர் லாரி சென்றுகொண்டிருந்த... மேலும் பார்க்க

சத்தீஸ்கர்: பயணிகள் ரயில், சரக்கு ரயிலில் மோதி 11 பேர் பலி - என்ன நடந்தது?

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பிலாஸ்பூர்-கட்னி பிரிவில் லால் காடன் பகுதிக்கு அருகே செவ்வாய்க்கிழமை (நவ 4) கோர்பா பயணிகள் ரயில், நின்றுக்கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியதில் 11 பேர... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் சிறுத்தை வந்தது எப்படி? - விக்கிரவாண்டி டோல்கேட்டில் உயிரிழந்து கிடந்ததால் அதிர்ச்சி

விழுப்புரம் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை விக்கிரவாண்டி டோல்கேட்டுக்கு அருகே, இன்று அதிகாலை வராக நதியின் மேல் அமைந்திருக்கும் பாலத்தில் சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடந்தது. அதைப் பார்த்த வாகன ஓட்டிகள், வ... மேலும் பார்க்க

தெலங்கானா கோர விபத்து: ஜல்லிகளில் புதைந்த பேருந்து; 20 பயணிகள் பலி - முதல்வர் இரங்கல்

தெலுங்கானா மாநிலம் தந்தூரிலிருந்து ஹைதராபாத் நோக்கி நேற்று இரவு தெலங்கானா அரசு பேருந்து புறப்பட்டது. அந்தப் பேருந்தில் 70 பயணிகள் பயணித்தனர். பேருந்து செவெல்லா மண்டலத்தில் உள்ள மிர்சாகுடா கிராமத்திற்க... மேலும் பார்க்க

கரூர்: எம் சாண்ட ஏற்றிச்சென்ற லாரி விபத்து; வடமாநில தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்; நடந்தது என்ன?

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள கோடந்தூரில் செயல்பட்டுவரும் அரவிந்த் புளூ மெட்டல் கல்குவாரியில் தங்கி 20-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில், இன்று அதிகாலை 5 ம... மேலும் பார்க்க