செய்திகள் :

தெலங்கானா கோர விபத்து: ஜல்லிகளில் புதைந்த பேருந்து; 20 பயணிகள் பலி - முதல்வர் இரங்கல்

post image

தெலுங்கானா மாநிலம் தந்தூரிலிருந்து ஹைதராபாத் நோக்கி நேற்று இரவு தெலங்கானா அரசு பேருந்து புறப்பட்டது. அந்தப் பேருந்தில் 70 பயணிகள் பயணித்தனர்.

பேருந்து செவெல்லா மண்டலத்தில் உள்ள மிர்சாகுடா கிராமத்திற்கு அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிரே ஜல்லி கற்களை ஏற்றி வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டது.

பயணிகளில் அலறல் சத்தம் கேட்டு அந்தப் பகுதியில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவலளித்தனர். உடனே சம்பவ இடத்துக்கு வந்த மீட்புக் குழுவினர் பொது மக்களின் உதவியுடன் பயணிகளை மீட்டனர்.

தெலங்கானா கோர விபத்து
தெலங்கானா கோர விபத்து

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை, ``மோதலின் தாக்கம் மிகவும் கடுமையானதாக இருந்ததால், லாரியின் ஜல்லிக்கற்கள் பேருந்து மீது விழுந்து, பல பயணிகள் கீழே சிக்கிக்கொண்டனர்.

இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இறந்தவர்களில் RTC பேருந்து, லாரி ஓட்டுநர்கள், தாயுடன் 10 மாத குழந்தை உட்பட பலர் உயிரிழந்திருக்கின்றனர்.

அவசரகாலக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூன்று JCB இயந்திரங்களைப் பயன்படுத்தி உள்ளே சிக்கியவர்களை மீட்டனர். காயமடைந்தவர்கள் செவெல்லா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலை இன்னும் மோசமாக இருப்பதால், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்.

வார இறுதி நாள் என்பதால் மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள் என சுமார் 70 பயணிகள் அந்தப் பேருந்தில் சென்றதாக முதற்கட்ட தகவலில் தெரியவந்திருக்கிறது.

தெலங்கானா கோர விபத்து
தெலங்கானா கோர விபத்து

இந்த துயரச் சம்பவம் குறித்து தெலுங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி, `` இந்த துயர சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. உடனடி நிவாரண நடவடிக்கைகளை உறுதி செய்யுமாறு தலைமைச் செயலாளர் கே. ராமகிருஷ்ணா ராவ் மற்றும் காவல்துறை இயக்குநர் ஜெனரல் பி. சிவதர் ரெட்டி ஆகியோருக்கு உத்தரவிட்டிருக்கிறேன்.

காயமடைந்த அனைவரையும் தாமதமின்றி சிறந்த மருத்துவ சிகிச்சைக்காக ஹைதராபாத்திற்கு மாற்றுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டிருக்கிறேன்.

அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளிடம் பேசி, மீட்புப் பணிகளில் உதவ அனைத்து அரசுத் துறைகளும் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினேன்.

முடிந்தவரை பல உயிர்களைக் காப்பாற்ற போதுமான ஆம்புலன்ஸ்கள், அவசர மருத்துவக் குழுக்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைய வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறேன். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றார்.

கரூர்: எம் சாண்ட ஏற்றிச்சென்ற லாரி விபத்து; வடமாநில தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்; நடந்தது என்ன?

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள கோடந்தூரில் செயல்பட்டுவரும் அரவிந்த் புளூ மெட்டல் கல்குவாரியில் தங்கி 20-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில், இன்று அதிகாலை 5 ம... மேலும் பார்க்க

ஆந்திரா: வெங்கடேஷ்வரா கோயிலில் கூட்ட நெரிசலில்; பெண்கள், குழந்தைகள் உட்பட 10 பேர் பலி; என்ன நடந்தது?

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகில் உள்ள காசிபுக்கா என்ற இடத்தில் இருக்கும் வெங்கடேஷ்வரா என்ற கோயிலில் நேற்று ஏகாதசி பண்டிகை கொண்டாடப்பட்டது.இதையடுத்து கோயிலில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடியிருந்தனர்... மேலும் பார்க்க

கரூர் சம்பவம்: உயிரிழந்தர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவக் காப்பீடு; ஆறுதல் சொன்ன விஜய்

கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி விஜய் மேற்கொண்ட பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், விஜய் தரப்பில் உயிரிழந்த குடும்பத்தினரை வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல்படுத்தினார... மேலும் பார்க்க

ஆந்திரா பேருந்து தீ விபத்து: போதையில் பைக் ஓட்டிய இளைஞர்கள்தான் காரணமா? - போலீஸ் சொல்வது என்ன?

ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்ன தெகுரு என்ற இடத்தில் பெங்களூருவை நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று அதிகாலையில் தீப்பிடித்து எரிந்து 20 பேர் உயிரிழந்தனர். பலர் பஸ்சில் இருந்து ஜன்னல் ... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல் பலி: நீதிமன்றத்தில் சிபிஐ ஆவணங்கள் தாக்கல் - நகல் கேட்டு தவெக-வினர் மனு!

கரூரில் கடந்த மாதம் 27 - ம் தேதி வேலுச்சாமிபுரத்தில் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் வெளியான சம்பவம் தொடர்பாக, டெல்லி உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சி... மேலும் பார்க்க

ஆந்திரா பேருந்து தீ விபத்து: `ஏ.சி. பஸ் என்பதால்’ - கோர விபத்தை விளக்கும் மீட்கப்பட்ட பயணிகள்

தேசிய நெடுஞ்சாலை 44-ல் ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த தனியார் வால்வோ பேருந்து ஒன்று கர்னூல் பகுதியில் பைக் மீது மோதியதில் ஏற்பட்ட திடீர் விபத்தால், பேருந்து முழுமையாகத் தீ பற்றி எர... மேலும் பார்க்க