செய்திகள் :

`புது ருசி, புது அனுபவம்' - சீனாவில் பிரபலமாகும் ` கரப்பான் பூச்சி காஃபி' - என்ன விலை தெரியுமா?

post image

உலகம் முழுவதும் காபி பிரியர்கள் விதவிதமான சுவைகளில் காபி குடித்திருப்பார்கள்., ஆனால் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு புதிய வகை காபி, கேட்பவர்களையே முகம் சுளிக்க வைத்துள்ளது. பீஜிங்கில் 'கரப்பான் பூச்சி காஃபி' (Cockroach Coffee) என்ற காஃபி விற்பனைக்கு வந்துள்ளது.

பொதுவாக காபியின் மீது சாக்லேட் பவுடர் அல்லது கிரீம் தூவி அலங்கரிப்பார்கள். ஆனால், பீஜிங்கில் உள்ள ஒரு பிரபலமான கடையில் (Insect Museum) விற்கப்படும் இந்த காஃபியில், கரப்பான் பூச்சி தூவப்படுகிறது.

கேட்பதற்கே விசித்திரமாக இருக்கும் இந்த காபியின் விலை ஒரு கப்புக்கு 45 யுவான் (இந்திய மதிப்பில் இது சுமார் 520 ரூபாய்) ஆகும்.. கடந்த ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த காஃபி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீனாவில் பிரபலமாகும் ` கரப்பான் பூச்சி காஃபி'
சீனாவில் பிரபலமாகும் ` கரப்பான் பூச்சி காஃபி'

இதை குடித்த வாடிக்கையாளர்கள் இதன் சுவை குறித்து கூறுகையில் "இது வழக்கமான காஃபி சுவையில் இல்லாமல், கருகிய வாசனையுடனும், லேசான புளிப்பு சுவையுடனும் இருக்கிறது," என்று தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அந்த கடையின் ஊழியர் ஒருவர் கூறுகையில் "நாங்கள் ஒரு பூச்சி அருங்காட்சியகத்தை நடத்தி வருகிறோம். எனவே எங்கள் தீம் மற்றும் சூழலுக்கு ஏற்றவாறு உணவு வகைகளை வழங்க நினைத்தோம்.

அதனால் தான் இந்த கரப்பான் பூச்சி காஃபியை அறிமுகம் செய்தோம். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது" என்று கூறியுள்ளார்.

கரப்பான் பூச்சிகள் என்றாலே நோய்களை பரப்பக்கூடியவை என்ற அச்சம் மக்கள் மத்தியில் இருக்கும். ஆனால், இந்த காபியில் பயன்படுத்தப்படும் பூச்சிகள் உண்பதற்கேற்ற வகையில் பிரத்யேகமாக வளர்க்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட பின்னரே பயன்படுத்தப்படுவதாக கடையின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Golden Toilet: ``101 கிலோ தங்கத்தில் டாய்லெட்'' - ரூ.100 கோடிக்கு வாங்கியவர் என்ன சொல்கிறார்?

நியூயார்க்கில் நடந்த ஒரு ஏலத்தில், 18 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட டாய்லெட் கோப்பை, சுமார் 12.1 மில்லியன் டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.100 கோடி) விற்பனையாகியுள்ளது.பிரபல இத்தாலிய கலைஞர் மௌ... மேலும் பார்க்க

ஆந்திரா: பருவமடைந்ததால் மகளை வீட்டில் பூட்டி வைத்த தாய்; 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்பு;என்ன நடந்தது?

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்திலுள்ள இச்சாபுரம் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் லட்சுமி. இவர் தனது மகளுடன் மூத்த சகோதரன் வீட்டில் தங்கி இருந்தார். இவரது மகள் கடந்த 2022ம் ஆண்டு பருவம் அடைந்தார... மேலும் பார்க்க

`அம்மா என்னை மன்னித்து விடுங்கள்'- டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து குதித்து மாணவர் விபரீதம்

டெல்லியில் பிரபல பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவர், அங்குள்ள ராஜேந்திரா பிளேஸ் மெட்ரோ ஸ்டேஷனில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்து இருப்பதாக அவரது தந்தைக்கு மர்ம நபர் போன் செய்தார். ... மேலும் பார்க்க

AI போட்டோ காட்டி Zomato-வில் refund கேட்ட பெண் - ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய பேக்கரி!

மும்பையைச் சேர்ந்த 'டெசர்ட் தெரபி' என்ற பிரபலமான பேக்கரியில், அதிதி சிங் என்ற பெண் ₹2,500 மதிப்புள்ள 'ஆல்மண்ட் பிரலைன் ஸ்ட்ராபெர்ரி டார்க் சாக்லேட்' ஒன்றை சொமேட்டோ மூலம் ஆர்டர் செய்துள்ளார். டெலிவரி ச... மேலும் பார்க்க

மறைந்த தந்தையின் வங்கி கடன்; ரூ.18 லட்சம் ரூபாய் கேட்கும் அதிகாரிகள் - செய்வதறியாமல் தவிக்கும் மகன்

பெங்களூருவைச் சேர்ந்த நபரின் தந்தை, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மாரடைப்பால் காலமாகியிருக்கிறார்.தந்தையின் மறைவுக்குப் பிறகு, அவரது வங்கிக் கணக்குகளை முடிப்பதற்காக தாயுடன் எஸ்.பி.ஐ வங்கிக்கு சென்ற... மேலும் பார்க்க