செய்திகள் :

`நிதிஷின் 20 வருட முக்கிய இலாகாவும் போனது’ - அதிகாரத்தில் மேலோங்கும் பாஜக! | பீகார் அமைச்சரவை

post image

பீகாரில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது.

நவம்பர் 20-ல் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் 10-வது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்றார். அவருடன் 26 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார்
பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

அவர்களில், பாஜக-வைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா ஆகியோர் துணை முதல்வர்கள்.

மொத்தமாகக் கட்சி வாரியாக, பா.ஜ.க-வில் 14 பேருக்கும், ஜே.டி.யு-வில் 8 பேருக்கும், சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியில் 2 பேருக்கும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஆகிய இரு கட்சிகளில் தலா ஒருவருக்கும் அமைச்சரவையில் அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், முதல்வர் உட்பட அமைச்சர்கள் 26 பேருக்கும் யாருக்கு என்ன இலாகா ஒதுக்கப்பட்டிருந்தது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

அதில், 2005-ம் ஆண்டு முதல் சுமார் 20 ஆண்டுகளாக நிதிஷ் குமார் வசமிருந்த உள்துறை இலாகா பாஜக-வைச் சேர்ந்த துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி வசம் சென்றிருக்கிறது.

ஏற்கெனவே ஜே.டி.யு-வை விட பா.ஜ.க-வுக்கு அதிக அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது உள்துறை இலாகாவும் பா.ஜ.க-விடம் சென்றிருப்பதால் நிதிஷ் குமார் முதல்வராக இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தில் பா.ஜ.க-வின் கரங்கள் மேலிருப்பதாகப் பரவலாகப் பேச்சு அடிபடுகிறது.

இனி யாருக்கு என்ன இலாகா ஒதுக்கப்பட்டிருக்கிறது என்ற பட்டியலைப் பார்ப்போம்...

நிதிஷ் குமார் - பீகார் அமைச்சரவை
நிதிஷ் குமார் - Bihar Cabinet

பாஜக அமைச்சர்கள்:

1. சாம்ராட் சவுத்ரி (துணை முதல்வர்) - உள்துறை

2. விஜய் குமார் சின்ஹா ​​(துணை முதல்வர்) - நிலம் & வருவாய், சுரங்கம் & புவியியல்

3. திலீப் ஜெய்ஸ்வால் - தொழிற்துறை

4. மங்கள் பாண்டே - சுகாதாரம், சட்டம்

5. ராம் கிருபால் யாதவ் - விவசாயம்

6. சஞ்சய் சிங் டைகர் - தொழிலாளர் வளங்கள்

7. நிதின் நபின் - சாலை கட்டுமானம்; நகர்ப்புற மேம்பாடு & வீட்டுவசதி

8. அருண் சங்கர் பிரசாத் - சுற்றுலா, கலை & கலாச்சாரம்

9. சுரேந்திர மேத்தா - விலங்கு மற்றும் மீன்வள வளங்கள்

பீகார் உள்துறை அமைச்சர் சாம்ராட் சவுத்ரி (துணை முதல்வர்) - முதல்வர் நிதிஷ் குமார்
பீகார் உள்துறை அமைச்சர் சாம்ராட் சவுத்ரி (துணை முதல்வர்) - முதல்வர் நிதிஷ் குமார்

10. நாராயண் பிரசாத் - பேரிடர் மேலாண்மை

11. ராமா நிஷாத் - பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலன்

12. லக்கேந்திர ரோஷன் - பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் நலன்

13. ஷ்ரேயாஷி சிங் - தகவல் தொழில்நுட்பம்; விளையாட்டு

14. பிரமோத் குமார் - கூட்டுறவு; சுற்றுச்சூழல், காடு & காலநிலை மாற்றம்

ஐக்கிய ஜனதா தள அமைச்சர்கள்:

15. விஜய் குமார் சவுத்ரி - நீர்வளம், கட்டிட கட்டுமானம்

16. விஜேந்திர குமார் யாதவ் - எரிசக்தி

17. ஷ்ரவன் குமார் - கிராமப்புற மேம்பாடு, போக்குவரத்துத் துறை

18. அசோக் சவுத்ரி - கிராமப்புற பணிகள்

19. எம்.டி. ஜமா கான் - சிறுபான்மையினர் நலன்

20. லெஷி சிங் - உணவு & நுகர்வோர் விவகாரங்கள்

21. மதன் சாஹ்னி - சமூக நலன்

22. சுனில் குமார் - கல்வி

மோடி - நிதிஷ் குமார்
மோடி - நிதிஷ் குமார்

லோக் ஜனசக்தி கட்சி அமைச்சர்கள்:

23. சஞ்சய் குமார் - கரும்பு தொழில்கள்

24. சஞ்சய் குமார் சிங் - பொது சுகாதாரப் பொறியியல்

ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா அமைச்சர்:

25. தீபக் பிரகாஷ் - பஞ்சாயத்து ராஜ்

ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா:

26. சந்தோஷ் குமார் சுமன் - சிறு நீர்வளங்கள்

முதல்வர் நிதிஷ் குமாருக்கு பொது நிர்வாகம், அமைச்சரவை செயலகம், கண்காணிப்பு ஆகிய இலாகாக்களுடன் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகள் அனைத்தும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த காங். குழு; "அரசல் புரசல் செய்திகளுக்கு முடிவு" -ப.சிதம்பரம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் மெல்ல பரப்புரைகளைத் தொடங்கிவிட்டன. அதிமுக, தேமுதிக போன்ற கட்சிகள் கிராமங்கள் தோறும் பரப்புரை நிகழ்த்தி வருகின... மேலும் பார்க்க

`மேக்கேதாட்டு அணை - மெட்ரோ - ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு’ - எடப்பாடி பழனிசாமி விரிவான பேட்டி

சேலம் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, ``கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் பேட்டியில், மேக்கேதாட்டு அணை ... மேலும் பார்க்க

`அதிமுக ஆட்சியில்தான் மதுரைக்கு மெட்ரோ ரயில் வர மீனாட்சி விரும்புகிறார்' - சொல்கிறார் செல்லூர் ராஜூ

"மெட்ரோ ரயிலை மத்திய அரசு தடுத்து விட்டது என்று பரப்புவது திமுகவின் நாடகம். மத்திய அரசு அனுப்பிய கடிதம் வழக்கமான நடைமுறைதான்" என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை மெட்ரோமதுரைய... மேலும் பார்க்க

GST Raid: அமைச்சர் ஐ. பெரியசாமி குடும்பத்தினரிடம் நடந்த 7 மணி நேரம் சோதனை நிறைவு | Photo Album

7 மணி நேரம் நீண்ட சோதனை7 மணி நேரம் நீண்ட சோதனை7 மணி நேரம் நீண்ட சோதனை7 மணி நேரம் நீண்ட சோதனை7 மணி நேரம் நீண்ட சோதனை7 மணி நேரம் நீண்ட சோதனை7 மணி நேரம் நீண்ட சோதனை7 மணி நேரம் நீண்ட சோதனை7 மணி நேரம் நீண்... மேலும் பார்க்க

கன்னியாகுமரி: "ஏரியில் மீன் பிடிக்கும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த என்னை மேயராக்கினார்" - மா.சு

கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி அமைப்பு, கன்னியாகுமரி மாவட்ட மீனவர் கூட்டமைப்புகள் சார்பில் உலக மீனவர் தின விழா குளச்சல் மீன்பிடி துறைமுக வளாகத்தில் நடைபெற்றது.அதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர் மதிமுக செயல் வீரர்கள் கூட்டம்; செய்தியாளரின் செல்போனைப் பறித்து தாக்க முயற்சி

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற ம.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் செய்தியாளரை ம.தி.மு.க-வினர் தாக்க முயன்றதால் பரபரப்பு.ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு ரத வீதியில் உள்ள தனியார் திருமண ம... மேலும் பார்க்க