செய்திகள் :

பள்ளிவாசலுக்கு மந்திரிக்க சென்ற இளம்பெண்ணை பாலியல் கொடுமை செய்ய முயன்ற நபர்; நரிக்குடியில் பரபரப்பு!

post image

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே வீரசோழன்‌ பகுதியை சேர்ந்தவர் அப்துல் அஜீஸ். இவர் நரிக்குடி ஜூம்மா பள்ளிவாசலில் அஷ்ரத் ஆக பணியாற்றி‌ வருகிறார். இந்நிலையில் நரிக்குடி‌ பகுதியை சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் நரிக்குடி ஜூம்மா பள்ளிவாசலில் அப்துல் அஜீஸிடம் மந்திரிக்க சென்றுள்ளார். அப்போது அந்த இளம் பெண்ணை அப்துல் அஜீஸ் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். அப்போது அப்துல் அஜீஸ் தான் வைத்திருந்த சிறிய கத்தியை வைத்து அந்த பெண்ணை கழுத்து கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார்.

அப்துல் அஜீஸ்

அந்த இளம் பெண் வலி தாங்க முடியாமல் பள்ளிவாசலில் இருந்து வெளியே வந்து கூச்சலிட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அப்துல் அஜீஸை பிடித்து நரிக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காயமடைந்த அந்த இளம் பெண் திருச்சுழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நரிக்குடி காவல் நிலைய போலீசார் அப்துல் அஜீஸை‌ கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நரிக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகாசி: மின்வாரியத்தில் கத்தை கத்தையாக பணம் எண்ணிய அதிகாரி, லஞ்சமா? - பணியிடை நீக்கம்

சிவகாசியில் மின்வாரியத்தில் பணிபுரிந்த பெண் அதிகாரி ஒருவர் அலுவலகத்தில் பணம் எண்ணும் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.சிவகாசி மின்வாரிய செயற்பொறியாளராக பணியாற்றி வந்தவர் பத்ம... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: பெண் B.L.O தற்கொலை; வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிச்சுமை காரணமென கணவர் புகார்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜாகிதா பேகம், சிவனார்தாங்கல் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் கிராம உதவியாளராக வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாக வாக்காளர் பட்டியல் சிற... மேலும் பார்க்க

தாமிரபரணி ஆறு: ”தண்ணீர் எடுக்கும் நிறுவனங்களிடம் லிட்டருக்கு ஒரு பைசாதான் வசூலா?” - ஐகோர்ட் கேள்வி

தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து தற்போது வரை ஒரு லிட்டருக்கு ஒரு பைசாதான் வசூலிக்கப்பட்டு வருகிறதா? என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக... மேலும் பார்க்க

சேலம்: திமுக பிரமுகர் சுட்டுக்கொலை; மூன்று தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை; பின்னணி என்ன?

சேலம் மாவட்டம் கருமந்துறை அடுத்துள்ள கிராங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். திமுக கிளை செயலாளராக உள்ளார். ராஜேந்திரனுக்கும், பக்கத்து தோட்டத்தில் வசித்து வரும் இவரது உறவினர்களான ராஜமாணிக்கம், ... மேலும் பார்க்க

`கை எப்படி குளர்ச்சியாக இருக்கு?' - ஆசிரியை சித்ரவதையால் மாணவி தற்கொலை; அடுத்தடுத்த 4வது சம்பவம்

மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள பள்ளியில் 11வது வகுப்பு படித்து வரும் மாணவி ஷாக்சி(17). இம்மாணவி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இர... மேலும் பார்க்க

ஊட்டி: காட்டு மாடுகளைச் சுட்டு கொல்லும் கேரள வேட்டைக்கும்பல்; வேடிக்கை பார்க்கிறதா வனத்துறை?

கேரளா, கர்நாடகா மாநிலங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கும் முச்சந்திப்பு பகுதியில் அமைந்திருக்கிறது நீலகிரி மாவட்டம். வனங்கள் அடர்ந்த நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளைப் போல ஊடுருவும் வேட்டைக் கும்பல்கள் வனவிலங... மேலும் பார்க்க