செய்திகள் :

Tvk Vijay Speech: அவசர அவசரமாக தனி நபர் ஆணையம் அமைக்கப்பட்டது ஏன்? - முதல்வருக்கு தவெக விஜய் கேள்வி

post image

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அந்த சமயத்தில் தவெக மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

இந்த சம்பவத்தை அடுத்து, கட்சியின் நிர்வாக நடவடிக்கைகள் முடங்கியிருந்த நிலையில், ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தீவிரமடைந்துள்ளன.

தவெக சிறப்புப் பொதுகுழு கூட்டம்
தவெக சிறப்புப் பொதுகுழு கூட்டம்

அந்த வகையில் இன்று (நவ.5) மாமல்லபுரத்தில் விஜய் தலைமையில் தவெக சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

அதில் பேசிய தவெக தலைவர் விஜய், "என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கும் தோழிகளுக்கும் தமிழக மக்களுக்கும் வணக்கம்.

நம்ம குடும்ப உறவுகளை இழந்ததால் சொல்ல முடியாத வேதனையிலும் வலியிலும் இருந்தோம். அதனால்தான் அமைதி காத்தோம்.

ஆனால், இந்த சமயத்தில் நம் மீது வன்ம அரசியல் விமர்சனங்கள் பரப்பப்பட்டது. இதையெல்லாம் சட்டம் மற்றும் சத்தியத்தின் துணைகொண்டு முறியடிப்போம்.

அரசியல் செய்யவில்லை என பெயரளவில் பேசிவிட்டு, சட்டமன்றத்தில் முதல்வர் எவ்வளவு வன்மத்தைக் கொட்டினார் என்பதை மக்கள் உணராமலா இருப்பார்கள்?

இந்தியாவில் யாருக்கும் கொடுக்காத கட்டுப்பாடுகளை எங்களுக்கு கொடுத்தார்கள்.

தவெக சிறப்புப் பொதுகுழு கூட்டத்தில் விஜய்
தவெக சிறப்புப் பொதுகுழு கூட்டத்தில் விஜய்

நாங்கள் மக்களுக்கு வசதியாக ஒரு இடம் கேட்போம். அவர்கள் நெருக்கடியான ஒரு இடத்தை கொடுப்பார்கள். அது வாடிக்கையாகவே இருந்தது. இந்தியாவில் எந்த கட்சிக்கும் விதிக்காத விதிமுறைகளையெல்லாம் எங்களுக்கு விதித்தார்கள்.

நம்மைப் பற்றி விமர்சிக்கும் நேர்மைற்ற குறுகிய மனம் கொண்டு முதல்வருக்கு சில கேள்விகள்

இந்த கபட நாடக திமுக அரசின் பொய்களை வாதிட முடியாமல் கோடிகளை கொட்டி அமர்த்தப்பட்ட வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் திக்குமுக்காடி நின்றதை முதல்வர் அறியவில்லையா?

அவசர அவசரமாக தனி நபர் ஆணையம் அமைத்தார்கள். அதை அவமதிப்பதை போல பத்திரிகையாளர்களை சந்தித்து பொய் கூறினார்கள்.

50 வருடமாக பொது வாழ்க்கையில் இருக்கக்கூடிய முதல்வர் சட்டமன்றத்தில் பேசியது எவ்வளவு பெரிய வடிகட்டிய பொய் என்பதை நான் சொல்லவில்லை. நீதிமன்றம் சொல்லியிருக்கிறது" என்று பேசியிருக்கிறார்.

"ஹரியானா வாக்காளர் பட்டியலில் பிரேசில் மாடல் அழகி எப்படி வந்தார்?" - ராகுல் காந்தி கேள்வி

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஹரியானா மாநிலத்தில் வாக்கு திருட்டு நடப்பதாகக் குற்றஞ்சாட்டி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார். இதில் ஹரியானாவில் மொத்தம் 25 லட்சம் வாக்குத் த... மேலும் பார்க்க

Aadhav Arjuna full speech | `இன்னும் ஆறே மாசம்தான்' | TVK பொதுக்குழு கூட்டம் | Vijay

மக்களை சாவடிக்கும் அரசியலை கலைஞரிடம் இருந்த சீனியர் அரசியல் தலைவர்கள் செய்ய மாட்டார்கள். கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த எங்கள் தலைவர் 9 மணியில் இருந்து 6 மணி வரை சாப்பிடாமல் கண்ணீரை மட்ட... மேலும் பார்க்க

இன்று அமெரிக்க உச்ச நீதிமன்ற விசாரணைக்கு வரும் ட்ரம்ப் வரி வழக்கு! - வரிகள் திரும்ப பெறப்படுமா?

இன்று (அமெரிக்க நேரப்படி) உலக நாடுகளின் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போட்ட வரி வழக்கு அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.ஏன் இந்த வரி? உலக நாடுகளுடன் அமெரிக்காவிற்கு நிறைய வரி பற்றாக்குற... மேலும் பார்க்க

Asia Cup 2025: பாகிஸ்தான் வீரர் 2 போட்டிகளில் இடைநீக்கம்; பும்ரா, சூர்யகுமார் மீது அபராதம்

2025 ஆம் ஆண்டு ஐசிசி ஆசியக் கோப்பைப் போட்டிகளின் போது பல நடத்தை விதிகள் மீறப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று (நவ 4) உறுதிப்படுத்தியது.குறிப்பாக செப்டம்பர் 14, 21 மற்றும் 28 தேத... மேலும் பார்க்க

TVK Vijay Latest Speech | கரூர் சம்பவம் - அவர்கள் வன்மவாதிகள் | தமிழக வெற்றிக் கழகம்

"நம்ம குடும்ப உறவுகளை இழந்ததால் சொல்லமுடியாத வேதனையிலும் வலியிலும் இருந்தோம். அதனால்தான் அமைதி காத்தோம்"- தவெக விஜய் மேலும் பார்க்க

தவெக கூட்டம்: "கரூர் செந்தில் பாலாஜி... அங்க ஏன் போனீங்கன்னு கேட்குறாங்க"- ஆதவ் அர்ஜுனா

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.அந்த ... மேலும் பார்க்க