செய்திகள் :

Vulture: மின்கம்பியில் முடிந்த பாறு கழுகின் வனாந்திர பெருங்கனவு - வேதனையில் ஆய்வாளர்கள்!

post image

இயற்கையின் பெருங்கொடைகளில் ஒன்றாக அறியப்படும் பாறு கழுகுகள் பறவையினம், கானகத்தின் தூய்மைக் காவலனாகப் பெரும் பங்காற்றி வருகின்றன. வனத்தில் செத்து மடியும் சடலங்களை உண்டு வாழும் இவை, இறந்த சடலங்களால் மற்ற உயிரினங்களுக்கு கொள்ளை நோய்கள் பரவாமல் முற்றாகத் தடுக்கும் ஆற்றல் கொண்டவை. செந்தலை, வெண்முதுகு, மஞ்சள் முகம் எனப் பல வகையான பாறு கழுகுகள் நம்மையும் நமது இயற்கை வளங்களையும் பாதுகாத்து வந்துள்ளன. பாறு கழுகுகள் குறித்து சங்கத்தமிழிலும் சான்றுகள் உள்ளன.

இந்தியப் பாறு கழுகுகள்

மனித தவறுகளால் தொடர்ந்து அழித்தொழிக்கப்பட்டு வந்த இந்த இனம், இன்றைக்கு கிட்டத்தட்ட அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டிருக்கிறது‌. தென்னிந்தியாவைப் பொறுத்தவரை முதுமலை, சத்தியமங்கலம், பந்திப்பூர் புலிகள் காப்பகங்கள் மற்றும் கேரளாவின் முத்தங்கா சரணாலயம் ஆகியவற்றை உள்ளடக்கிய நீலகிரி உயிர்க்கோளக் காப்பகப் பகுதியே பாறு கழுகுகளின் கடைசிப் புகலிடமாக விளங்கி வருகிறது. கால்நடைகளுக்குச் செலுத்தப்படும் டைக்ளோ ஃபினாக் போன்ற வலி நிவாரணி மட்டுமன்றி இவற்றின் அழிவுக்கான மற்ற காரணங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டியால் பராமரிக்கப்பட்டு வந்த பாறு கழுகு ஒன்றினை கடந்த 2025- ம் ஆண்டு டிசம்பரில் ரேடியோ காலர் பொருத்தி, தடோபாவில் விடுவித்துள்ளனர். கர்நாடக வனப்பகுக்கு இடம்பெயர்ந்த அந்தப் பறவையை முதுமலை புலிகள் காப்பகத்தில் விடுவித்தனர். முதுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்பட்டு வந்த அந்தக் கழுகு, கடந்த ஞாயிற்றுக்கிழமை எப்பநாடு பகுதியில் மின்கம்பியில் மோதி பரிதாபமாக உயிரிழந்திருப்பதை வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

விடுவிக்கப்பட்ட பாறு கழுகு

இது குறித்து நம்மிடம் பேசிய முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள், "பாறு கழுகு பாதுகாப்பு குறித்து நாடு முழுவதும் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. தடோபா புலிகள் காப்பக மையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பாறு கழுகுகளின் குஞ்சு ஒன்றினை தேர்வு செய்து வனத்திற்குள் விடுவிக்க முடிவு செய்யப்பட்டது. ரேடியோ கருவிகள் பொருத்தி அங்கு விடுவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. பின்னர் கர்நாடகாவில் தென்பட்டது. உடல் நலக்குறைவுடன் காணப்பட்ட இந்த கழுகை முதுமலை புலிகள் காப்பகத்தில் விடுவிப்பது சரியானதாக இருக்கும் எனக் கருதப்பட்டு, பின்னர் முதுமலையில் விடுவிக்கப்பட்டது. இங்குள்ள வெண் முதுகு பாறு கழுகுகளுடன் இணைந்து வாழும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. சீகூர் பீடபூமியின் உயரமான பகுதியை நோக்கியே சென்று கொண்டிருந்தது. அவ்வப்போது தரையில் சோர்வாகக் காணப்பட்ட இந்த பாறு கழுகு, மின்கம்பியில் மோதி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறது" என்றனர்.

இந்த சோகம் குறித்து தெரிவித்துள்ள பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டி ஆய்வாளர்கள், "பாறு கழுகுகளின் எண்ணிக்கை என்பது அதளபாதாளத்தில் இருக்கிறது. இந்த நிலை நீடித்தால் காடுகளுக்கு மட்டுமன்றி மனிதர்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறும். இவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கவே பாறு கழுகுகள் பாதுகாப்பு மையம் மூலம் குஞ்சு பொரிக்கும் பறவைகளை காட்டில் விடுவித்து வருகிறோம்.

பாறு கழுகு

தென்னிந்தியாவைப் பொறுத்தவரை முதுமலை புலிகள் காப்பகத்தில் கணிசமான அளவில் இவை வாழ்கின்றன. அந்த நம்பிக்கையில் தான் விடுவித்தோம். இந்த பறவை முதுமலை சூழலை தகவமைத்திருந்தால் அடுத்தடுத்து கூண்டுப் பறவைகளை காட்டில் விடுவிக்க நல்ல அறிகுறியாக இருந்திருக்கும். ஆனால், மின்கம்பிகள் இதற்கு அச்சுறுத்தலாக இருந்திருக்கிறது. கூண்டுப் பறவையின் வனாந்திர பெருங்கனவு மின்கம்பியில் முடிந்திருக்கிறது. இதுபோன்ற அரிய உயிரினங்கள் வாழும் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்புடன் மின்சாரத்தை கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வேதனை தெரிவித்துள்ளனர்.

ஜவ்வாது மலையில் அதானி நிறுவனம்: `337.452 எக்டேர் நிலப்பகுதிக்கு ஆபத்து'- பூவுலகின் நண்பர்கள் குழு!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவிற்குட்பட்ட கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதி, அல்லேரியில் நீரேற்று மின் நிலையம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம்,... மேலும் பார்க்க

மகப்பேறு மருத்துவர் டு பவானி ஆற்றின் மீட்பர்! - 92 வயதில் காலமான சூழலியல் போராளியின் சாதனை பின்னணி!

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மகப்பேறு மருத்துவர் சத்தியசுந்தரி. உள்ளூர் மக்களின் நம்பிக்கைக்குரிய மருத்துவரான இவர், 30 ஆயிரத்திற்ம் மேற்பட்ட பெண்களுக்கு மகப்பேறு மருத்துவம... மேலும் பார்க்க

கோவையில் தாயைப் பிரிந்து பரிதவித்த குட்டி யானை; கோழிகமுத்தி முகாமிற்கு மாற்றம்

கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதிகளில் காட்டு யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. குறிப்பாக சிறுமுகை வனப்பகுதியில் அதிக அளவிலான காட்டு யானைகள் உள்ளன.இந்த நிலையில் கடந... மேலும் பார்க்க

கோவை: மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழப்பா? – வனத்துறை விசாரணை!

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதியில் உள்ள காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் நுழைந்து வருகின்றன. இந்த நிலையில் தடாகம் அருகேயுள்ள 24-வ... மேலும் பார்க்க

அதிக நாவல் பழ விளைச்சல்! வருங்கால வறட்சிக்கு எச்சரிக்கை மணியா? - தாவரவியல் வல்லுநர்கள் சொல்வதென்ன?

"இந்தாண்டு நாவல் பழத்தின் அதிகப்படியான விளைச்சல் என்பது அடுத்து வரப்போகும் பெரிய வறட்சிக்காக இயற்கை நமக்குக் கொடுத்திருக்கும் எச்சரிக்கை மணி..!" — கடந்த சில வாரங்களாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிரா... மேலும் பார்க்க

போர்க்களத்திலும் குறையாத கடல் ஆமைகள் மீதான கரிசனம்; உலகை உலுக்கிய சுற்றுச்சூழல் ஆர்வலர் மரணம்!

லெபனான் நாட்டில் நடக்கும் பயங்கரமான போருக்கு மத்தியிலும், தான் நேசித்த கடற்கரையையும், அங்கு வாழும் ஆமைகளையும் காப்பாற்ற நினைத்த ஒரு பெண்ணின் கதை சோகமாக முடிந்துள்ளது.லெபனானின் புகழ்பெற்ற சுற்றுச்சூழல்... மேலும் பார்க்க