செய்திகள் :

WhatsApp Update: இனி குரூப்பில் பழைய மெசேஜ்களைப் பார்க்க 'ஸ்கிரீன்ஷாட்' தேவையில்லை!

post image

வாட்ஸ்அப் தனது குரூப் பயனர்களுக்காக ஒரு முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. ஒரு வாட்ஸ்அப் குழுவில் நாம் இணையும் போது, இணைந்த பிறகு வரும் செய்திகளை மட்டுமே பார்க்க முடியும். ஆனால், இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள 'குரூப் மெசேஜ் ஹிஸ்டரி' (Group Message History) வசதி அந்தத் தடையை நீக்கியுள்ளது.

whatsapp
whatsapp

இனி, புதிய உறுப்பினர்கள் இணைந்ததற்கு முந்தைய 14 நாட்களில் பகிரப்பட்ட செய்திகளில், அதிகபட்சம் 100 செய்திகள் வரை அவர்களுக்குக் காட்டப்படும். இந்த வசதி தானாகச் செயல்படாது. குழுவின் அட்மின்கள்தான் செயல்படுத்த முடியும்.

Group Settings சென்று 'Send message history' என்ற விருப்பத்தை ஆன் (On) அல்லது ஆஃப் (Off) செய்யலாம். புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் போது, அவர்களுக்கு எத்தனை செய்திகளைக் காட்ட வேண்டும் (25, 50, 75 அல்லது 100) என்பதையும் அட்மின்கள் முடிவு செய்யலாம்.

பழைய செய்திகள் புதிய உறுப்பினருக்குப் பகிரப்படும்போது, குழுவில் உள்ள மற்றவர்களுக்கு அது குறித்த அறிவிப்பு உடனடியாகச் செல்லும். யார் செய்திகளைப் பகிர்ந்துள்ளார், எந்த நேரத்திலான செய்திகள் பகிரப்பட்டுள்ளன போன்ற விவரங்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் தெரியும். இதனால் குழுவின் அந்தரங்கம் (Privacy) உறுதி செய்யப்படுகிறது.

whatsapp
whatsapp

யாருக்கு அதிக பயன்?

* அலுவலகக் குழுக்களில் புதிய பணியாளர்கள் சேரும் போது முந்தைய விவாதங்களைத் தெரிந்துகொள்ள உதவும்.

* மாணவர்கள் இடையில் இணையும்போது பாடங்கள் குறித்த முந்தைய தகவல்களைப் பெறலாம்.

* சமூகக் குழுக்களில் நடக்கும் விவாதங்களின் பின்னணியைப் புரிந்துகொள்ள இது வசதியாக இருக்கும்.

இந்த அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் (iOS) பயனர்களுக்குப் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. உங்கள் வாட்ஸ்அப் செயலியைப் புதுப்பிப்பதன் மூலம் (Update) இந்த வசதி உங்களுக்குக் கிடைத்துள்ளதா என்பதைச் சரிபார்க்கலாம்.

'நீங்கள் மட்டும் தனியாக இல்லை' - உலகம் முழுவதும் முடங்கிய யூடியூப்; இதற்கு தொழில்நுட்ப காரணம் என்ன?

சில மணிநேரங்களாக, உலகில் உள்ள பல்வேறு பகுதிகளில் யூடியூப் சேவை தடைப்பட்டுள்ளது. இதனால், யூடியூப்பின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டிற்கு ஆயிரக்கணக்கான புகார்கள் குவிந்து வருகின்றன. சிலருக்கு யூடியூப்பின் ம... மேலும் பார்க்க

AI Impact Summit 2026: ஏ.ஐ உச்சி மாநாடு! - இந்தியாவுக்கு வரும் சுந்தர் பிச்சை, சாம் ஆல்ட்மேன்

ஏ.ஐ உச்சி மாநாடு (AI Impact Summit 2026) - இந்தியாவின் புது டெல்லியில் இன்று தொடங்கியுள்ளது. இந்த மாநாடு வரும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 16) வரை நடக்க உள்ளது. இதுவரை இங்கிலாந்து, தென் கொரியா, பிரான்ஸில்... மேலும் பார்க்க

Sarvam AI: சாட் ஜிபிடி, கூகுள் ஜெமினிக்கு போட்டியாக இந்தியாவின் சர்வம் ஏ.ஐ - சிறப்பம்சம் ஓர் அலசல்!

உலகமே செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பப் புரட்சியில் வேகமாகப் பயணித்துக்கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவும் இந்தப் போட்டியில் தனித்துவமான அடையாளத்துடன் களமிறங்கியுள்ளது. அதாவது... மேலும் பார்க்க

விண்வெளிப் போரில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளும் சீனா; அசரவைக்கும் புதிய மைக்ரோவேவ் தொழில்நுட்பம்!

விண்வெளிப் பாதுகாப்புத் துறையில் சீனா ஒரு மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது. எலான் மஸ்க்கின் 'ஸ்டார்லிங்க்' போன்ற செயற்கைக்கோள் கூட்டமைப்புகளை செயலிழக்கச் செய்யும் வகையில், ஒரு சக்திவாய்ந்த 'மைக்ரோவேவ... மேலும் பார்க்க

Moltbook: AI-க்கும், AI-க்கும் 'சாட்டிங்'; அதை மனிதர்கள் வேடிக்கை பார்க்கலாம்; புது ஆப்!

இந்த ஜனவரி மாதத்தின் இறுதியில், Moltbook என்கிற சமூக வலைதளப் பக்கம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், இது வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாக்கிராம் போன்ற வழக்கமான சமூக வலைதளப் பக்கம் அல்ல. இது கொஞ்சம... மேலும் பார்க்க

Zozo: `இந்தியாவில் பிறந்து, உலக மேடையை நோக்கி' - 11 வயதேயான இளம் ஸ்டார்ட்அப் நிறுவனர்!

ஆத்விக் அமித் குமார் - தனக்கென இந்த உலகில் 11 வயதிலேயே முத்திரை பதித்திருக்கும் மாணவன்.ZOZO Connect என்ற ஸ்டார்ட் அப்பின் நிறுவனர் இவர். கோவையில் இருந்து சென்னை வந்த ஆத்விக், நந்தினி தம்பதியின் மகன், ... மேலும் பார்க்க