செய்திகள் :

'அமெரிக்க ஆயுத கையிருப்பு குறைந்துவிட்டதா?' - ஈரான் போரால் ட்ரம்ப் அரசாங்கத்திற்குள் விரிசல்

post image

ஈரான் மீது தொடுக்கப்பட்ட போரில் அமெரிக்கா இன்னும் முழு ஆயுதப் பலத்துடன் இருக்கிறது. ஈரான்தான் பலத்த பாதிப்பைச் சந்தித்துள்ளது - இதுதான் அமெரிக்கா தொடர்ந்து முன்வைக்கும் ஸ்டேட்மென்ட்.

ஆனால், இந்தப் பேச்சு குறித்து தற்போது அமெரிக்க அரசாங்கத்திலேயே சந்தேகக் குரல் எழுந்துள்ளது.

'The Atlantic' இதழ் தகவலின் படி, சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டம் ஒன்று நடந்துள்ளது.

பீட் ஹெக்ஸெத்
பீட் ஹெக்ஸெத்

அதில் ஈரான் போரில் அமெரிக்காவின் கையிருப்பில் இருந்த எத்தனை ஏவுகணைகள் குறைந்துள்ளன, ஈரான் போரில் அமெரிக்காவிற்குத் தாக்கங்கள் என்ன போன்றவற்றை அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை தலைமையகமான பென்டகன் சரியாகத் தெரிவித்துள்ளதா என்கிற சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளார் வான்ஸ்.

இந்தச் சந்தேகத்தை ட்ரம்ப் முன்னரே கூறியுள்ளார் வான்ஸ்.

ஈரான் போரில் அமெரிக்காவிற்குத்தான் வெற்றி என்பதை மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார் அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத்.

அவரைக் குற்றம் சாட்டுவதுபோல அல்லாமல், அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் முக்கியமல்லவா என்பதுபோல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அமெரிக்கா ஏவுகணை தடுப்பான்கள், நீண்ட தூர ஏவுகணைகள் உள்ளிட்ட பல முக்கிய ஏவுகணைகளை ஏற்கெனவே பயன்படுத்திவிட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன.

இந்தப் போரிலேயே பல ஆயுதங்களைப் பயன்படுத்தி, கையிருப்பு குறைந்தால், அது அமெரிக்காவின் பாதுகாப்பிற்குப் பின்னடைவாக இருக்கும் என்று வான்ஸ் தரப்பு நினைக்கிறது போலும்.

இதனால், ட்ரம்ப் அரசாங்கத்திற்குப் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

TN Exit Poll 2026 LIVE : `அரியனணயில் அமரபோவது யார்?' - இன்று மாலை வெளியாகிறது எக்ஸிட் போல் முடிவுகள்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க போவது யார்?தமிழ்நாடு, புதுச்சேரி, அஸ்ஸாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களை ஒன்றாக நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. கடந்த ... மேலும் பார்க்க

நாமக்கல்: "எங்க போதமலை மக்களுக்கு இப்ப தான் சுதந்திரம் கிடைச்சுருக்கு.!" - ஒரு மண் சாலையின் கதை!

"திகில் நிறைந்த அடர்ந்த வனப்பகுதியில் 75 ஆண்டுளாக தலைச்சுமையாக எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் முதன் முறையாக வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டது. ``புதுசா அமைக்கப்பட்டுள்ள மண் ரோட்டால்... மேலும் பார்க்க

ஈரான் எண்ணெய் ஏற்றுமதிக்கு செக்; சீனாவிற்கு நிதி கொடுத்தால் வங்கிகளுக்குத் தடை; அமெரிக்கா எச்சரிக்கை

ஒரு பக்கம் அமெரிக்கா போர் தொடுத்தும், ஹார்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட்டும் ஈரானுக்கு நெருக்கடி தந்து வருகிறது. ஆனால், இன்னொரு பக்கம், ஈரானிடம் இருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து நி... மேலும் பார்க்க

'கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடவில்லை' - தலைமை நீதிபதி தர்மாதிகாரி

நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 பணியிடங்களை நிரப்ப ரூ. 634 கோடி லஞ்சம் பெறப்பட்டதாகக் கூறப்படும் புகார் தொடர்பாக, அமலாக்கத்துறை அளித்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக... மேலும் பார்க்க