Toxic: மீண்டும் தள்ளிப் போகும் யஷின் 'டாக்சிக்' படம் - ரிலீஸ் சிக்கலில் 'கே.வி.எ...
PBKS Vs RR: "நாங்கள் அதில்தான் கோட்டை விட்டுவிட்டோம்" - முதல் தோல்வி குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்
ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல். 29) ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் மோதின.
இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் 7 போட்டிகளில் ஒன்றில் கூட தோற்காத பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் முறையாகத் தோல்வியைச் சந்தித்தது.

இந்நிலையில் போட்டிக்குப் பிறகு அணியின் தோல்வி குறித்து பேசிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், "எங்கள் அணியின் பேட்ஸ்மேன்களுக்கு எனது பாராட்டுகள்.
அவர்கள் களமிறங்கிய விதமும், பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடிய விதமும் அற்புதமாக இருந்தது.
நாங்கள் பந்துவீச்சில்தான் கோட்டை விட்டுவிட்டோம் என்று நினைக்கிறேன். நிறைய ஸ்லோவர் பால்கள், யோர்க்கர்கள் போடத் திட்டமிட்டோம், ஆனால் அதைச் சரியாகச் செய்யவில்லை.
டி20 கிரிக்கெட்டில் நிறைய வீரர்கள் தங்களது ஆட்டத்தை மாற்றிக்கொண்டிருக்கின்றனர்.
களமிறங்கிய முதல் பந்திலிருந்தே அதிரடி காட்டுகிறார்கள். எனவே, ஒரு குறிப்பிட்ட திட்டத்துடன் வருவது பந்துவீச்சாளர்களுக்குக் கடினமான காரியமாக இருக்கிறது.

ஆனால் சரியான திட்டத்தை வகுத்து, அதைச் சரியாகச் செயல்படுத்தினால் வெற்றி நிச்சயமாகக் கிடைக்கும். நாங்கள் இதுவரை பின்பற்றி வந்த வழக்கமான முறைகளையும் பயிற்சிகளையும் தொடர்ந்து செய்வோம்.
இந்தச் சீசனில் எங்களது முதல் தோல்வி, எனவே இது நிறைய பாடங்களைக் கற்றுத் தரும்" என்று பேசியிருக்கிறார்.




















