செய்திகள் :

`கெளரி வந்தபிறகுதான் எனது வாழ்க்கை முழுமையடைந்தது' - லைஃப் பார்ட்னர் குறித்து நடிகர் ஆமீர் கான்

post image

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் இரண்டு திருமணங்கள் செய்தார். ஆனால் இரண்டுமே நிலைத்திருக்கவில்லை. இரண்டு மனைவிகளையும் அவர் விவாகரத்து செய்துவிட்டார். அவர்களை விவாகரத்து செய்தாலும் தனது வீட்டிற்கு அருகேயே குடியர்த்தி அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார். அதோடு எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் இரண்டு மனைவிகள் மற்றும் அவர்களின் குழந்தைகளுடன் அதனை கொண்டாடுவதை ஆமீர் கான் வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது ஆமீர் கான் மூன்றாவதாக கெளரி என்ற பெண்ணுடன் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

முன்பு நடந்த இரண்டு திருமணங்களும் நிலைத்து நிற்காத காரணத்தால் கெளரியுடன் திருமணம் செய்து கொள்ளாமல் ஆமீர் கான் வாழ்ந்து வருகிறார். தற்போது எங்கு சென்றாலும் தனது லைஃப் பார்ட்னரை அழைத்து செல்வதை ஆமீர் கான் வழக்கமாக கொண்டுள்ளார். புதிய லைஃப் பார்ட்னர் குறித்து ஆமீர் கான் அளித்த பேட்டியில் பல்வேறு தகவல்களை தெரிவித்து இருக்கிறார்.

கெளரி, ஆமீர்கான் மற்றும் இரு மாஜி மனைவிகள்

அவர் அளித்துள்ள பேட்டியில்,' 'கௌரியைச் சந்தித்ததும், எங்கள் உறவு தொடங்கியதும் எனது அதிர்ஷ்டம். அவர் ஒரு சிறந்த மனிதர். அவருடன் இருக்கும்போது நான் மன அமைதியை உணர்கிறேன்.

கிரண் (ராவ்) மற்றும் ரீனா (தத்தா) உடனான எனது முந்தைய உறவுகளும் மிகவும் ஆழமானவைதான், ஆனால் அவை சரியாக அமையவில்லை. நீங்கள் கேட்டபோதுதான் உணர்ந்தேன், கௌரி என் வாழ்க்கையில் வந்ததற்கு நான் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்று நினைக்கிறேன். நாங்கள் ஒன்றாக மகிழ்ச்சியாக இருக்கிறோம். நான் கெளரி வந்த பிறகு இப்போதுதான் முழுமையடைந்ததாக உணர்கிறேன்.

நான் எப்படியோ அப்படியேதான் இருக்கிறேன். ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் தவறுகள் செய்கிறான். யாரும் முழுமையானவர் (perfect) அல்ல. உங்கள் தவறை நீங்கள் புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்வதால், நீங்கள் சிறியவர் ஆகிவிடமாட்டீர்கள்.

நான் கூட எனது வாழ்க்கை மற்றும் தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். அந்தத் தவறுகளை மீண்டும் செய்யாமல் இருக்க நான் எப்போதும் முயற்சிப்பேன். ஒரு மனிதனாகவும், ஒரு நடிகனாகவும் நான் வளர்ந்து கொண்டிருக்கிறேன். எனது தவறுகளை நான் புரிந்து கொண்டு ஒப்புக்கொண்டால் மட்டுமே இது சாத்தியமாகும். நான் எதையும் வெளிப்படையாகப் பேசும் மனிதன். நான் எதை நினைக்கிறேனோ, அதை அப்படியே சொல்லிவிடுவேன். பல ஆண்டுகளாக, மற்ற எல்லாவற்றையும் விட எனது வேலைக்கே முன்னுரிமை அளித்தேன்.

நான் ஏற்கனவே திருத்திக் கொள்ளத் தொடங்கிய ஒரு தவறு என்னவென்றால், எனது நெருக்கமானவர்களுக்கும் உறவுகளுக்கும் போதிய நேரத்தை வழங்காததுதான். நான் 30-35 ஆண்டுகளாக வேலை, திரைப்படம் மற்றும் நடிப்பிற்கு மட்டுமே அடிமையாக இருந்தேன். கோவிட் பெருந்தொற்று காலத்தில் எனது வாழ்க்கையை மீண்டும் ஆராய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த நேரத்தில் என்னால் வேலை செய்ய முடியவில்லை.

அப்போதுதான் நான் பல விஷயங்களை இழந்துவிட்டேன் என்பதையும், இந்த நேரம் மீண்டும் வராது என்பதையும் உணர்ந்தேன்,''என்று அவர் கூறினார்." ஆமீர் கான் தனது முதல் மனைவி ரீதா தத்தாவை 2002ம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதன் பிறகு 2005ம் ஆண்டு தயாரிப்பாளர் கிரண் ராவ் என்பவரை திருமணம் செய்தார். அவரையும் 2021ம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார். அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.

'3 இடியட்ஸ்' படத்தின் 2-ம் பாகம் உருவாகிறதா? - ஆமீர் கான் சொன்ன தகவல் என்ன?

'3 இடியட்ஸ்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக ஆமீர் கான் தெரிவித்திருக்கிறார். கடந்த 2009 ஆம் ஆண்டு ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில், ஆமீர் கான் மாதவன், ஷர்மான் ஜோஷி நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்... மேலும் பார்க்க

Ek Din: "சாய் பல்லவிதான் இந்த நாட்டின் சிறந்த நடிகை!" - ஆமீர் கான் புகழாரம்

ஆமீர் கானின் மகன் ஜூனைத் கான் நடிகராக அறிமுகமாகும் 'ஏக் தின்' (Ek Din) படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றது. Ek Din Movieஇத்திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிக... மேலும் பார்க்க

Akshay Kumar: ஆன்லைன் கேமில் அக்‌ஷய் குமாரின் 13 வயது மகளிடம் நிர்வாணப் படம் கேட்ட நபர் கைது

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மகள் ஆன்லைனில் துன்புறுத்தலைச் சந்தித்தாகத் தெரிவித்து இருந்தார். மும்பையில் நடந்த சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியி... மேலும் பார்க்க

"இன்றும் கோயிலுக்குள் எங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது!" - 'பஞ்சாயத்' சீரிஸ் நடிகர் ஆதங்கம்

அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியான 'பஞ்சாயத்' வெப் சீரிஸில் நடித்துப் பிரபலமானவர் வினோத் சூர்யவன்ஷி. வினோத் சூர்யவன்ஷி - பஞ்சாயத் வெப் சீரிஸ்சமீபத்திய பேட்டி ஒன்றில், நிஜ வாழ்க்கையில் இன்றைய தேதிய... மேலும் பார்க்க

Bollywood: ``சுஷாந்த் மரணத்திற்கு பாலிவுட் மாஃபியாதான் காரணம்" - உடைத்துப் பேசும் நடிகை தனுஸ்ரீ!

பாலிவுட் திரையுலகில் நிலவும் அசாத்தியமான சூழல்கள் மற்றும் "பாலிவுட் மாஃபியா" (Bollywood Mafia) குறித்தும், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் நடிகை ஜியா கான் ஆகியோரின் மரணங்களுக்குப் பின்னால் இருக்... மேலும் பார்க்க

மனைவி குறித்து பேசிய ரித்தேஷ் தேஷ்முக்; தேம்பி அழுத ஜெனிலியா - வைரலாகும் வீடியோ!

சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் 'ராஜா சிவாஜி'. ரித்தேஷ் தேஷ்முக் இப்படத்தை இயக்கியிருக்கிறார். 'ராஜா சிவாஜி' படத்தில் அபிஷேக் பச்சன் நடித்திருக்கிறார்... மேலும் பார்க்க