`அவர் சகோதரிதான் அவரின் இரண்டாவது மனைவி'- 28 வருட உறவை முறிக்க மனைவி முன்வைத்த ப...
Ek Din: "சாய் பல்லவிதான் இந்த நாட்டின் சிறந்த நடிகை!" - ஆமீர் கான் புகழாரம்
ஆமீர் கானின் மகன் ஜூனைத் கான் நடிகராக அறிமுகமாகும் 'ஏக் தின்' (Ek Din) படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றது.

இத்திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிகழ்வில் சாய் பல்லவிதான் சிறந்த நடிகை என ஆமீர் கான் பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவர் கூறுகையில், "இந்தத் திரைப்படத்தின் ('ஏக் தின்') தயாரிப்பாளர் என்ற முறையில், இதில் பணியாற்றிய ஒவ்வொருவரும் காட்டிய தீவிரமான உழைப்பு மற்றும் நேர்மையைக் கண்டு நான் மிகவும் நன்றியோடு உணர்கிறேன்.
பாடகர் அரிஜித் சிங் இங்கே இல்லாதது குறையாக உள்ளது. அவர் பாடலை மிகவும் அற்புதமாகப் பாடியுள்ளார்.
இசையமைப்பாளர் ராம் சம்பத்தும் மிகவும் சிறப்பான இசையை வழங்கியிருக்கிறார். சாய் பல்லவி இதில் மிக அற்புதமான பணியைச் செய்துள்ளார்.

அவர் செய்திருப்பதைப் பார்த்தால் நீங்கள் நிச்சயம் வியந்து போவீர்கள். என் மனதிலிருந்து உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இன்று நம் நாட்டில் இருக்கும் மிகச்சிறந்த நடிகை சாய் பல்லவிதான்.
என்னுடைய மகன் ஜூனைத் கானும் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆனால் அவன் எனது மகன் என்பதால் என்னால் அதிகம் சொல்ல முடியாது.
இந்தப் படத்தின் ஒட்டுமொத்தக் குழுவினருக்கும் நன்றி. இந்தப் படத்தை மிகவும் நேர்மையுடன் உருவாக்கியிருக்கிறார்கள். இனி மக்கள் பார்த்துத் தீர்ப்பளிக்க வேண்டும்" எனப் பேசியிருக்கிறார்.
பாலிவுட்டில் இதுதான் சாய் பல்லவியின் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது!

















