செய்திகள் :

தேர்தல் முடிந்த சூட்டோடு விநாயகர், காளி கோயிலில் சாமி தரிசனம்; சொந்த ஊரில் வைகோ

post image

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து விட்ட சூழலில் பதிவான அதிக வாக்கு சதவிகிதத்தால் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் மே 4 ம் தேதியை திக் திக் மனநிலையுடன் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கின்றன. முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட சில தலைவர்களோ மனநிலையைக் கொஞ்சம் கூல் ஆக்கிக் கொள்ள மலைப் பிரதேசங்களுக்குக் கிளம்பி விட்டனர்.

இந்தப் பின்னணியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவோ சொந்த ஊர் பக்கம் விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்திருக்கிறார்.

கலிங்கப்பட்டி அருகேயுள்ள வீரணாபுரம் கிராம மக்கள் தங்கள் ஊருக்கு ஒரு விநாயகர் கோயில் வேண்டுமென வைகோவிடம் கோரிக்கை வைத்திருந்தார்களாம்.

vaiko

அதை ஏற்றுக்கொண்ட வைகோ தனது சொந்தச் செலவில் அந்த கிராமத்தின் மையப் பகுதியில் 'வீரசக்தி விநாயகர்' என பெயரிடப்பட்ட அந்தக் கோயிலைக் கட்டித் தந்துள்ளார்.

கோவிலின் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது.

வைகோ கலந்து கொண்டு கலசத்தில் நீர் ஊற்றினார். தொடர்ந்து இதே ஊரின் எல்லையில் கோயில் கொண்டுள்ள வீரகாளி கோயில் குடமுழுக்கு நிகழ்விலும் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து தமது ஏற்பாட்டில் ஊர் மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வையும் வைகோ தொடங்கி வைத்தார்.

வைகோ
வைகோ

முன்னதாக வீரணாபுரம் கிராமத்திற்கு வந்த வைகோவை மேள தாளங்கள் முழங்க ஆரத்தி எடுத்து ஊர் மக்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

நிகழ்ச்சியில் உள்ளூர் மதிமுகவினருடன் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும் திரளாக கலந்துகொண்டனர்.

``பையில் வெங்காயம் வைத்திருந்தால் எந்த ஆபத்தும் வராது" - மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

மத்தியப்பிரதேச மாநிலம், சிவபுரியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ``நான் காரிலோ அல்லது தங்கும் இடத்திலோ ஏசியைப் பயன... மேலும் பார்க்க

"எனது இளமைக் காலத்தில் பொன்னான 15 ஆண்டுகளை ஆம் ஆத்மிக்காகவே அர்ப்பணித்தேன், ஆனால்..!" - ராகவ் சதா

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜக-வில் இணைந்த ராகவ் சதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "ஒரு பட்டயக் கணக்காளராக எனக்குக் காத்திருந்த நம்ப... மேலும் பார்க்க

இணைந்த 7 எம்.பி-கள்: `மாநிலங்களவையில் பலம் கூடிய பாஜக' - ஏற்றுக்கொண்ட சபாநாயகர்

மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சிக்கு மொத்தம் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MP) இருந்தனர். இவர்களில் ராகவ் சதா உள்ளிட்ட 7 உறுப்பினர்கள், கடந்த வெள்ளிகிழமை ஆம் ஆத்மி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு கா... மேலும் பார்க்க

”நகையை அடகு வச்சி தேர்தல் செலவுக்கு பணம் கொடுத்தார்” - மறைந்த தாயை நினைத்து உருகும் தவெக வேட்பாளர்

த.வெ.க-வின் திருவாரூர் மேற்கு மாவட்ட செயலாளர் யு.வி.எம்.ராஜராஜன். இவர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மன்னார்குடி தொகுதியில் த.வெ.க சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டவர். இவரது தாய் வான்மதி என்கிற... மேலும் பார்க்க

மதுபான வழக்கு: "இந்த நீதிபதி முன் ஆஜராக மாட்டேன், அதற்கு பதில்.!"- கெஜ்ரிவால் வெளியிட்ட வீடியோ

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ (CBI) பதிவு செய்த ஊழல் வழக்கில் இருந்து, டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேரையும் டெல்லி ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: "பாஜக பெண்களுக்கு ரூ. 1.80 லட்சம் தரும்" - மோடியின் வாக்குறுதி என்ன?

மேற்கு வங்கத்தில் 294 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது.முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்குக் கடந்த 23 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்டத்தேர்தல்... மேலும் பார்க்க