செய்திகள் :

அமைச்சர் கீர்த்தனா ரீல்ஸ்: ``ட்ரோல்களைக் கண்டுக்கொள்ளாதீர்கள்" - தெலங்கானா அமைச்சர் ஆதரவுக் குரல்

post image

தமிழ்நாட்டின் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், ``தமிழ்நாடு எதிர்காலத்திற்காகக் காத்திருக்கவில்லை; நாங்களே அதை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். Single-window approvals, அதிவேகக் அனுமதிகள் முதல் AI cities, Space economy வரை, கண்டுபிடிப்புகளும் செயல்பாடுகளும் ஒன்றிணையும் ஒரு சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பைத் தமிழ்நாடு உருவாக்கி வருகிறது.

அமைச்சர் கீர்த்தனா - முதல்வர் விஜய்
அமைச்சர் கீர்த்தனா - முதல்வர் விஜய்

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் தொலைநோக்கு தலைமையின் கீழ், தமிழ்நாட்டை இந்தியாவின் முதலீடு மற்றும் கண்டுபிடிப்புகளின் அதிகார மையமாக மாற்றுவதற்கு நாங்கள் உறுதியுடன் உள்ளோம். எதிர்காலம் இங்கேதான் உள்ளது. தமிழ்நாட்டில் முதலீடு செய்யுங்கள்" என அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த ரீல்ஸ் மூலம் தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தது சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செயல் தலைவரும், ஆந்திர பிரதேச தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சருமான நாரா லோகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், ``அன்பிற்குரிய கீர்த்தனா காரு, முதலீட்டாளர்களை நோக்கிய உங்களது இந்தச் செயலூக்கமான அணுகுமுறையைப் பாராட்டுகிறேன்.

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு தொழில் துறை அமைச்சரும் தங்களது மாநிலத்தைத் தீவிரமாகச் சந்தைப்படுத்தவும், முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடவும், வேலைவாய்ப்பை உருவாக்குபவர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவும் வேண்டியுள்ளது.

தெலங்கானா அமைச்சர் நாரா லோகேஷ்
தெலங்கானா அமைச்சர் நாரா லோகேஷ்

மாநிலங்கள் தங்களைச் சுறுசுறுப்பாக்கிக் கொண்டு, இந்தியாவின் வளர்ச்சிச் சக்கரத்தை வேகப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி பலமுறை ஊக்குவித்துள்ளார். நிச்சயமாக, ஆந்திரப் பிரதேசம் தமிழ்நாட்டிற்கு ஒரு ஆரோக்கியமான போட்டியை வழங்கும்!

மேலும், தேவையில்லாத சத்தங்களைப் புறக்கணியுங்கள் – இணையப் பக்க ட்ரோல்கள் (Trolls) வேலைவாய்ப்புகளை உருவாக்காது, முதலீடுகள் மட்டுமே உருவாக்கும்!" என்று அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஆதரவாகப் பதிவிட்டுள்ளார்.

`கோவைக்கு மெட்ரோ, எங்கள் தேர்தல் அறிக்கையிலேயே இருக்கிறது; அதற்கான நடவடிக்கைகள்...'- அமைச்சர் சம்பத்

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார், கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவ கட்டமைப்புகள், மருந்து கையிருப்பு, மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் நிலை, நோயாளிகளு... மேலும் பார்க்க

'பிள்ளை பிடிப்பவர்களிடம் கவனமாக இருங்கள்..!' - நீலகிரி அதிமுக மா.செ சூட்சும அறிக்கை

நீலகிரி மாவட்ட அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகள் பலர் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் த.வெ.க- வில் இணைந்து வருகின்றனர். எஸ்.பி.வேலுமணி அணிக்கு ஆதரவு அளித்த விவகாரத்தில், அ.தி.மு.க நீலகிரி மாவட்டச் செய... மேலும் பார்க்க

'பழைய பதவியை பயன்படுத்தக்கூடாது'- எடப்பாடி போட்ட கண்டிஷன்; மீண்டும் அதிமுகவில் பிளவை உண்டாக்குமா?

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக எதிர்பாராத சரிவைச் சந்தித்து, 47 இடங்களுடன் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. இந்தத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து கட்சிக்குள் கடுமையான உட்கட்சிப் பூசல்களு... மேலும் பார்க்க

சர்ச், பள்ளி, டாஸ்மாக் மூணும் அடுத்தடுத்து.! 'எப்ப சார் கடையை மூடுவீங்க?' கேட்பது பெரம்பூர் மக்கள்!

``பள்ளிகள், வழிபாட்டுத் தலங்களில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்துக்குள் இருக்கும் 717 மதுபானக் கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூடப்படும்" என தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றதும் விஜய் அதிரடி உத்தரவு பிற... மேலும் பார்க்க

"மேகதாது விவகாரத்தில் டி.கே.சிவக்குமார் பொறுப்பின்றி பேசுகிறார்"- அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார்

மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. மேகதாது அணை கட்டினால் தமிழகத்திற்கு வரவேண்டிய நீரின் அளவு பெருமளவு குறையும். இதனால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படும். ஆனால் கர்நா... மேலும் பார்க்க