செய்திகள் :

அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு லஞ்சம்? புகார் கூறிய பெண் வழக்கறிஞர் தவெக-வில் இருந்து நீக்கம்

post image

`ஊழலற்ற நேர்மையான ஆட்சி’ என்ற பிரசாரத்தை முன்னெடுத்து ஆட்சியைப் பிடித்தது த.வெ.க. ஆனால் ஆட்சிக்கு வந்த ஒருசில தினங்களிலேயே அக்கட்சி நிர்வாகிகள் வசூல் வேட்டையில் இறங்கியதாகப் புகார்கள் எழுந்தன.

அதையடுத்து 24.05.2026 தேதியிட்ட ஜூ.வி இதழில், `ஆவின் தலைவர் பதவி ரூ.50 லட்சம்… அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.30 லட்சம்… வசூல் சர்ச்சையில் த.வெ.க மாவட்டச் செயலாளர்’ என்ற தலைப்பில் விரிவான கட்டுரையை வெளியிட்டிருந்தோம்.

அந்தக் கட்டுரையில் நாம் குறிப்பிட்டிருந்த விழுப்புரம் மாவட்டச் செயலாளர் `குஷி’ மோகன் மீதுதான் தற்போது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுடன் வழக்கு தொடர்ந்திருக்கிறார் வழக்கறிஞர் ஞானசௌந்தரி.

விஜய், மோகன்ராஜ்
விஜய், மோகன்ராஜ்

அதன் தொடர்ச்சியாக கட்சி நிர்வாகி ஒருவருடன் அவர் பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக, தகித்துக் கொண்டிருக்கிறது த.வெ.க. அந்த ஆடியோவில், `நான் எவ்வளவு கஷ்டப்படற குடும்பம் தெரியுமா? பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண் நான்.

தளபதி வெற்றிபெற்றதும், அவர் எனக்காகவே வெற்றிபெற்றதாக நினைத்தேன். ஏனென்றால் நாம் அரசுத் தரப்பு வழக்கறிஞராவோம். வாழ்க்கையில் முன்னேறுவோம் என்று நினைத்தேன்.

ஆனால் அவர் (குஷி மோகன்) என்னை மிகவும் கேவலமாக நடத்தினார். அ.தி.மு.க, தி.மு.க-வில் அந்தக் கட்சிக்காரர்களைத் தவிர வேறு யாருக்கும் கொடுக்க மாட்டார்கள். ஆனால் நம் கட்சியில்தான் மாற்றுக் கட்சிக்காரர்களுக்குக் கொடுக்கிறார்கள்’ என்று நீண்டது அந்த ஆடியோ.

இந்த விவகாரம் குறித்து அப்போது நம்மிடம் பேசிய ஞானசௌந்தரி தரப்பு, ``தளபதி கட்சி ஆரம்பித்த சமயத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் 11 வழக்கறிஞர்கள் தேவை என்று கேட்டார்கள். ஆனால் அப்போது விழுப்புரத்தில் ஞானசுந்தரி உட்பட நான்கு பேர்தான் ரசிகர்கள் என்ற முறையில் பெயர் கொடுத்தார்கள்.

அதில் மூன்று பேர்தான் சீனியர். இப்போது இருக்கும் மாவட்டச் செயலாளர் குஷி மோகன் மீது இரண்டு எஃப்.ஐ.ஆர்கள் விழுந்தன. அதற்கும் அவர்கள்தான் ஆஜரானார்கள்.

அப்படி இருக்கும்போது அவர்களை விட்டுவிட்டு, அரசு வழக்கறிஞராக வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஆறு பேரைப் போட்டிருக்கிறார் `குஷி’ மோகன். ஒரு நியமனத்துக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை வாங்கிக் கொண்டுதான் நியமித்திருக்கிறார்கள்” என்றனர்.

தவெக
தவெக

அதேசமயம், ``எனக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. தளபதி ஆட்சி வந்ததில் இருந்து அனைத்தும் சட்ட விதிகள்படி நேர்மையாக நடைபெற்று வருகிறது. அதன்படி அரசு வழக்கறிஞர் நியமனமும் அப்படித்தான் நடைபெறும்.

ஆனால் அந்த நியமனம் இன்னும் நடைபெறவே இல்லை. அதற்குள் இப்படி உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை வைக்கிறார். அவர் கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லை. கட்சிக்காக அவர் உழைக்கவும் இல்லை.

தேர்தல் நேரத்தில் அவர் பிரசாரம் செய்வதைப் போல ஒரு போட்டோ இருந்தால் காட்டச் சொல்லுங்களேன் பார்க்கலாம். வழக்கறிஞர் அணியில் பொறுப்பு வேண்டும் என்று கேட்டு வந்தார். ஆனால் எந்தப் பொறுப்பையும் அவருக்கு வழங்கவில்லை” என்று ஜூ.வி-யிடம் கேள்வி எழுப்பியிருந்தார் மாவட்டச் செயலாளர் `குஷி’ மோகன்ராஜ்.

இந்த நிலையில்தான் ஞானசௌந்தரியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்து நீக்குவதாக அறிவித்திருக்கிறார் குஷி மோகன்ராஜ். அவர் வெளியிட்டிருக்கும் அந்த அறிக்கையில், ''இணையத்தளம் வழியாக த.வெ.க-வில் உறுப்பினராக இணைந்தவர் சந்திரமோகன் மனைவி ஞானசௌந்தரி.

எதிரிகளுடன் சேர்ந்துகொண்டு பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறியும், கட்சியின் கொள்கைகள், ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு முரணாகச் செயல்பட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார்.

மேலும் கட்சியின் எந்த நிர்வாகியும் அல்லது உறுப்பினரும் கட்சி சார்பாக அவரிடம் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது'' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

புஸ்ஸி ஆனந்த், முதல்வர் விஜய்
புஸ்ஸி ஆனந்த், முதல்வர் விஜய்

இதுகுறித்து `குஷி’ மோகன்ராஜிடம் கேட்டபோது, ``தளபதி தலைமையிலான ஆட்சி அமைந்ததில் இருந்து, பொய்யாக பல்வேறுக் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. அப்படியானவர்களுடன் கூட்டு வைத்துக் கொண்டு ஞானசௌந்தரியும், அதேபோல பொய்யான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தார்.

ஆனால் வழக்கறிஞர் நியமனம் குறித்து அவர் தாக்கல் செய்த வழக்கை, ஆதாரங்கள் இல்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அதனால் பொய் குற்றச்சாட்டுகள் மூலம் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்த அவரை, கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறோம்” என்றார்.

சாதிய பாகுபாட்டால் இயக்கப்படாத அரசுப் பேருந்து – இயக்க வைத்து பயணித்த அமைச்சர் வன்னி அரசு!

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் என்ற கிராமம் உள்ளது. இங்கிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அண்ணா நகர் என்ற பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதி அமைந்துள்ளது. இதனிடையே அப்பகுதியைச் சேர... மேலும் பார்க்க

வாரிய தலைவர் பதவிக்கு 5 'அன்பு பரிசு'கள்; முதல்வருக்கு நெருக்கத்தில் ஜரூராக நடக்கிறதா வசூல் வேட்டை?

'யாராவது லஞ்சம் கேட்டா உங்க அண்ணன் விஜய்யோட ஆட்சி நடக்குதுன்னு சொல்லுங்க...' என முதல்வர் விஜய் கரூரில் பேசியிருந்தார். ஆனால், கோட்டையில் முதல்வரின் நெருக்கமான வட்டத்திலேயே ஒரு முக்கிய புள்ளியின் பெயரி... மேலும் பார்க்க

"தேர்தலுக்கு 5 வருஷம் காத்திருக்க தேவையில்ல; திமுகவுக்கு ஆசை காட்டும் பாஜக.!"- கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் திருப்பத்தூரில் இன்று (ஜூலை. 18) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "என்னுடைய புரிதல் என்னவென்றால் திமுகவுடன், பாஜக பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டது. 'தொ... மேலும் பார்க்க

`என் போராட்டங்கள் அண்ணன் விஜய்க்கு தெரிந்திருந்தால்..!’ - தவெகவில் நீக்கப்பட்ட பெண் வழக்கறிஞர்

`அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டுதான் நியமிக்கிறார்கள்' என்று, த.வெ.க-வின் விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ஞானசௌந்தரி சென்னை உயர் நீத... மேலும் பார்க்க

’எவ்வளவு அவதூறு பரப்பினாலும் வைகோவை நேசித்துக் கொண்டே இருப்போம்’ - அமைச்சர் வன்னி அரசு விளக்கம்!

கோவை விமான நிலையத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஆதிதிராவிடர் நலத்துறை பெயர் மாற்றம் வருத்தமளிக்கின்றது என திருமாவளவன் சொல்லியிப்பது குறித்த கேள்வ... மேலும் பார்க்க

`கரூர் கம்பெனி வேலைக்காரர்கள்போல் நடத்தப்பட்டோம்'- திமுகவிலிருந்து கோவை மாநகராட்சி கவுன்சிலர் விலகல்

கோவை மாநகராட்சி 22 வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு செல்வக்குமார் என்பவர், தி.மு.க-வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “2020 ஆம் ஆண்டிலிருந்து திராவிடன் அறக்கட்டளையைத்... மேலும் பார்க்க