செய்திகள் :

ஆன்லைன் பேமென்ட் ஆப்களில் தவறாக பணம் அனுப்பிவிட்டீர்களா? உடனே செய்ய வேண்டியவை!

post image

இன்றைய யு.பி.ஐ, Gpay, Paytm காலகட்டத்தில், பணம், காசை கண்ணில் பார்ப்பதே அரிதாகிவிட்டது. கட்டணம் செலுத்துவது தொடங்கி பண பரிவர்த்தனை வரை அனைத்தும் சில கிளிக்குகளில் 'டக்'கென முடிந்துவிடுகிறது.

இதில் சில நேரங்களில் மொபைல் எண்ணை மாற்றி போட்டு, வேறொருவருக்கு பணம் அனுப்பிவிடுவதும் நடக்கிறது தான்.

பண பரிவர்த்தனை ஆப்களில் பணம் டெபிட் ஆகிவிட்டால், அடுத்து ஒன்றும் செய்ய முடியாது. பணம் சம்பந்தப்பட்ட நபருக்கு சென்றுவிடும். அதை கேன்சலோ, அண்டு’வோ (Undo) செய்ய முடியாது.

ஆன்லைன் பேமென்ட்
ஆன்லைன் பேமென்ட்
ஆனால், அடுத்து உடனடியாக நீங்கள் செய்ய வேண்டிய ஸ்டெப்கள் இதோ...

1. எந்த நபருக்கு தவறுதலாக பணம் சென்றதோ, அந்த நபரிடம் பேசிப்பாருங்கள். அவர் உங்களைப் புரிந்துகொண்டு பணத்தை உடனடியாக அனுப்பிவிட்டால் பிரச்னை முடிந்தது... உங்களுக்கும் உங்கள் பணம் கிடைத்துவிடும்.

2. ஒருவேளை, அந்த நபர் மறுத்தால், அந்த ஆப் அல்லது இணையதளத்திலேயே 'ரிப்போர்ட்' செய்யுங்கள்.

3. அடுத்ததாக, நடந்த விஷயத்தை விளக்கமாக எழுதி உங்களுக்கு வங்கியிடம் புகாரளியுங்கள். நேரில் செல்ல இயலவில்லை என்றால் புகாரை மெயில் செய்யுங்கள்.

4. அப்போது பிரச்னை சரியாகவில்லை என்றால் நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் (NPCI - National Payments Corporation of India) ‘Dispute Redressal Mechanism’ செல்லில் புகாரளிக்கலாம். டோல் ஃப்ரீ எண்ணான 1800-120-1740-க்கு போன் செய்தும் புகாரளியுங்கள்.

NPCI லேட்டஸ்ட் சட்டத்தின் படி, ஒரு மாதத்திற்கு 10 முறை மட்டுமே, தவறுதலாக அனுப்பிய பணத்தை திரும்ப பெற முடியும். ஒருவருக்கே திரும்ப திரும்ப தவறுதலாக பணம் அனுப்பினால், அதை 5 முறை மட்டுமே பெற முடியும். இதை நினைவில் வைத்துகொள்ளுங்கள் மக்களே.!

Microsoft: இந்தியாவில் ரூ.1.57 லட்சம் கோடி முதலீடு; சத்யா நாதெல்லாவின் அறிவிப்பும் மோடியின் பதிலும்

இந்தியாவில் ரூ.1.57 லட்சம் கோடி முதலீடு செய்வதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.உலகளாவிய பெருநிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. தொழில்நுட்ப பெருநிறுவனங்கள் இந்த... மேலும் பார்க்க

'Cloudflare'-ன் சேவையில் திடீர் துண்டிப்பு; அச்சத்தில் ஆடிய நிதி நிறுவனங்கள்; என்னதான் பிரச்னை?

உலகெங்கும் இருக்கும் பல மில்லியன் நிறுவனங்களின் இணையதளங்கள் பாதுகாப்பாகவும், வேகமாகவும் இயங்குவதற்கு அடிப்படையாக இருக்கும் முன்னணி கன்டென்ட் டெலிவரி நெட்வொர்க்கான 'Cloudflare'-ன் சேவையில் இன்று காலை 1... மேலும் பார்க்க

``இந்தியாவின் 2-வது ஏஐ டீச்சிங் அசிஸ்டன்ட்'' -துணிக்கடை பொம்மையில் அரசு பள்ளி மாணவர் சாதனை

உலகில் ஒரு மூளைமுடுக்கு எங்கும் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏஐ).அதற்கேற்ப, ஏஐ-ன் நன்மைகளையும் அதன் பயன்பாடுகளையும் புரிந்துகொண்டு, பல்வேறு கண்டுபிடிப்புகளை ஆர்வத... மேலும் பார்க்க

Sanchar Saathi App: சுற்றும் சர்ச்சைகள்; அந்த ஆப்பில் அப்படி என்ன இருக்கிறது?

> இனி உற்பத்தி ஆகும் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் அரசின் சைபர் பாதுகாப்பு ஆப்பான 'சஞ்சார் சாத்தி' கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும். > இந்த ஆப்பை பயனாளர்கள் அன்இன்ஸ்டாலோ, டிஸ்ஏபிளோ செய்ய முடியாத... மேலும் பார்க்க

WhatsApp: புதிய கெடுபிடி; 'இதை' செஞ்சுடுங்க மக்களே! - மத்திய அரசின் அதிரடி

வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல், அரட்டை, ஸ்நாப்சாட், ஷேர்சாட் உள்ளிட்ட ஆப்கள் பயன்பாட்டிற்கு புதிய கெடுபிடிகளை விதித்துள்ளது மத்திய அரசு. அவை என்ன? > இந்த ஆப்களை எந்த மொபைல் போன் நம்பரில் இயக்குகிறோ... மேலும் பார்க்க