சீனா உதவியுடன் விண்வெளி மூலம் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் பாகிஸ்தான்! - இந்தியா...
'இந்திய சினிமா மிகச்சிறந்த கதைசொல்லிகளில் ஒருவரான பாரதிராஜாவை இழந்திருக்கிறது!' - நடிகர் சிரஞ்சீவி
மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தனது இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் இரங்கல் பதிவில், " இந்திய சினிமா தனது மிகச்சிறந்த கதைசொல்லிகளில் ஒருவரான பாரதிராஜா அவர்களை இழந்திருக்கிறது.
கிராமத்து மண்ணின் வாசனை, மனித உறவுகளின் அழகு, காதலின் அப்பாவித்தனம் மற்றும் சாமானிய மக்களின் உணர்ச்சிகளை காலத்தால் அழியாத சினிமா கவிதைகளாக மாற்றியவர் அவர்.

அவருடைய திரைப்படங்கள் லட்சக்கணக்கான இதயங்களைத் தொட்டதோடு, தலைமுறை தலைமுறையாகப் பல திரைப்பட இயக்குநர்களுக்கும் ஊக்கமளித்தன.
மரியாதைக்குரிய பத்மஸ்ரீ மற்றும் பல தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்ற பாரதிராஜாகாருவின் பங்களிப்பு இந்திய சினிமாவிற்கு அளப்பரியது.
'ஆராதனா' திரைப்படத்தில் 'புலிராஜு' என்ற கதாபாத்திரத்தில் அவருடைய இயக்கத்தின் கீழ் பணியாற்றும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. சினிமா மீதான அவரது ஆர்வம், எளிமை மற்றும் தனது கலை மீதான அவரின் அர்ப்பணிப்பு ஆகியவை என் மனதில் நீங்காத முத்திரையைப் பதித்துள்ளன.

அவர் இப்போது நம்மோடு இல்லை என்றாலும், அவருடைய அசாதாரணமான திரைப்படங்களின் மூலம் அவரது மரபும் புகழும் என்றும் நிலைத்திருக்கும்.
'இயக்குநர் இமயம்' பாரதிராஜா அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.












