செய்திகள் :

"காங்கிரஸ் நிர்வாகிகளை தவெக-வில் இணைப்பதை ஏற்க முடியாது" – முதல்வர் விஜய் மீது காங்கிரஸ் அதிருப்தி

post image

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில தினங்களாக த.வெ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த பலர் அக்கட்சியில் இணைந்து வருவது கவனத்திற்குரியது.

அவ்வாறு இணைபவர்களின் பின்னணி, நோக்கம் மற்றும் கடந்த கால செயல்பாடுகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்த பின்னரே அவர்களை கட்சியில் இணைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட சிலர் சமீப காலமாக த.வெ.க-வில் இணைந்துள்ளனர்.

கூட்டணி தர்மத்தின் மாண்பைக் கருத்தில் கொண்டு, அவர்களை கட்சியில் இணைப்பதைத் தவிர்த்திருக்க வேண்டியது அவசியமாக இருந்தது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது த.வெ.க. ஆட்சி அமைக்கக் கூடாது என்ற நோக்கில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க பல்வேறு அரசியல் நகர்வுகளை மேற்கொண்டபோது, எந்தவித நிபந்தனையும் இன்றி முதன்முதலில் த.வெ.க.விற்கு ஆதரவு அளித்தது காங்கிரஸ் பேரியக்கம்தான்.

காங்கிரஸின் நிலைப்பாட்டைத் தொடர்ந்து மற்ற கூட்டணிக் கட்சிகளும் ஆதரவு வழங்கின. இதன் காரணமாகவே தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வின் அரசியல் திட்டங்கள் வெற்றி பெறாமல் போனது.

கணபதி சிவக்குமார்
கணபதி சிவக்குமார்

அத்தகைய சூழ்நிலையில் த.வெ.க ஆட்சி அமைக்க உறுதுணையாக இருந்த கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை த.வெ.க.வில் இணைத்துக்கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.

கடந்த காலங்களில், கூட்டணியில் இருந்த கட்சிகளின் நிர்வாகிகள் கருத்து வேறுபாடு காரணமாக விலகியபோதும், கூட்டணி மரியாதையைப் பேணும் வகையில் அவர்களை தங்களது கட்சியில் இணைத்துக்கொள்ளாமல் அரசியல் நாகரிகத்தை தி.மு.க கடைப்பிடித்துள்ளது. காங்கிரஸ் தொண்டர்களை தி.மு.க-வில் சேர்க்கும் நடவடிக்கைகளை அதன் தலைமையே ஊக்குவிக்கவில்லை.

ஆனால் தற்போது காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் த.வெ.க.வில் இணைவது, கூட்டணி தர்மத்தைப் பாதிப்பதோடு தேவையற்ற விமர்சனங்களுக்கும் அரசியல் சர்ச்சைகளுக்கும் வழிவகுக்கும்.

எனவே, தமிழக முதலமைச்சரும், த.வெ.க. தலைவருமான விஜய் இனிமேலாவது இத்தகைய செயல்களை ஊக்குவிக்காமல், கூட்டணிக் கட்சிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்பட வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான்: "24 மணிநேரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்" - பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

ஈரான் போர் முடிவுக்கு வருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து நீண்ட நாள்களுக்குப் பிறகு, இரண்டு நாள்களுக்கு முன், ஈரானும், அமெரிக்காவும் மாறி மாறி தாக்கிக் கொண்டன. தாக்குதலுக்குப் பிறகு, அ... மேலும் பார்க்க

'விஜயதாரணி, பச்சைமால், பாலகங்கா...' - தவெகவில் இணைந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகளின் இன்றைய லிஸ்ட்!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக் கட்சியினர் பலர் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர்கள் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்களான இசக்கி சுப்பையா, ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி நகர்மன்றக் கூட்டம்: முன்னாள் முதல்வர்களின் படங்களை வைக்க போட்டிப் போட்ட திமுக - அதிமுக!

கிருஷ்ணகிரி நகராட்சிக் கூட்ட அரங்கத்தில் முன்னாள் முதல்வர்களின் படங்களை வைப்பது தொடர்பாக திமுக-அதிமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் நகர்மன்றத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அதேநேரம், இந்த... மேலும் பார்க்க

"வழிமுறை தெரியாது..": நழுவும் தலைமை மருத்துவர் : மரங்களை வெட்டிய தேவகோட்டை அரசு மருத்துவமனை

" பிள்ளைகளைப்போல வளர்த்தோம்..!"சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பி.எஸ்.எஸ். சாத்தப்ப செட்டியார் அரசு மருத்துவமனை வளாகத்தில் பல ஆண்டுகளாக நிழல் தந்து வந்த மரங்கள் திடீரென வெட்டிச் சாய்க்கப்பட்ட சம்பவம், தே... மேலும் பார்க்க

"திமுக நம்முடன் இணைந்து செயல்படும்; பினராயி விஜயனை என்னால் கட்டிப்பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி

கடந்த திங்கட்கிழமை (ஜூன் 8), டெல்லியில் இந்தியாக் கூட்டணி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாக் கூட்டணி கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலை... மேலும் பார்க்க

கொல்லூரில் முதல்வர் விஜய்: "எந்த விசேஷ கோரிக்கையும் அம்மனிடம் வைக்கவில்லை" - கோயில் கமிட்டி தலைவர்

கர்நாடகா மாநிலம் கொல்லூரில் இருக்கும் மூகாம்பிகை அம்மன் கோயில் மிகவும் பிரபலம் ஆகும். இக்கோயிலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா பல முறை சென்று இருக்கிறார். இக்கோயிலுக்கு தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் வருக... மேலும் பார்க்க