`210 இடங்களில் நம் கூட்டணி வெற்றிபெற்று அதிமுக ஆட்சியமைக்கும்!' - NDA கூட்டத்தி...
`இரட்டை இன்ஜின் அரசு தேவை.. திமுக ஆட்சியின் கவுன்ட்டவுன் ஆரம்பம்!'- மதுராந்தகத்தில் பிரதமர் மோடி உரை
மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ``பாரதா மாதா வாழ்க... என் சகோதர சகோதரிகளே வணக்கம். 2026-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் என் முதல் பயணமாக ஏரி காத்த ராமர் பூமியான மதுராந்தகம் வந்துள்ளேன். இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள், நேதாஜியோடு சுதந்திர போராட்டத்தில் பல தமிழர்கள் பங்கேற்றனர்.
வீரம், நாட்டுப்பற்று தமிழக மக்களின் நாடி, நரம்புகளில் நிறைந்துள்ளது. 2026-ல் எனது முதல் பயணம் இது. NDA கூட்டணியை மக்கள் விரும்புகின்றனர். ஆட்சி மாற்றத்திற்கு தமிழ்நாடு தயாராகிவிட்டது. மேடையில் உள்ள தலைவர்களே தமிழக எதிர்காலத்தைத் தீர்மானிப்பார்கள். தமிழ்நாட்டில் வளர்ச்சி அடைந்த ஊழலற்ற ஆட்சியை அமைக்க வேண்டும். திமுக ஆட்சிக்கான கவுன்ட்டவுன் ஆரம்பம்.

கரப்ஷன், மாஃபியா, கிரிமினல் போன்ற விஷயங்களுக்கு ஆதரவு கொடுக்கும் அரசு இது. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் ஊழல் இருக்கிறது என்று குழந்தைகளுக்கும் தெரியும். இங்கு ஒரு குடும்பத்துக்கான ஆட்சி நடக்கிறது. ஜனநாயகம் அற்ற அரசு இது. கலாசாரத்தை வசைப்பாடுகிறது திமுக அரசு. திமுக-வின் கொடூர ஆட்சியில் இருந்து தமிழகத்தை விடுவிப்போம்.
11 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்திற்கு மும்மடங்கு நிதியை நாங்கள் தந்திருக்கிறோம். காங்கிரஸ் அளித்த நிதியை விட மும்மடங்கு அதிகமாக அளித்திருக்கிறோம். வரலாறு காணாத வளர்ச்சியை பாஜக அரசு கொடுத்திருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி இப்போது பின்னோக்கி செல்கிறது. தமிழ்நாட்டுக்கு இரட்டை இன்ஜின் அரசு தேவை என்று மக்கள் விரும்புகின்றனர்.
விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் NDA கூட்டணி ஆதரவாக இருக்கும். தமிழ்நாட்டு வளர்ச்சியில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு முக்கிய பங்கு உண்டு. கண்முன்னே போதைக்கு சீரழிகிறார்கள் நம் குழந்தைகள். மத்திய அரசுடன் இணைந்த மாநில அரசு வேண்டும்.

குற்றங்களைக் கட்டுக்குள் வைத்திருந்தார் ஜெயலலிதா. சிறப்பாக செயல்பட்டார் அவர். தமிழ் கலாசாரத்தின் எதிரி திமுக தான். தமிழ் மொழி, தமிழ் கலாசாரத்தை நேசிக்கிறேன். வாக்கு வங்கி அரசியலை திமுக நடத்துகிறது. திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதை திமுக பிரச்னையாக்கியது திமுக. தமிழகத்தை வளர்ச்சி நோக்கி நகர்த்த மாற்றம் தேவை" என்று திமுகவை விமர்சித்து பேசியிருக்கிறார்.
















