செய்திகள் :

`இருஞ்சிறை இரா.ஜெயச்சந்திரன்' - ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் நினைவஞ்சலி!

post image

மதுரையிலிருந்து ராமநாதபுரம் வரை பாய்ந்த கிருதுமால் நதி, ஒருகாலத்தில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாக இருந்தது. வைகை நதி நீர் ராமநாதபுரம் வரை பாய்ந்து பலன் தந்தது. இன்று, பராமரிப்பின்மை மற்றும் தூர்வாராமை காரணமாக, அது வரைபடத்தில் மட்டுமே இருப்பதுபோல் வற்றிக் கிடக்கிறது.

இந்த நதியை மீட்டெடுக்கவும், கிருதுமால் நதி பாசன விவசாயிகளின் உரிமைகளை காக்கவும் இடைவிடாது போராடியவர் இருஞ்சிறை இரா. ஜெயச்சந்திரன். வைகை நீர் ராமநாதபுரம் வரை மீண்டும் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையுடன், பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தி, விவசாயிகளின் உரிமைக்குரலாக அவர் திகழ்ந்தார்.

விவசாயம் வாழ வேண்டும் என்ற உறுதியுடன், நிலமும் நீரும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் அவர் காட்டிய அர்ப்பணிப்பு, பலருக்கும் ஊக்கமாக அமைந்தது. “நீர் வந்தால் தான் நிலம் வாழும்” என்ற அவரது நம்பிக்கை, இன்று வரை விவசாயிகளின் மனதில் ஒலிக்கிறது.

நினைவஞ்சலி

கிருதுமால் நதியை மீட்க வேண்டும் என்ற அவரது கனவு, போராட்டங்களின் வழியே தொடர்ந்துகொண்டிருந்த நிலையில், கொரோனா காலத்தில் அவர் உயிரிழந்தது பெரும் இழப்பாக அமைந்தது.

ஏப்ரல் 23ம் தேதி அவரது நினைவு நாளை முன்னிட்டு, பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் விவசாயிகள் இருஞ்சிறை இரா.ஜெயச்சந்திரனுக்கு வீர வணக்கம் செலுத்தி, அவரது சேவையை நினைவுகூர்ந்தனர்.

அவரது போராட்டமும், பணியும் என்றும் மறையாது… அவர் விதைத்த நம்பிக்கை விதைகள், எதிர்கால தலைமுறைகளின் மனங்களில் வளமாக வளரட்டும்.

பசுமை சந்தை!

வாசக விவசாயிகளே!விவசாய விளைபொருள்கள், கால்நடைகள், மீன்கள், பண்ணை உபகரணங்கள் போன்றவற்றை இங்கே நீங்கள் சந்தைப்படுத்தலாம். இயற்கை இடுபொருள்களான உரம், பூச்சிவிரட்டி தொடர்பான தகவல்கள் மற்றும் நிலம் விற்பது... மேலும் பார்க்க

நெல், கோதுமை ஊக்கத்தொகை நீக்கம்... அரசு, அரசியல் கட்சிகளின் தேர்தல் கணக்குகள் அம்பலம்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!கடந்த ஏப்ரல் 10-ம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தி.மு.க தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ‘நெல்லுக்குத் தமிழக அரசு வழங்கி வரு... மேலும் பார்க்க

திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் | Photo Album

திருப்பூரில் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்திருப்பூரில் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்திருப்பூரில் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்திருப்பூரில் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்திருப்பூரில் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்... மேலும் பார்க்க

ஈரோட்டில் கிழக்கு சட்டமன்ற தொகுதி போட்டியிட வேட்புமனு வாங்க குவிந்த பொதுமக்கள்! | Album

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலுக்கான வேட்பு மனு பெற குவிந்த மக்கள் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலுக்கான வேட்பு மனு பெற குவிந்த மக்கள் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலுக்கான வேட்பு மனு பெற குவிந்த மக்கள் ஈரோடு கி... மேலும் பார்க்க