செய்திகள் :

``ஈரான் 'இந்த' 15 பரிந்துரைகளை ஏற்றால்... போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா தயார்" - ட்ரம்ப்

post image

மூன்று வாரமாக ஈரான் மீது கடுமையான தாக்குதலை நடத்திய அமெரிக்கா, இப்போது சற்று 'சமாதன' மோடிற்கு வந்துள்ளது.

அதன் விளைவாக, கடந்த திங்கட்கிழமை (மார்ச் 23) ஐந்து நாள்கள் போர் தாக்குதல் நிறுத்தி வைப்பை அறிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

நேற்று, ஈரான் போர் அமைதிக்கான 15 பரிந்துரைகளை முன்மொழிந்துள்ளார்.

அதில் ஈரான் என்னென்ன செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாவது...

> ஈரான் தற்போது தங்களிடம் உள்ள அணுசக்தி கட்டமைப்புகளைக் கலைக்க வேண்டும்.

> அணு ஆயுதம் தயாரிப்பதற்கான எந்தவொரு முன்னெடுப்பும் செய்யமாட்டோம் என்று ஈரான் வாக்கு கொடுக்க வேண்டும்.

ஈரான் போர்
ஈரான் போர்

> ஈரானியப் பிரதேசத்தில் யுரேனியம் செறிவூட்டல் நடைபெறக் கூடாது.

> ஈரான் தங்களிடம் உள்ள சுமார் 450 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்பை சர்வதேச அணுசக்தி முகமையிடம் விரைவில் ஒப்படைக்க ஒத்துக்கொள்ள வேண்டும்.

> நடன்ஸ், இஸ்பஹான் மற்றும் ஃபோர்டோ அணுசக்தி நிலையங்கள் அகற்றப்பட வேண்டும்.

> சர்வதேச அணுசக்தி முகமை மற்றும் ஐ.நா அணுசக்தி பார்வையாளர்கள் ஈரான் முழுவதும் சோதனையிட முழு அனுமதியையும், வெளிப்படைத்தன்மையையும் தர வேண்டும்.

> ஈரான் தங்களது பிராந்தியத்தில் பயங்கரவாதிகள் போன்றவர்களைக் கொண்டு செயல்படுவதை நிறுத்த வேண்டும்.

> அந்தப் பிராந்தியத்தில் இருக்கும் பயங்கரவாதிகளுக்கு நிதி, ஆயுதம் போன்றவற்றை வழங்குவதை ஈரான் நிறுத்த வேண்டும்.

> ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட வேண்டும். அது சுதந்திரமான கடல்வழிப் பாதையாகச் செயல்பட வேண்டும்.

> ஈரானின் ஏவுகணைத் திட்டத்தில், அதன் தயாரிப்பு எண்ணிக்கையையும், அது சென்று தாக்கும் தூரத்தையும் குறைக்க வேண்டும்.

> எதிர்காலத்தில் ஈரான் ஏவுகணைகளைப் பயன்படுத்தினாலும், அது தற்காப்பிற்காக மட்டுமே இருக்க வேண்டும்.

ஹார்முஸ் ஜலசந்தி
ஹார்முஸ் ஜலசந்தி
இவற்றை செய்தால் ஈரானுக்கு என்ன கிடைக்கும்?

> ஈரான் மீதுள்ள முழு தடைகளும் நீக்கப்படும்.

> புஷேர் அணுமின் நிலையத்தில் மின்சார உற்பத்தி உட்பட, ஈரானின் குடிசார் அணுசக்தித் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அமெரிக்கா உதவும்.

> ஈரான் மேலே சொன்னவற்றை மீறினால், மீண்டும் முழு தடை விதிக்கப்படும்.

RCB: ரூ.16,700 கோடிக்கு விற்பனையான பெங்களூரு அணி; புதிய உரிமையாளர்கள் யார்?

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி மற்றும் பெங்களூர் அணி சமீபத்தில் விற்பனைக்கு வந்தது. இதில் ராஜஸ்தான் அணியை அமெரிக்க தொழிலதிபர் மற்றும் வால்மார்ட், ஃபோர்டு போன்ற முக்கிய நிறுவனங்களின் பங்குதாரர் ஆன கல் சோ... மேலும் பார்க்க

மாநிலங்களவை உறுப்பினரான சரத் பவார்; கூட்டணிக் கட்சியினரை வீட்டுக்கு அழைத்து விருந்து!

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் மறைந்த துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் இரண்டாக உடைந்த பிறகு, சரத் பவார் தனி அணியாகச் செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு இறுதியில் நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர... மேலும் பார்க்க

எடப்பாடியில் கே.பழனிசாமி; மைலத்தில் சி.வி.சண்முகம் - முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அதிமுக!

நேற்று (மார்ச்.24) தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறார். அதில், முதல் 23 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை வெளியி... மேலும் பார்க்க

என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை டு ஜீவிதா நாச்சியார் - சசிகலா வேட்பாளர்கள் லிஸ்ட்டில் இவர்களா?

தொகுதிப் பங்கீட்டை பிரதான கட்சிகள் ஒருவழியாக முடித்து வரும் நிலையில், தன் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, வி.கே.சசிகலா அதிர்ச்சி அளிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. ராமதாஸ், ... மேலும் பார்க்க

'ஃபிரிட்ஜ்க்கு போட்டியாக எல்.இ.டி டிவி?' - 'கதாநாயகனாக' கை கொடுக்குமா திமுக தேர்தல் அறிக்கை?

கூட்டணிக் கணக்குகள் வெற்றிகரமாக முடிந்துவிட்டதால், அடுத்தக்கட்டமாக பிரசாரம் மற்றும் தேர்தல் அறிக்கை வெளியிடுவது குறித்தான ப்ளானில் இறங்கியுள்ளது தி.மு.க.கடந்த ஒரு வாரமாக நடந்து வந்த தி.மு.க வேட்பாளர்க... மேலும் பார்க்க