செய்திகள் :

மாநிலங்களவை உறுப்பினரான சரத் பவார்; கூட்டணிக் கட்சியினரை வீட்டுக்கு அழைத்து விருந்து!

post image

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் மறைந்த துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் இரண்டாக உடைந்த பிறகு, சரத் பவார் தனி அணியாகச் செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு இறுதியில் நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது. சமீபத்தில் காலியாக இருந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் மகாராஷ்டிராவில் இருந்து எதிர்க்கட்சிகள் தரப்பில் ஒரு உறுப்பினரை மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. அந்த இடத்தில் காங்கிரஸ் போட்டியிட விருப்பம் தெரிவித்தது.

ஆனால் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இடம் பெற்று இருந்த சரத் பவார் இப்பதவிக்கு போட்டியிட எதிர்க்கட்சிகள் சம்மதித்தன. இதையடுத்து சரத் பவார் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உத்தவ் தாக்கரே

எனவே சரத் பவார் தனது கூட்டணிக் கட்சித் தலைவர்களான உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நானா பட்டோலே, விஜய் ஆகியோரை தனது வீட்டிற்கு வரவழைத்து, அவர்களுக்கு விருந்து கொடுத்து கெளரவித்து, தன்னை மாநிலங்களவைக்குத் தேர்வு செய்ததற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அதோடு சரத் பவார் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார். சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்து சரத் பவார் பேசுவது இதுவே முதன்முறையாகும். வரும் மே மாதம் சட்டமேலவையில் உத்தவ் தாக்கரேயின் பதவிக்காலம் முடிகிறது. மகாராஷ்டிரா சட்டமேலவையில் காலியாகும் 9 உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர். அவர்களில் எதிர்க்கட்சிகள் தரப்பில் ஒருவரை மட்டுமே தேர்வு செய்ய முடியும்.

அந்த ஓர் இடத்திற்கு உத்தவ் தாக்கரேயை தேர்வு செய்வது குறித்து சரத் பவார் கூட்டிய விருந்தில் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் கலந்து கொள்ளவில்லை.

RCB: ரூ.16,700 கோடிக்கு விற்பனையான பெங்களூரு அணி; புதிய உரிமையாளர்கள் யார்?

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி மற்றும் பெங்களூர் அணி சமீபத்தில் விற்பனைக்கு வந்தது. இதில் ராஜஸ்தான் அணியை அமெரிக்க தொழிலதிபர் மற்றும் வால்மார்ட், ஃபோர்டு போன்ற முக்கிய நிறுவனங்களின் பங்குதாரர் ஆன கல் சோ... மேலும் பார்க்க

எடப்பாடியில் கே.பழனிசாமி; மைலத்தில் சி.வி.சண்முகம் - முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அதிமுக!

நேற்று (மார்ச்.24) தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறார். அதில், முதல் 23 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை வெளியி... மேலும் பார்க்க

``ஈரான் 'இந்த' 15 பரிந்துரைகளை ஏற்றால்... போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா தயார்" - ட்ரம்ப்

மூன்று வாரமாக ஈரான் மீது கடுமையான தாக்குதலை நடத்திய அமெரிக்கா, இப்போது சற்று 'சமாதன' மோடிற்கு வந்துள்ளது. அதன் விளைவாக, கடந்த திங்கட்கிழமை (மார்ச் 23) ஐந்து நாள்கள் போர் தாக்குதல் நிறுத்தி வைப்பை அறிவ... மேலும் பார்க்க

என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை டு ஜீவிதா நாச்சியார் - சசிகலா வேட்பாளர்கள் லிஸ்ட்டில் இவர்களா?

தொகுதிப் பங்கீட்டை பிரதான கட்சிகள் ஒருவழியாக முடித்து வரும் நிலையில், தன் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, வி.கே.சசிகலா அதிர்ச்சி அளிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. ராமதாஸ், ... மேலும் பார்க்க

'ஃபிரிட்ஜ்க்கு போட்டியாக எல்.இ.டி டிவி?' - 'கதாநாயகனாக' கை கொடுக்குமா திமுக தேர்தல் அறிக்கை?

கூட்டணிக் கணக்குகள் வெற்றிகரமாக முடிந்துவிட்டதால், அடுத்தக்கட்டமாக பிரசாரம் மற்றும் தேர்தல் அறிக்கை வெளியிடுவது குறித்தான ப்ளானில் இறங்கியுள்ளது தி.மு.க.கடந்த ஒரு வாரமாக நடந்து வந்த தி.மு.க வேட்பாளர்க... மேலும் பார்க்க