செய்திகள் :

ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல்: '$200 தொடுமா கச்சா எண்ணெய்?' - இஸ்ரேல் மீது அமெரிக்கா கோபம்

post image

கடந்த 28-ம் தேதியில் இருந்து ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஆனால், அந்த கூட்டணியில் தற்போது விரிசல் எழுந்துள்ளது.

என்ன காரணம்?

கடந்த சனிக்கிழமை (மார்ச் 7), ஈரானின் 30 எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதல் குறித்து முன்னரே இஸ்ரேல் அமெரிக்காவிற்குத் தெரிவித்திருந்ததுதான். ஆனால், இஸ்ரேல் சொன்ன அளவைத் தாண்டி ஈரான் மீது தாக்குதல் நடத்தியதால் அமெரிக்கா அதிருப்தியில் உள்ளது.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

ஈரானின் ராணுவத் தளவாடங்களுடன் இந்த எண்ணெய் கிடங்குகளுக்கு லிங்க் இருந்ததால், தாங்கள் அதன் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறுகிறது.

ஆனால், அமெரிக்காவோ ஈரான் குடிமக்களையும் உலக அளவிலான எண்ணெய் விலையையும் பாதிக்கும் இந்தத் தாக்குதலைக் கொஞ்சமும் விரும்பவில்லை.

மேலும், அமெரிக்க அதிபர் ட்ரம்பைப் பொறுத்தவரை, அவருக்கு எண்ணெய் கட்டமைப்புகள் மீது எந்தத் தாக்குதலும் நடக்கக்கூடாது.

ஈரான் பதில்

இந்தத் தாக்குதல் குறித்து ஈரான் தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் கதம் அல்-அன்பியா கூறியுள்ளதாவது...

"ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல் தொடர்ந்தால், தங்களது பிராந்தியத்தில் இருக்கும் பிற நாடுகளின் எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்துவோம்.

ஈரான் இன்னும் பிற நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகளைக் குறி வைக்கவில்லை.

இனி ஈரான் கட்டமைப்புகள் மேல் தாக்குதல் நடந்தால், உடனே நாங்களும் தாக்குதல் நடத்துவோம்.

இது எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 200 டாலர்கள் வரை உயர்த்தலாம்".

ஈரோடு: 'குலுக்கல் முறையில் தங்கக் காசு' - கூட்டம் சேர்க்க புது ஐடியா; பேசுபொருளாகும் இபிஎஸ் பிரசாரம்

'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற‌ பெயரில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளிலும் ... மேலும் பார்க்க

கரூர் சம்பவம்: `நாளையே நேரில் ஆஜராக' சிபிஐ சம்மன் - கால அவகாசம் கேட்ட விஜய்?

செப்டம்பர் 27, 2025 அன்று கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த ஜனவரி மாதம் டெல்லி சென்று சிபிஐ முன் ஆஜராகி இருந்தார். அப்போ... மேலும் பார்க்க

வயநாடு: `மக்கள் தவறாக நினைப்பார்கள்; தள்ளி நில்லுங்கள்' - மம்மூட்டி, CPM மா.செ இடையே நடந்தது என்ன?

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மல பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதி உருள்பொட்டல் எனப்படும் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்தனர். நூற்றுக்க... மேலும் பார்க்க

தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக திருமாவளவனை மாற்றிய முதல் தேர்தல் வெற்றி! | முதல் களம் 09

திருமாவளவனின் முதல் தேர்தல் வெற்றி!முதல் களம் 09தமிழக அரசியலில் கட்சித் தலைவர்களின் செல்வாக்கு, கூட்டணி பலம் மற்றும் சமூகம் ஆகியவைதான் எப்போதும் முக்கியப் பங்காற்றி வருகின்றன. ஆனால், இந்த நிலையான சூத்... மேலும் பார்க்க