செய்திகள் :

கரூர் சம்பவம்: `நாளையே நேரில் ஆஜராக' சிபிஐ சம்மன் - கால அவகாசம் கேட்ட விஜய்?

post image

செப்டம்பர் 27, 2025 அன்று கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த ஜனவரி மாதம் டெல்லி சென்று சிபிஐ முன் ஆஜராகி இருந்தார்.

அப்போது சிபிஐ-யின் விசாரணை குழு விஜய்யிடம் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில், 'கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குத் தனது கட்சியோ அல்லது அதன் நிர்வாகிகளோ பொறுப்பல்ல.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

மேலும், நான் அங்கேயே இருந்தால் மேலும் குழப்பம் ஏற்படும் என உணர்ந்து நான் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றேன்' என விஜய் கூறியதாக தகவல் வெளியாகியிருந்தது. தேவைப்பட்டால் மீண்டும் இந்த வழக்கில் விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் நாளை (மார்ச்.10) விஜய் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி இருக்கிறது. ஆனால் பல்வேறு திட்டமிட்ட நிகழ்வுகள் இருப்பதால் 10 நாட்கள் கால அவகாசம் வழங்க விஜய் தரப்பில் இருந்து கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

ஈரோடு: 'குலுக்கல் முறையில் தங்கக் காசு' - கூட்டம் சேர்க்க புது ஐடியா; பேசுபொருளாகும் இபிஎஸ் பிரசாரம்

'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற‌ பெயரில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளிலும் ... மேலும் பார்க்க

ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல்: '$200 தொடுமா கச்சா எண்ணெய்?' - இஸ்ரேல் மீது அமெரிக்கா கோபம்

கடந்த 28-ம் தேதியில் இருந்து ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால், அந்த கூட்டணியில் தற்போது விரிசல் எழுந்துள்ளது. என்ன காரணம்? கடந்த சனிக்கிழமை (மார்ச் 7), ஈரானின் 30 எ... மேலும் பார்க்க

வயநாடு: `மக்கள் தவறாக நினைப்பார்கள்; தள்ளி நில்லுங்கள்' - மம்மூட்டி, CPM மா.செ இடையே நடந்தது என்ன?

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மல பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதி உருள்பொட்டல் எனப்படும் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்தனர். நூற்றுக்க... மேலும் பார்க்க

தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக திருமாவளவனை மாற்றிய முதல் தேர்தல் வெற்றி! | முதல் களம் 09

திருமாவளவனின் முதல் தேர்தல் வெற்றி!முதல் களம் 09தமிழக அரசியலில் கட்சித் தலைவர்களின் செல்வாக்கு, கூட்டணி பலம் மற்றும் சமூகம் ஆகியவைதான் எப்போதும் முக்கியப் பங்காற்றி வருகின்றன. ஆனால், இந்த நிலையான சூத்... மேலும் பார்க்க