செய்திகள் :

"ஈரான் போரைத் தொடங்கியதற்காக நான் வருத்தப்பட்டதே இல்லை; காரணம்..." - ட்ரம்ப்

post image

ஈரான் போர் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஹார்முஸ் நீர்ச்சந்தியும் மூடிதான் இருக்கிறது. குறிப்பிட்ட கப்பல்களுக்கு மட்டும் அவ்வப்போது அனுமதி கிடைத்து வருகிறது.

ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடல் அமெரிக்கா, இஸ்ரேலைத் தாண்டி, உலக நாடுகளுக்கே பிரச்னையாக மாறியிருக்கிறது. ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடலால் பெரும்பான்மையான எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது.

இது உலக நாடுகளுக்கு எண்ணெய் கிடைப்பது... எண்ணெய் விலை உயர்வு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. இந்தப் பிரச்னைக்கு அமெரிக்காவும் விதிவிலக்கல்ல.

அமெரிக்கா - ஈரான்
அமெரிக்கா - ஈரான்

அமெரிக்க மக்கள் பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்படுகின்றனர். இந்தப் பாதிப்பு வருகிற நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடக்கவுள்ள மிட்-டேர்ம் தேர்தலில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் குடியரசுக் கட்சியைப் பாதிக்குமோ என்கிற சந்தேகம் எழுந்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திற்குக் கொடுத்த பேட்டியில் ட்ரம்ப், “ஈரான் போரைத் தொடங்கியதற்காக நான் வருத்தப்பட்டதே இல்லை.

ஜனநாயகக் கட்சி அமெரிக்காவில் ஆட்சிக்கு வந்துவிட்டால் தங்களால் சுலபமாக அணு ஆயுதத்தைப் பெற முடியும் என்று நினைத்துக்கொண்டு, என்னை ஆட்சியில் இருந்து தூக்குவதற்குத் தேவையான அனைத்து வழிகளையும் ஈரான் தீவிரமாகச் செய்து வருகிறது.

ஆனால், அவர்களுக்கு அணு ஆயுதம் ஒருபோதும் கிடைக்காது.

ஒருவேளை நாம் எதுவும் கண்டுகொள்ளாமல் இருந்தால், திடீரென ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரித்துவிட்டால் என்னவாகும்? அவர்கள் மனநிலை சரியில்லாதவர்கள். நான் அவர்களோடு பழகியிருக்கிறேன். அவர்கள் அந்தச் சமயத்தை உறுதியாகப் பயன்படுத்துவார்கள்.

இஸ்ரேலையே முற்றிலும் அழித்திருப்பார்கள். மத்தியக் கிழக்கையே நிர்மூலமாக்கியிருப்பார்கள். ஏன், அமெரிக்காவின் சில நகரங்கள் மீதே தாக்குதல் நடத்தத் தொடங்கியிருப்பார்கள்” என்று பேசியிருக்கிறார்.

"துபாய்க்குச் செல்பவர்கள் எல்லாம் ஹவாலா பணத்தைக் கடத்துபவர்களா?"- பினராயி விஜயனின் மருமகன் ஆவேசம்!

கொச்சி சி.எம்.ஆர்.எல் தனியார் தாதுமணல் நிறுவனத்துக்கும், கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனின் எக்ஸாலோஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்கும் இடையே நடந்த பணப் பரிவர்த்தனைகள் குறித்து அம... மேலும் பார்க்க

கொத்தடிமைக் கொடூரம்: ``கர்ப்பிணி மரணம்; சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும்" - திருமாவளவன்

காஞ்சிபுரம் மாவட்டம் சிங்காடிவாக்கத்தில், மர வியாபாரியிடம் வாங்கிய முன்பணத்திற்காக மருத்துவமனைக்கு செல்ல விடாமல் தடுத்ததால், நிறைமாத கர்ப்பிணி தேன்மொழியும் அவரது சிசுவும் கூடாரத்திலேயே உயிரிழந்தனர். இ... மேலும் பார்க்க

நெல்லை: வெறிச்சோடிய உழவர் சந்தை... இரவில் மது அருந்தும் இடமாக மாறிய அவலம்!

திருநெல்வேலி டவுன் பகுதியில் அமைந்துள்ள கண்டியப்பேரி உழவர் சந்தை, ஒரு காலத்தில் விவசாயிகளும் பொதுமக்களும் அதிகம் பயன்படுத்திய இடமாக இருந்தது. ஆனால் தற்போது வியாபாரம் முழுமையாக நின்று, சந்தை வளாகம் வெற... மேலும் பார்க்க

TVK: "மதுராந்தகத்தில் திமுக வென்றால் தவெக ஆட்சி ஜனவரி மாதத்தில் கவிழும்" - ஆர்.எஸ்.பாரதி

செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம் (தனி), திருப்பூர் மாவட்டத்தின் தாராபுரம் (தனி) ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிற... மேலும் பார்க்க

9/11 Anniversary: `குப்பைத் தொட்டி டு புல்லட்' பின் லேடனை அமெரிக்கா கண்டுபிடித்துக் கொன்றது எப்படி?

இதே நாளில் 25 ஆண்டுகளுக்கு முன்பாக அந்தக் கொடூரத் தாக்குதல் நிகழ்ந்தது. அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் மீது தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதல், உலகத்தின் போக்கையே மாற்றியது. அந... மேலும் பார்க்க