செய்திகள் :

உ.பி: தேர்வு எழுதிக்கொண்டிருந்த 12 வயது மாணவனுக்கு மாரடைப்பு: சுருண்டு விழுந்து உயிரிழந்த பரிதாபம்!

post image

இன்றைய காலக்கட்டத்தில் இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிக அளவில் நடந்து வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தவர் அமய் சிங்(12). இம்மாணவன் பள்ளியில் ஆங்கில தேர்வு எழுதினான். தேர்வு எழுதி முடித்துவிட்டு விடைத்தாளை ஆசிரியரிடம் கொடுத்துவிட்டு மீண்டும் தனது இருக்கைக்கு வந்தான். அவன் இருக்கையில் அமர்ந்தவுடன் அப்படியே கீழே சரிந்து விழுந்தான். உடனே பணியில் இருந்த சக ஆசிரியர்களும், ஊழியர்களும் மாணவனுக்கு முதலுதவி சிகிச்சையளிக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

இதையடுத்து மாணவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவனை டாக்டர்கள் சோதித்து பார்த்தபோது அவனுக்கு இருதய துடிப்பு நின்று இருந்தது. இது குறித்து டாக்டர் மனீஷ் சுக்லா கூறுகையில், ''மாணவனை மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோதே அவனுக்கு இருதய துடிப்பு நின்று இருந்தது.

மாணவன் படித்த பள்ளி

அப்படி இருந்தும் நாங்கள் இருதய துடிப்பை மீண்டும் கொண்டு கொண்டு வர முயற்சி செய்தோம். தொடர்ந்து முயற்சி செய்தும் இருதய துடிப்பை மீண்டும் கொண்டு வர முடியவில்லை. இதையடுத்து மாணவன் இறந்ததாக அறிவிக்கப்பட்டான்'' என்றார்.

இளம் வயதில் மாணவன் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருப்பது அவனது பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இறந்து போன மாணவன் அவனது பெற்றோருக்கு ஒரே மகனாவார். ஒரே மகனை பறிகொடுத்த அவரின் தந்தை சந்தீப் சிங் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகி இருக்கிறார்.

கீழக்கரையில் கொடூர விபத்து: நகர்மன்ற தலைவர் கார் மோதி ஐயப்ப பக்தர்கள் உள்பட 5 பேர் பலி

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இன்று அதிகாலை ஐயப்பப் பக்தர்கள் பயணம் செய்த கார்மீது கீழக்கரை நகர்மன்றத் தலைவரின் சொகுசு கார் அதிவேகத்தில் மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இருவரி... மேலும் பார்க்க

MH370: மாயமான மர்ம விமானம்; 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேடும் மலேசியா!

உலக விமான போக்குவரத்து வரலாற்றில் மிகவும் புதிரான கதை மலேசியா ஏலைன்ஸின் MH370 விமானத்தினுடையது. 10 ஆண்டுகளுக்கு முன்பு மர்மமாக காணாமல் போன இந்த விமானத்தை தேடும் பணியை இந்த மாத இறுதியில் மீண்டும் தொடங்... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: கண்மாயில் கவிழ்ந்த வேன்; பட்டாசு தொழிலாளர்களில் ஒருவர் உயிரிழப்பு, 7 பேர் காயம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சம்தவிழ்தான், கோடாங்கிபட்டி, ஏ. ராமலிங்காபுரம் பகுதிகளில் இருந்து தனியார் பட்டாசுத் தொழிற்சாலைக்கு தொழிலாளர்களை அழைத்துச் செல்வதற்காக ஒரு வேன் புறப... மேலும் பார்க்க

ECR: அரசுப் பேருந்து - வேன் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் பலி; தீவிர விசாரணையில் காவல்துறை

காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் இருந்து இன்று (01.12.2025) அதிகாலையில், வேலைக்கு 20 பேரை ஏற்றிக்கொண்டு தனியாருக்குச் சொந்தமான வேன் ஒன்று செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே குன்னத்தூர் கிழக்கு கடற... மேலும் பார்க்க

Accident: `திருப்பத்தூர் பேருந்து விபத்துக்கான காரணம் இதுதான்' - நடத்துனர் கொடுத்த தகவல்

காரைக்குடி–திருப்பத்தூர் சாலையில், பிள்ளையார்பட்டி அருகே காங்கேயத்திலிருந்து காரைக்குடி நோக்கி வந்த அரசுப் பேருந்தும், காரைக்குடியிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் ம... மேலும் பார்க்க

திருப்பத்தூர் பேருந்து விபத்து: 11 பேர் பலி; 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

காரைக்குடி - திருப்பத்தூர் சாலையில் பிள்ளையார்பட்டி அருகே காங்கேயத்திலிருந்து காரைக்குடி நோக்கி வந்த அரசுப்பேருந்தும், காரைக்குடியிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் ம... மேலும் பார்க்க