செய்திகள் :

'எந்த மோதலும் இல்லை' - ஜானி மாஸ்டர் பதிவு; நடன சங்கப் பஞ்சாயத்தை தீர்த்து வைத்த சிரஞ்சீவி

post image

தெலுங்குத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடனக் கலைஞர்கள் சங்கத்தில் சமீபத்தில் ஒரு பிரச்னை.

அந்தச் சங்கத்தின் தலைவர் நடன இயக்குநர் ஜானி மாஸ்டரின் மனைவி சுமலதா ஆவார். சங்கத்தில் சில நிர்வாகிகளுக்கான தேர்தலை சங்க உறுப்பினர்களிடம் கலந்தலோசிக்காமல் சுமலதா முடிவு செய்திருக்கிறார்.

இது ஜானி மாஸ்டர் அணிக்கும், இன்னொரு நடன இயக்குநர் ஆன சேகர் மாஸ்டர் அணிக்கும் பிரச்னையாக வெடித்துள்ளது.

இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வர நடிகர் சிரஞ்சீவி இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.

ஜானி மாஸ்டர் - நடிகர் சிரஞ்சீவி - சேகர் மாஸ்டர்
ஜானி மாஸ்டர் - நடிகர் சிரஞ்சீவி - சேகர் மாஸ்டர்

இது குறித்து ஜானி மாஸ்டர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...

"கடந்த இரண்டு நாள்களாக சில தவறான வீடியோக்களும், பொய் செய்திகளும் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

நான் ஒன்றை இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனக்கும் சேகர் மாஸ்டர் அண்ணாவிற்கும் இடையே எந்தவொரு கருத்து வேறுபாடோ அல்லது மோதலோ கிடையாது. நாங்கள் அனைவரும் ஒரே குடும்பம், எப்போதும் ஒருவருக்கொருவர் துணையாகவே நின்றுள்ளோம்.

இந்த வதந்திகள் பரவிய பிறகு, மெகாஸ்டார் சிரஞ்சீவி காரு படப்பிடிப்பு தளத்தில் எங்களிடம் நேரில் பேசினார். நாங்கள் அனைவரும் ஒன்றாக நேரம் செலவிட்டோம். மகிழ்ச்சியாகப் பேசினோம். ஒன்றாக மதிய உணவும் சாப்பிட்டோம். அவருடைய அன்பும், வழிகாட்டுதலும், ஆதரவும் எங்களுக்கு எல்லாமே.

தயவுசெய்து யாரும் இத்தகைய ஆதாரமற்ற வதந்திகளை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம். அன்பு, மரியாதை மற்றும் நேர்மறை எண்ணங்களுடன் நாம் எப்போதும் ஒன்றாகத் தொடர்ந்து பயணிப்போம்".

Vikatan Cinema Awards மேடையில் 'South Indian Icon' நடிகை கீர்த்தி சுரேஷ்! | Photo Album

Vikatan Cinema Awards: "அடுத்த படத்துல இருந்து எனக்கு சம்பளம் தரணும்!" - 'சிறை' அக்‌ஷய் குமார் கலகல| Live மேலும் பார்க்க

'தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்' எஸ்.ஜானகி மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்!

புகழ்பெற்ற பின்னணி பாடகியான எஸ். ஜானகி 'தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்' மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.முதல்வர் விஜய் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், `இந்தியத் திரையிசை உலகில் த... மேலும் பார்க்க

இசைக்குயில் எஸ்.ஜானகி காலமானார் - மைசூரில் உயிர் பிரிந்தது!

இசைக்குயில் எனத் தென்னிந்தியத் திரையுலகம் கொண்டாடிய பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி, இன்று மாலை மைசூரில் காலமானார். அவருக்கு வயது 88.ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்திலுள்ள பலல்படலா என்ற ஊரில் 1938, ... மேலும் பார்க்க

பாரதிராஜாவும் பாக்யராஜும் – நாம் கொண்டாடத் தவறிய 5 அரிய திரைப்படங்கள்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க