செய்திகள் :

"ஏற்கனேவே சொல்லிவிட்டேனே... அவங்களுக்கு இடமில்லை!"- அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி திட்டவட்டம்

post image

டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்.

இந்நிலையில் இன்று (ஜன.8) டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, "எந்தெந்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்பதை வெளிப்படையாகச் சொல்ல முடியாது.

பாமக எங்களுடன் வந்து இணைந்திருக்கிறார்கள். அதுபோல இன்னும் சில கட்சிகள் எங்களுடன் வந்து இணையும்.

எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா
எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா

அதிமுகவில் ஓ. பன்னீர் செல்வம் சேருவதற்கு வாய்ப்பில்லை. சசிகலாவுக்கும் இடமில்லை.

அதிமுக வலிமையாகத் தான் இருக்கிறது. அமித் ஷாவும், நானும் சேர்ந்து எங்கள் கூட்டணியை அறிவித்தப்போதே அவர் எங்கள் உட்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்று தெரிவித்துவிட்டார்.

அதிமுக-வில் டிடிவி, ஓ.பி.எஸ், சசிகலாவுக்கு இடமில்லை என்று ஏற்கனேவே சொல்லிவிட்டேன்.

திமுகவும் தான் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தது. நாங்கள் வைக்கும்போது மட்டும் கேள்வி கேட்கிறார்கள்.

கூட்டணி என்பது அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றமாதிரி தான் மாறும். ஸ்டாலின் அவர்கள் அண்மையில் உறுதியளிக்கப்ட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அது அரசு ஊழியர்களை ஏமாற்றும் திட்டம். எங்கள் 5 ஆண்டு ஆட்சி சிறப்பாக நடைப்பெற்றது.

ஆனால் திமுக ஆட்சியில் அவ்வளவு ஊழல் நடந்திருக்கிறது. திமுக இந்தத் தேர்தலில் தோல்வி பெறுவது உறுதி" என்று பேசியிருக்கிறார்.

Greenland: ``எங்கள் எல்லையில் நுழைந்தால் சுடுவோம்" - அமெரிக்காவை எச்சரிக்கும் டென்மார்க்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், டென்மார்க்கின் கிரீன்லாந்தைக் கைப்பற்ற விரும்புவதாகத் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வருகிறார்.ஆர்க்டிக் பகுதியில் உள்ள இயற்கை வளங்கள் மற்றும் ராணுவ ரீதியான முக்கியத... மேலும் பார்க்க

49-வது புத்தகக் காட்சி: `எழுத்துக்களைப் படிக்க படிக்க எண்ணங்கள் மலரும்..!' - முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 49-வது புத்தகக் காட்சியை, Ymca மைதானத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை (08-01-2026) தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், ``அறிவு சங்கமத்தை, அறிவு திருவிழாவை தொடங்கி வைப்பதில் மிகு... மேலும் பார்க்க

'மத்திய அரசாங்கத்தின் பெயரைக்கூட சொல்ல விரும்பவில்லை; அது வேண்டாத அரசாங்கம்' - அமைச்சர் ஐ.பெரியசாமி

திண்டுக்கல், ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட சித்தையன் கோட்டை பேரூராட்சியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பினை வ... மேலும் பார்க்க

`நாளை எடப்பாடியை சந்திக்கிறேன்; எங்கள் கூட்டணியில் எந்த நெருக்கடியும் கிடையாது'- நயினார் நாகேந்திரன்

புதுக்கோட்டை மாவட்டம், கல்லாலங்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்,"நாளை எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்கப் போகிறேன். ஏற்கெனவே, பா.ம.க கூட்டணியில் வந்துள்ள... மேலும் பார்க்க

`வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது' - வேதாந்தா குழும தலைவரின் மகன் மரணம் - யார் இந்த அக்னிவேஷ்?

வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் மகன் அக்னிவேஷ் அகர்வால் காலமாகியிருக்கிறார். வேதாந்தா குழுமம் இந்தியா மட்டுமன்றி பல நாடுகளிலும் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டின் தூத்துக்குடியில... மேலும் பார்க்க