'மோடியின் வசூல் வேட்டை தொடர்கிறது' - வணிக சிலிண்டர் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கண...
கடலூர்: GRT ஜுவெல்லர்ஸின் புதிய பிரம்மாண்ட ஷோரூம்: வாடிக்கையாளர்களுக்கு சிறப்புச் சலுகைகள்!
1964-ம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் காலத்தால் அழியாத கைவினைத்திறன் ஆகியவற்றுடன் அடையாளமாக விளங்கும் ஜி.ஆர்.டி ஜுவெல்லர்ஸ், கடலூர் இம்பீரியல் சாலையில் இன்னும் பெரிதான, பிரம்மாண்டமான ஷோரூமிற்கு இடம் மாறுகிறது என்பதை பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். இந்த பிரம்மாண்டமான திறப்புவிழா கடலூர் நகை ஆர்வலர்களுக்கு புதிய அத்தியாயமாக இருக்கும்.

உன்னதமான நகை வாங்கும் அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த புதிய ஷோரூம் நிகரற்ற கலைநேர்த்தியுடன் வடித்த தங்கம், வைரம், வெள்ளி, பிளாட்டினம் மற்றும் ரத்தின நகைகளின் தனித்துவமான கலெக்ஷன்களை வழங்குவதோடு, காலங்காலமாக வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கிவருகிறது.
இந்த சுப ஆரம்பத்தை கொண்டாடும் வகையில், ஜி.ஆர்.டி ஜுவெல்லர்ஸ் பல சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. தங்க நகைகளில் கிராமுக்கு ரூ.250 குறைவு, பழைய தங்கம் எக்சேஞ்சில் கிராமுக்கு கூடுதலாக ரூ.100, சாலிட்டேர் தவிர அன்கட் வைரங்கள் மற்றும் வைரத்தின் மதிப்பில் காரட்டுக்கு 12.5% குறைவு. மேலும், வெள்ளிப் பொருட்களுக்கு 25% வரை சேதாரத்தில் (VA) குறைவு, வெள்ளி நகைகளில் MRP-இல் 10% குறைவு என, ஜி.ஆர்.டி ஜுவெல்லர்ஸ் வாடிக்கையாளர்களுக்கு பல வெகுமதிகளை வாரி வழங்குகிறது.

இந்த கிளையின் தொடக்க விழாவைப் பற்றிப் பேசும் போது, ஜி.ஆர்.டி ஜுவெல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். ஆனந்த் அனந்தபத்மநாபன் அவர்கள் கூறியதாவது:
“கடலூர் இம்பீரியல் சாலையில் திறக்கப்படவுள்ள எங்களது புதிய ஷோரூம் அதிக இடவசதி மற்றும் சௌகரியத்துடன் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக சேவையளிக்கும் முக்கியமான முன்நகர்வாகும். அதே வேளையில் நம்பிக்கைக்குரிய GRT அனுபவத்தை தொடர்ந்து வழங்குவதோடு, வாடிக்கையாளர்களுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். வாடிக்கையாளர்களின் அன்பும் ஆதரவும்தான் எங்களுக்கு மேலும் வளரவும், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான நகை வாங்கும் அனுபவத்தை உருவாக்கும் உத்வேகத்தை வழங்குகிறது.”
மேலும் இது குறித்து பேசிய, ஜி.ஆர்.டி ஜுவெல்லர்ஸின் மற்றொரு நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில்:
“எங்கள் பயணத்தில் ஒவ்வொரு மைல்கல்லும், எங்கள் மீது வாடிக்கையாளர்கள் வைக்கும் நம்பிக்கையினால்தான் சாத்தியமாகிறது. கடலூர் ஷோரூமை பெரிய இடவசதியோடு கூடிய புதிய இடத்திற்கு மாற்றியது எங்களுக்கு ஒரு பெருமையான தருணம். எங்கள் புதிய ஷோரூமிற்கு வருகை தந்து பொன்னான புதிய அனுபவத்தை பெறவும், வியக்கவைக்கும் பிரம்மாண்ட நகை கலெக்ஷன்களுடன் சிறப்பான தொடக்க சலுகைகளையும் பெற்று மகிழ அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.”















