செய்திகள் :

கமுதி: கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சோகம்

post image

ராமநாதபுரத்தை சேர்ந்தவர் சோலையப்பன் (67). ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி(60) இவர்களது மகன் சோலைசெல்வம்(30), இவரது மனைவி கோகிலா(32) மற்றும் இவர்களது இரு குழந்தைகள் உள்ளிட்ட ஆறு பேர் விருதுநகர் மாவட்டம் தும்முசினம்பட்டி கிராமத்திற்கு சிவராத்திரியை முன்னிட்டு தங்களது குலதெய்வ கோயிலுக்கு காரில் சென்றுள்ளனர்.

குலதெய்வ கோயிலில் சாமி கும்பிட்ட பின் திங்கள்கிழமை காலை ராமநாதபுரத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். பரளச்சி அருப்புக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்த இவர்களது கார், அய்யனார்குளம் கிராமம் அருகே எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க காரினை ஓட்டிய சோலை செல்வம் காரினை திருப்பியுள்ளார். அப்போது எதிரே வந்த மற்றொரு கார் மீது சோலையப்பன் குடும்பத்தினர் சென்ற கார் நேருக்கு நேர் மோதியது.

விபத்தில் உருக்குலைந்த கார்கள்

இதில் சோலையப்பன் மற்றும் காரை ஓட்டி வந்த அவரது மகன் சோலை செல்வம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த கமுதி காவல்துறையினர் விபத்தில் காயமடைந்த விஜயலட்சுமி, கோகிலா மற்றும் இரு குழந்தைகளையும் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் உயிரிழந்த இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.

இதனிடையே மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த விஜயலட்சுமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்த இருவரின் உடல்களை கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகவும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் இந்த விபத்து குறித்து கமுதி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கேரளா: பாங்கோடு ராணுவ முகாமில் டிஜே பார்ட்டி; 2 யானை தந்தங்கள் கொள்ளை... விசாரணை நடத்தும் போலீஸ்!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் பாங்கோட்டில் மெட்ராஸ் ரெஜிமென்ட் மிலிட்டரி கேம்ப் உள்ளது. 24 மணிநேரமும் பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் இந்த முகாமுக்குள், அனுமதி இல்லாமல் யாரும் நுழையமுடியாது. இங்கு ... மேலும் பார்க்க

ஒரே வீட்டில் மனைவி, காதலி: பணம் கேட்ட இன்ஸ்டா காதலியை கொன்று செப்டிங் டேங்கில் போட்ட காதலன்!

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள நிஷத்புரா என்ற இடத்தை சேர்ந்தவர் சமீர். இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா என்ற இடத்தை சேர்ந்த ஷியா என்ற பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூ... மேலும் பார்க்க

சிகரெட் வியாபாரியை தாக்கி செல்போன் பறித்த இளைஞர்கள் - 7 கி.மீ விரட்டிப் பிடித்த போலீஸார்!

தூத்துக்குடியில் எஸ்.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினகரன். சிகரெட் மொத்த வியாபாரியான இவர், மடத்தூர் பகுதியில் உள்ள ஒரு கடையில் சிகரெட் பாக்கெட்டுகளை விற்பனை செய்துவிட்டு, அருகில் உள்ள மற்றொரு கடையில்... மேலும் பார்க்க

துருக்கி: நகைக்கடையில் திருடி விட்டு கழுதையில் ஏறி தப்பிய நபர்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

துருக்கியில் நகைக்கடை ஒன்றில் திருடிவிட்டு ஒருவர் சர்வ சாதாரணமாகத் தனது கழுதையில் ஏறிச்சென்ற சம்பவம் வைரலாகி இருக்கிறது. அங்குள்ள காய்சரி என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.அங்குள்ள நகைக்கடை ஒன்... மேலும் பார்க்க

அமெரிக்கா: இந்திய மாணவர் கலிபோர்னியாவில் மர்ம மரணம்; தூதரகம் சொல்வது என்ன?

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், மாயமான இந்திய மாணவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் சாகேத் ஸ்ரீனிவாசய்யா (22). இவர் கலிபோர்னியா பல்கல... மேலும் பார்க்க

நொய்டா: காதலர் தினத்தில் முடிந்த 15 ஆண்டுக் காதல்; காதலியைச் சுட்டுக்கொன்று தற்கொலை செய்த காதலன்

நொய்டாவில் காதலர் தினத்திற்காகச் சந்தித்துக் கொண்ட ஜோடி காரில் பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நொய்டாவில் கார் ஒன்று அனாதையாக நின்று கொண்டிருந்தது.இது குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் போல... மேலும் பார்க்க