`அந்த வலையில் மாட்டிக்கொண்டேன்...'- நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு இளம்பெண் ...
கர்நாடகா: முகாமில் திடீரென மோதிக்கொண்ட யானைகள்; இடையே சிக்கிய சென்னை இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
கர்நாடக மாநிலத்திலுள்ள குடகு மாவட்டத்தில் யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், சென்னையைச் சேர்ந்த 33 வயதான பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கர்நாடகா துபாரே யானைகள் முகாமைச் சேர்ந்த இரண்டு யானைகள் காவிரியாற்றில் குளித்துக்கொண்டிருந்தன.

'கஞ்சன்' மற்றும் 'மார்த்தாண்டா' அஆகிய இரண்டு யானைகள் குளித்துக்கொண்டிருப்பதைச் சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த ஜின்மு என்கிற 33 வயதுப் பெண்ணொருவர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.
திடீரெனக் குளிப்பாட்டப்பட்டுக்கொண்டிருந்தபோது யானைகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இதனால் அங்கே திடீரெனப் பரபரப்பு நிலவியது. யானைப்பாகனும் யானையைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தும் அது தோல்வியில் முடிந்தது.
கஞ்சன் என்கிற யானை மார்த்தண்டா யானையை வலுவாக மோதியது. இதனால் மார்த்தண்டா யானை கீழே விழுந்தது. இதன் அருகில் நின்றுகொண்டிருந்த ஜின்மு என்பவர் யானையின் கீழ் சிக்கி உயிரிழந்தார்.

இது தொடர்பான விரிவான விசாரணைக்குக் கர்நாடக வனத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் உயிரியல் துறை மந்திரி ஈஸ்வர் கந்த்ரே உத்தரவிட்டிருக்கிறார்.
இனிவரும் நாட்களில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பைப் பின்பற்றுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியிருக்கிறார்.

















