செய்திகள் :

காந்தாரா விவகாரம்: 'சாமுண்டீஸ்வரி அம்மனிடம் மன்னிப்புக் கேட்ட ரன்வீர் சிங்' - கோயில் நிர்வாகம் தகவல்

post image

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா சாப்டர்-1' (Kantara Chapter-1) திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படம் குறித்து கோவாவில் நடைபெற்ற ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழாவில், நடிகர் ரன்வீர் சிங் பேசினார்.

அப்போது, காந்தாரா-வில் சித்தரிக்கப்பட்ட 'தெய்வ' கதாப்பாத்திரத்தை இமிடேட் செய்யும் வகையில் செய்கை செய்தார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

இந்த நிலையில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த ஒருவர், ``எங்கள் நம்பிக்கையைப் புண்படுத்தும் வகையில் ரன்வீர் சிங் செயல்பட்டிருக்கிறார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனப் பொது மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றத்தில், ரன்வீர் சிங் எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டிருந்தார்.

சாமுண்டீஸ்வரி அம்மனிடம் மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்
சாமுண்டீஸ்வரி அம்மனிடம் மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்
சாமுண்டீஸ்வரி அம்மனிடம் மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்
சாமுண்டீஸ்வரி அம்மனிடம் மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்
சாமுண்டீஸ்வரி அம்மனிடம் மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்
சாமுண்டீஸ்வரி அம்மனிடம் மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

அதைத் தொடர்ந்து, அவர் மீதான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த மே 5, 2026 அன்று ரத்து செய்தது. மேலும், தனது நடத்தைக்குப் பரிகாரம் தேடும் வகையில் நான்கு வாரங்களுக்குள் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்குச் சென்று நடிகர் ரன்வீர் சிங் வழிபட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில், மைசூரில் உள்ள சாமூண்டீஸ்வரி கோயிலுக்கு நடிகர் ரன்வீர் சிங் நேற்று சென்றிருக்கிறார்.

இது தொடர்பாக சாமுண்டீஸ்வரி கோயில் செயல் அலுவலர் எம்.ஜே.ரூபா, ``நடிகர் ரன்வீர் சிங் எங்களுக்கு எந்த முன்னறிவிப்புமின்றி திடீரென வந்தார். கூட்டம் இல்லாத அதிகாலை நேரத்தில், ஒரு சாதாரண பக்தரைப் போல மாஸ்க் அணிந்து வந்திருந்தார். காலை 7.30 மணியளவில் கோயிலுக்கு வந்த அவர், அர்ச்சகர் சுனிலிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, தான் அம்மனிடம் மன்னிப்புக் கேட்க வந்திருப்பதாகக் கூறினார்.

இதையடுத்து அர்ச்சகர் அவரை கர்ப்பக்கிருகத்திற்கு அழைத்துச் செல்ல, அங்கு அவர் சிறப்புப் பிரார்த்தனை செய்தார். பிரார்த்தனை முடிந்த உடனேயே, பக்தர்கள் வரத் தொடங்குவதற்கு முன்பே அவர் கோயில் வளாகத்தை விட்டு வெளியேறிவிட்டார்" என்றார்.

டான் 3: திடீரென வெளியேறிய ரன்வீர் சிங்; ரூ.45 கோடி கேட்கும் தயாரிப்பாளர்! - தொழிற்சங்கம் வைத்த செக்

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் டான் 3 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். இதையடுத்து டான் 3 படத்தயாரிப்பு குழு படத்தயாரிப்புக்கு தேவையான வேலைகளில் இயக்குனர் பர்ஹான் அக்தர் ஈடுபட்டிருந்தார். ஆனால் திட... மேலும் பார்க்க

"சூழ்நிலைக் கட்டாயத்திற்காக உங்கள் விருப்பங்களை மாற்றிக்கொள்ளக் கூடாது! - ஐஸ்வர்யா ராய் அறிவுரை!

79-வது கான் திரைப்பட விழா நேற்றோடு முடிவடைந்திருக்கிறது. லோரியல் பாரிஸ் பிராண்டின் அம்பாசிடராகப் கான் திரைப்பட விழாவில் பல வருடங்களாக தொடர்ந்து பங்கேற்று வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன். இந்தாண்ட... மேலும் பார்க்க

பரோலில் வெளியே வந்து தப்பித்த கொலைக் குற்றவாளி; 12 ஆண்டுகள் பாலிவுட் நடிகராக வலம்; சிக்கியது எப்படி?

குஜராத் மாநிலத்தில் நடந்த கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்றவர் ஹேமந்த் நகின் தாஸ். 2005 ஆண்டு நடந்த கொலை ஒன்றில் ஹேமந்திற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. அவர் மகாசனா சிறையில் தண்டனை அனு... மேலும் பார்க்க

"எதிர்பாராத விதங்களில் வாழ்க்கையில் பயணிக்கும் கதை!" - நடிகராகும் ராஜ்குமார் ஹிரானியின் மகன்

பல கல்ட் கிளாசிக் பாலிவுட் திரைப்படங்களைக் கொடுத்த இயக்குநரும் தயாரிப்பாளருமான ராஜ்குமார் ஹிரானி தற்போது “ப்ரீதம் அண்ட் பெட்ரோ” என்ற இணையத்தொடரை தயாரித்துள்ளார். இந்தத் தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத... மேலும் பார்க்க

"இறந்தாலும் எங்களுடன்தான் இருக்கவேண்டும்" - புதைத்த நாயை நள்ளிரவில் தோண்டி எடுத்து வந்த ஷாருக்கான்

பாலிவுட் நடிகர்கள் அனைவருமே நாய்கள் மீது அதிக பாசம் வைத்து இருக்கின்றனர். ஒவ்வொரு நடிகரும் ஒன்றுக்கும் மேற்பட்ட நாய்களை வைத்திருக்கின்றனர். நடிகர் ஷாருக்கானிடம் முதலில் 4 நாய்கள் இருந்தன. அவற்றின் மீத... மேலும் பார்க்க

"உயரத்தால் பட வாய்ப்புகளை இழந்தேன்; ஆனால் சல்மான் கான் மட்டுமே..." - 'ஆசை' பட நடிகை பூஜா பத்ரா

உத்தரப் பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த பூஜா பத்ரா, அஜித் நடித்த ஆசை படத்தில் படத்தில்தான் சிறப்பு தோற்றத்தில் நடித்து முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் தெலுங்கு, இந்தி, மலையாளம் எனப் ப... மேலும் பார்க்க