செய்திகள் :

`குடும்பத்தை நாசமாக்கியவர்' - பா.ஜ.க எம்.எல்.ஏ-வான மனைவியை விவாகரத்து செய்கிறாரா முலாயம் சிங் மகன்?

post image

சமாஜ்வாடி கட்சியின் தலைவரான முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் இப்போது கட்சிக்குத் தலைமை ஏற்றுள்ளார். மற்றொரு மகனான பிரதீக் யாதவ் அரசியலில் ஈடுபடவில்லை. அவர் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். முலாயம் சிங் யாதவின் இரண்டாவது மனைவியான சாத்னா குப்தாவின் மகனான பிரதீக், அபர்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இத்தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். அபர்ணா பா.ஜ.க சார்பாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். எப்போதும் ஆடம்பர வாழ்க்கையை விரும்பும் பிரதீக்கிடம் ரூ.5 கோடி மதிப்புள்ள லம்போர்கினி கார் உட்பட ஏராளமான கார்கள் உட்பட பல வசதிகள் இருக்கிறது.

இது தவிர லக்னோவில் மிகவும் பிரபலமான ஜிம் ஒன்று இருக்கிறது. அபர்ணா தேர்தலில் போட்டியிட்ட போது தங்களுக்கு ரூ.15 கோடிக்கு சொத்து இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. பிரதீக் இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், தனது மனைவி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இருக்கிறார்.

அவர் தனது பதிவில், ``உறவுகளை அவர் நாசப்படுத்திவிட்டார். அவர் புகழையும் செல்வாக்கையும் தேடுகிறார். விளம்பரம் மற்றும் அரசியல் செல்வாக்கின் மீதான அவரது கவனம் குடும்ப உறவுகளில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இப்படிப்பட்ட ஒரு மோசமான ஆத்மாவை நான் பார்த்ததே இல்லை. ஆனால் நான் மனதளவில் ஒரு கடினமான காலகட்டத்தைக் கடந்துகொண்டிருக்கிறேன். என் மனைவி எனது நிலை குறித்து அக்கறையின்றி தன்னைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறாள். அவள் ஒரு கெட்ட குணம் கொண்டவள். அவளைத் திருமணம் செய்துகொண்டது எனது துரதிர்ஷ்டம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் எழுதிய அந்தப் பதிவு வைரலாகி இருக்கிறது. மேலும் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெறப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். பிரதீக் குற்றச்சாட்டு குறித்து அவரது மனைவியிடமிருந்து இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை. அதோடு பிரதீக் விவாகரத்துக்காக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்துள்ளாரா என்பது குறித்தும் தெரியவில்லை. அபர்ணா யாதவ் கடந்த 2022ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பா.ஜ.கவில் சேர்ந்தார். 2017ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சி சார்பாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

கவுன்சிலர்கள் கட்சி தாவும் அபாயம்; ஹோட்டலில் வைத்து பாதுகாக்கும் ஷிண்டே; என்ன நடக்கிறது மும்பையில்?

மும்பை மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.க 89 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் ஆட்சியைப் பிடிக்க 114 கவுன்சிலர்களின் ஆதரவு தேவையாக இருக்கிறது.பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சியா... மேலும் பார்க்க

ட்ரம்பிற்கே tariff-ஆ? - தனித்துவிடப்படுமா அமெரிக்கா? - ஒன்றுகூடும் ஐரோப்பிய நாடுகள்!

‘பாதுகாப்புக் காரணங்களுக்காக’ கிரீன்லேண்டைப் பிடித்தே தீர வேண்டும் என்கிற கடும் முயற்சியில் இருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ஆனால், அவருக்குத் தேவையான ஆதரவை நேட்டோ நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் தர... மேலும் பார்க்க

ஓய்வூதியத் திட்டம்: "அரசு ஊழியர்களைக் கொச்சைப்படுத்தும் பழனிசாமி ஏன் பதறுகிறார்?" - அன்பில் மகேஸ்

"2003-ஆம் ஆண்டில் ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து அரசு ஊழியர்களின் எதிர்காலத்தையே நிர்முலமாக்கிய அதிமுக இப்போது ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறது? பழனிசாமி ஏன் பதறுகிறார்?" என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்... மேலும் பார்க்க

"சாதிப் பாகுபாட்டை ஒழிக்க வேண்டுமானால், முதலில்..." - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சொல்வது என்ன?

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக, மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் நிகழ்ச்சி நடைபெற்றது.அதில் கலந்துகொண்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலா... மேலும் பார்க்க

கருணாநிதி விரும்பியது நாகை, அண்ணா சொன்னது குளித்தலை; காங்கிரஸை கதிகலங்க வைத்த உத்தி | முதல் களம் - 2

`முதல்’ - தமிழக தேர்தல் வரலாற்றில் பல்வேறு தலைவர்கள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அப்படியான தலைவர்களின் முதல் தேர்தலும் அதனை சுற்றி நடந்த முக்கிய சம்பவங்களும் சுவாரஸ்ய தகவல்களின் தொகுப... மேலும் பார்க்க

'பல சிரமங்களை இதுவரை சகித்துக்கொண்டிருந்தேன்' - பா.ஜ.க-வில் இணைந்த சி.பி.எம் முன்னாள் எம்.எல்.ஏ

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் சட்டசபை தொகுதியில் 2006, 2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் சி.பி.எம் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ராஜேந்திரன். கடந்த முறை அந்த தொகுதியில் போட்டிய... மேலும் பார்க்க