செய்திகள் :

கேரளம்: புதிய மாவட்டங்கள் உருவாக்க திட்டம்; திரூர், மூவாற்றுப்புழாவில் முதற்கட்ட நடவடிக்கை!

post image

கேரள மாநில நிர்வாகத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றமாக, புதிய மாவட்டங்கள் மற்றும் 12 புதிய தாலுக்காக்களை உருவாக்குவதற்கான திட்டங்களுக்கு காங்கிரஸ் அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது. நீண்டகாலமாகப் பரிசீலனையில் இருந்த இந்த கோரிக்கை, மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. கேரள அரசு பரிசீலித்து வரும் திட்டத்தின்படி, திரூர் மற்றும் மூவாற்றுப்புழா ஆகிய பகுதிகள் புதிய மாவட்டங்களின் தலைமையிடங்களாகச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, நில வருவாய் ஆணையர் தலைமையிலான உயர்நிலைக் குழு நியமிக்கப்பட்டு, மாவட்ட உருவாக்கம் மற்றும் அதற்கான நிதித் தேவைகள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மலப்புறம் மாவட்டத்தைப் பிரித்து, திரூரை மையமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாகிறது. 47 லட்சம் மக்கள் தொகையையும், 3,550 சதுர கிலோமீட்டர் பரப்பளவையும் கொண்ட மலப்புறம் மாவட்டம், தற்போது கேரள மாநிலத்திலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டமாக உள்ளது. புதிய மாவட்டத்தில் தானூர், திரூரங்காடி, பொன்னானி ஆகிய தாலுக்காக்கள் இணைக்கப்படும். நிர்வாகத் தேவையைப் பொறுத்து பாலக்காடு மற்றும் திருச்சூர் மாவட்டங்களின் சில பகுதிகளும் இதில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகளை உள்ளடக்கி மூவாற்றுப்புழாவை மையமாக வைத்து புதிய மாவட்டம் உருவாக்கப்பட உள்ளது. இதில் மூவாற்றுப்புழா, கோதமங்கலம், பிறவம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும், பெரும்பாவூரின் சில பகுதிகளும் இடம்பெற வாய்ப்பு உள்ளது.​

கேரளா

புதிய மாவட்டங்கள் உருவாக்கம் என்பது அரசியல் கட்சிகளின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வருகிறது. மலப்புறம் மாவட்டத்தைப் பிரிப்பது முஸ்லிம் லீக் கட்சியின் கோரிக்கையாகவும், மூவாற்றுப்புழா மாவட்டம் உருவாக வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் நீண்டகாலத் திட்டமாகவும் இருந்துவருகிறது. 1982-ல் அப்போதைய முதல்வர் கே.கருணாகரன் மூவாற்றுப்புழா மாவட்டம் குறித்து அறிவித்திருந்தாலும், பல்வேறு அரசியல் சூழல்களால் அது நடைமுறைக்கு வரவில்லை. 1969-ம் ஆண்டின் மக்கள் தொகையை கணக்கிடும்போது, அதைவிட மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் தொகை மூன்று மடங்கிற்கும் மேல் அதிகரித்திருப்பதால், நிர்வாக வசதிக்காக மாவட்டத்தை பிரிப்பது தவிர்க்க முடியாததாகியுள்ளது. புதிய மாவட்டங்களை உருவாக்குவதில் நிதி ஒதுக்கீடு மிகப்பெரிய சவாலாக உள்ளது. புதிய மாவட்டத்திற்குத் தேவையான ஆட்சியர் அலுவலகம், சிவில் ஸ்டேஷன், எஸ்.பி அலுவலகம், அரசு மருத்துவமனைகள் மற்றும் இதர அரசு அலுவலகங்களை அமைப்பதற்குப் பெரும் நிதி தேவைப்படும். மேலும், புதிய அலுவலகங்களுக்குத் தேவையான ஆயிரக்கணக்கான அரசுப் பணியிடங்களை உருவாக்குவதும் சவாலான காரியம். இருந்தபோதிலும், மக்கள் எளிதாக அரசு சேவைகளைப் பெறுவதை உறுதி செய்ய இந்த நிதி ஒதுக்கீடு அவசியம் என்று அரசு கருதுகிறது.

கேரளம்

அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, கேரளாவில் மாவட்டங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. சுமார் 3.5 கோடி மக்கள் தொகை கொண்ட கேரளாவில் தற்போது 14 மாவட்டங்கள் மட்டுமே உள்ளன. ஆனால், இதே அளவு மக்கள் தொகை அல்லது சற்றே கூடுதல் மக்கள் தொகை கொண்ட பிற மாநிலங்கள் அதிக எண்ணிக்கையிலான மாவட்டங்களைக் கொண்டுள்ளன. உதாரணமாக, 7.76 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களும், 3.6 கோடி மக்கள் தொகை கொண்ட அசாமில் 35 மாவட்டங்களும் உள்ளன. தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களும் மக்கள் தொகை அடர்த்திக்கு ஏற்ப மாவட்டங்களைப் பிரித்துள்ளன.

​வரும் காலங்களில் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் தரவுகளின் அடிப்படையில், நிலப்பரப்பு மற்றும் நிர்வாக வசதிகளைக் கருத்தில் கொண்டு, திரூர் மற்றும் மூவாற்றுப்புழா மட்டுமின்றி, தேவைப்படும் பிற இடங்களிலும் புதிதாக 5 மாவட்டங்களை ஏற்படுத்த திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"திமுகவும் அதிமுகவும் இணைந்து ஒரே கட்சியாகச் செயல்பட்டால்கூட..." - பெ. சண்முகம் கருத்து!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், வருங்காலத்தில் அதிமுகவும் திமுகவும் இணைந்து ஒரே கட்சியாக செயல்பட்டால்கூட ஆச்சர்யப்படுவதற்கு இல்லை எனக் குறிப்பிட்டு அவருடைய சமூக வலைதள... மேலும் பார்க்க

மோடி - ட்ரம்ப் என்ன பேசினார்கள்? - சசி தரூர் Vs காங்கிரஸ் வெடித்த பிரச்னை

நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர். இவர் காங்கிரஸ்காரர் தான். ஆனால், அவ்வப்போது இந்திய பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் புகழ்ந்து தள்ளுவார். இது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தும். அப்படியான ... மேலும் பார்க்க

தள்ளி நிற்கும் ஸ்டாலின்... நெருக்கம் காட்டும் ராகுல் - காங்கிரஸ் போடும் கணக்கு என்ன?

"அன்புச் சகோதரர்" மிஸ்ஸிங்மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு (ஜூன் 19), எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியான வாழ்த்துச் செய்திகளும், அதற்கான பதில்களும் தற்போதைய இந்திய மற... மேலும் பார்க்க

சர்வதேச யோக தினம்: '50 வயதில் இருந்ததை விட 70 வயதில்.!' - மோடி பேசிய 6 முக்கிய புள்ளிகள்!

இன்று 12-வது சர்வதேச யோக தினம். இந்த ஆண்டு இந்திய பிரதமர் மோடி கொல்கத்தாவில் நடந்த யோக நிகழ்வில் கலந்துகொண்டிருக்கிறார். அந்த நிகழ்வில் மோடி பேசிய முக்கிய விஷயங்கள்...> ஒட்டுமொத்த நாடும் யோகாவின் ஆ... மேலும் பார்க்க

ட்ரம்ப் VS மெலோனி: மோதிக்கொள்ளும் தலைவர்கள்; சிக்கலில் மெலோனியின் சர்வதேச அதிகாரம்!

நெருங்கமான நட்பு!ஒரு காலத்தில் சர்வதேச அரங்கில் மிகவும் நெருங்கிய அரசியல் கூட்டாளிகளாகக் கருதப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆகிய இருவருக்கும் இடையேயா... மேலும் பார்க்க

ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்: மீண்டும் மூடப்பட்ட ஹார்மூஸ் வழித்தடம்! - என்ன காரணம்!

மத்திய கிழக்கு நாடான லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சமீபத்தில் எட்டப்பட்ட அமைதி ஒப்பந்தம் முறியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. லெபனான்... மேலும் பார்க்க