செய்திகள் :

கோவை மாநகரை கரும்புகையால் மூழ்கடித்த தீ விபத்து; களமிறங்கிய ராணுவம்; தீயணைக்கப்பட்டது எப்படி?

post image

கோவை காட்டூர் பகுதியில் வாகன உதிரி பாகங்கள் விற்பனைக் கடை செயல்பட்டு வருகிறது. அங்கு நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

மூன்று மாடி கட்டிடமான அதன் தரைத்தளத்திலிருந்து, மொட்டை மாடி வரை அனைத்து தளங்களிலும் தீ பரவியது.

கோவை தீ விபத்து
கோவை தீ விபத்து

சிறிது நேரத்திலேயே அருகில் இருந்த கட்டிடங்களுக்கும் தீ பரவத் தொடங்கியது. அந்த நிறுவனத்தினர் மற்றும் பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி தீயைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தனர். பிறகு சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்தனர்.

சுமார் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தண்ணீர் லாரிகள் மூலம் தீயை அணைக்கும் பணி நடந்தது. ஆனாலும் கரும்புகை வானம் முழுவதும் பரவியது. இதையடுத்து கூடுதல் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணி நடைபெற்றது.

கோவை தீ விபத்து
கோவை தீ விபத்து

தீயணைப்புத்துறையினர் மட்டுமல்லாமல், மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பணியாளர்கள், மாநகராட்சி அலுவலகப் பணியாளர்கள், போக்குவரத்து மற்றும் காவல்துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் இந்தப் பணியில் ஈடுபட்டனர்.

கூடுதலாக விமானப்படை, ஐஎன்எஸ் அக்ரானி கப்பற்படை ஆகியோரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார்கள். இதனால் அங்கு போக்குவரத்துத் தடை செய்யப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மக்கள் வெளியேற்றப்பட்டு, குடியிருப்புப் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

ராணுவம்
ராணுவம்

சுமார் 3 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் செய்தியாளர்களிடம், “தண்ணீருடன் ரசாயனம் கலந்த தெளிப்பான்களும் பயன்படுத்தப்பட்டன. இதில் உயிர்ப்பாதிப்பு ஏற்படவில்லை. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.

ஜம்மு-காஷ்மீர்: விபத்துக்குள்ளான ராணுவ வாகனம்... 10 வீரர்கள் பலி, பலர் படுகாயம்! - விவரம் என்ன?

ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தின் கானி டாப் பகுதியில் ராணுவ வீரர்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானது. விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் ராணுவ வீரர்களும், உள்ளூர் நிர்வாகக் குழுக்களும் உடனே சம்பவ இ... மேலும் பார்க்க

கோவையில் 80 அடி உயரத்தில் பழுதான ரோலர் கோஸ்டர்! - 3 மணிநேர போராட்டத்துக்கு பிறகு மீட்பு

கோவை கொடிசியா மைதானத்தில், தனியார் நிறுவனம் சார்பில் கடந்த டிசம்பர் 26-ம் தேதி முதல் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அங்கு செயற்கை நீருற்று மற்றும் பல்வேறு விதமான ராட்டினங்கள் வைக்கப்பட்டுள்ளன.கோவ... மேலும் பார்க்க

ஹீலியம் சிலிண்டர்கள் வெடிப்பது ஏன்? தொடர் விபத்துகளால் பலூன் வியாபாரிகளுக்குத் தடை விதிக்க கோரிக்கை

கடற்கரை, வணிக வீதிகள், சுற்றுலாத் தலங்கள், திருவிழாக்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் தவறாமல் இடம்பிடிப்பவை `ஹீலியம்' வாயுவால் நிரப்பப்பட்ட பலூன்கள். குழந்தைகள் மட்டுமல்ல பல நேரங்களில் பெரியவர்களும் ... மேலும் பார்க்க

ஸ்பெயின்: "விசித்திரமான விபத்து" - மோதிக்கொண்ட ரயில்கள்; 21 பேர் பலி; அரசு சொல்வது என்ன?

ஸ்பெயினில் நேற்று இரவு இரண்டு அதிவேக ரயில்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்து தென் ஸ்பெயினில் உள்ள அடமுஸ் நகரத்திற்கு அருகே நடந்துள்ளது.மலகாவில் இருந்து மாட்ரிட்டிற்குச் சென்று கொண்டிருந்த அதி... மேலும் பார்க்க

ஊட்டி: கழிவறை இல்லாத கூலித் தொழிலாளர்கள் குடியிருப்பு; காட்டுமாடு முட்டி பெண் பலியான சோகம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது கொதுமுடி படுகர் கிராமம். மலை காய்கறி, தேயிலை சாகுபடி அதிகம் நடைபெறும் இந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான விவசாயக் கூலித... மேலும் பார்க்க

MSC ELSA 3: கடலில் மூழ்கிய லைபீரியக் கப்பல்; சிறைப்பிடித்த கேரள அரசு; ரூ.1227 கோடி செலுத்தி மீட்பு!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து, கொச்சி துறைமுகத்துக்குச் சென்ற எம்.எஸ்.சி எல்சா 3 என்ற லைபீரியா நாட்டு சரக்குக் கப்பல் மே 24-ம் தேதி கொச்சியில் இருந்து 38 நாட்டிக... மேலும் பார்க்க