பாமக: "அவமானபட்டிருக்கேன்; யாரையும் சும்மா விடமாட்டேன்" - அன்புமணி ராமதாஸ் ஆவேச...
சத்தியமங்கலத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி; அனைவரும் கலந்துகொள்ளலாமே!
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்களுக்கு முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி என்றாலே உற்சாகமாகிவிடுவார்கள். முதலீடு பற்றி நன்கு தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தில் உற்சாகமாகக் கிளம்பி விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பெருந்திரளாக வந்துவிடுவார்கள். பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் எதில் கிடைக்கும் என்று கவனித்து, அதில் பணத்தைப் போட்டு, அதிக லாபம் சம்பாதிக்க நினைக்கும் அவர்களுக்கு தன்முனைப்புதான் இதற்கு முக்கியமான காரணம்.

முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என்பவை முதலீட்டாளர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகத்தான் நாம் கருத வேண்டும் காரணம் புதிய முதலீடு என்று வரும்போது அதைப் பற்றி நன்கு புரிந்துகொண்டு, அதில் எவ்வளவு பணத்தை முதலீடு செய்யலாம், அப்படி செய்தால் என்ன லாபம் கிடைக்கும், என்ன ரிஸ்க் அதில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும், அந்த முதலீட்டில் நஷ்டம் வருவதற்கான வாய்ப்பு ஏதும் இருக்கிறதா என்பதை எல்லாம் பார்த்துவிட்டுத்தான் முதலீடு செய்ய வேண்டும்.
அந்த வகையில் முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கும்போது அதில் கலந்துகொண்டால் புதிய முதலீடு பற்றி நன்கு தெரிந்துகொள்வதில் கொங்கு முதலீட்டாளர்கள் புத்திசாலிகள்!

அந்த வகையில், 'லாபம்' மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்டிரிபியூஷன் நிறுவனம் சத்தியமங்கலத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை வருகிற 21-ஆம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி மதியம் 1 மணி வரை நடத்த இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ச்த்தியமங்கலத்தில் உள்ள முதலீட்டாளர்கள் தவிர கோவை, ஈரோடு, திருப்பூர், கோபிசெட்டிப்பாளையம் எனப் பல ஊர்களில் வசிக்கும் முதலீட்டாளர்கள் தாராளமாக கலந்துகொள்ளலாம்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இருக்கும் சாதகமான விஷயங்கள் என்னென்ன, இதில் முதலீடு செய்தால், எவ்வளவு லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என முதலீட்டாளர்கள் கேட்க நினைக்கும் அத்தனை கேள்விகளுக்குமான பதிலைத் தெரிந்துகொள்ளலாம்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நினைப்பவர்கள் தங்கள் பெயரை அவசியம் பதிவு செய்துகொள்ள வேண்டும். https://labham.money/iap-dec-21-2025?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=iap_dec21_2025 என்கிற இந்த லிங்க்கினை சொடுக்கி, இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள நினைக்கும் முதலீட்டாளர்கள் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்.
சத்தியமங்கலம் பகுதியில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர் விழைப்புணர்வு நிகழ்ச்சி நடப்பதால், முதலில் வருபவர்களுக்கே இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள முன்னுரிமை அளிக்கப்படும்.
முதலீட்டாளர்களின் கவனத்துக்கு: 'லாபம்' என்பது ரெகுலர் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை மட்டுமே தரக்கூடியது. எனவே, டைரக்ட் ஃபண்ட் மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ள வேண்டாம்... தவிர, 'லாபம்' மூலம் முதலீடு செய்வதற்குத் தயார் என்கிறவர்கள் மட்டும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள உடனடியாகத் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்!


















