செய்திகள் :

சமாதானப் பேச்சுவார்த்தைக்குத் திரும்பிய ஈரான்: சீனா - பாகிஸ்தான் கூட்டணி சாதித்தது என்ன?

post image

கடந்த 38 நாள்களாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மிகக் கடுமையான போர் பதற்றம் நீடித்து வந்தது. திங்களன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ``புதன்கிழமைக்குள் ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படாவிட்டால், ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பின் மீது தாக்குதல் நடத்தப்படும்" என எச்சரித்திருந்தார். இதற்கு எதிர்வினையாற்றிய ஈரான், ``இஸ்ரேல் லெபனான் மீதான தாக்குதலை நிறுத்தும் வரை பின்வாங்க மாட்டோம்." எனத் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில்தான், சீனாவின் அதிரடித் தலையீட்டாலும் பாகிஸ்தானின் சமரச முயற்சியாலும் தற்காலிகமாகப் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

அமெரிக்கா - ஈரான்
அமெரிக்கா - ஈரான்

உலகையே அச்சுறுத்திய ஒரு போரைத் தடுத்து நிறுத்தி இஸ்லாமாபாத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உயர்மட்ட அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஓமன் நாட்டில் நடைபெற்ற முந்தையப் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழுவிற்கும், ஈரான் பிரதிநிதிகளுக்கும் இடையே கடும் மோதல் நிலவியது. இந்நிலையில், ஈரானின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியான சீனா களமிறங்கியது.

போர் நீடித்தால் உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிக்கப்படும் என்பதையும், தனது Belt and Road முதலீடுகள் சிதையும் என்பதையும் உணர்ந்த சீனா, ஈரான் மீதுள்ள தனது பொருளாதார செல்வாக்கைப் பயன்படுத்தியது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, பாகிஸ்தானுடன் இணைந்து 5 அம்ச அமைதித் திட்டத்தை உருவாக்கினார். சீனாவின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டியதுடன், அதிபர் ஜின்பிங்கிற்குத் தனது மரியாதையைத் தெரிவித்துள்ளார்.

சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுடனும் நெருக்கமான உறவைக் கொண்டுள்ள பாகிஸ்தான், இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பொருத்தமான 'நடுநிலை இடமாக' மாறியுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோரின் ஒத்துழைப்போடு, இஸ்லாமாபாத் இந்தத் தூதரகப் பேச்சுவார்த்தையை ஒருங்கிணைத்துள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கத் தரப்பில் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறது. ஈரான் தரப்பில் அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் கலந்து கொள்கிறார்.

"இஸ்லாமாபாத் ஒப்பந்தம்" என அழைக்கப்படும் இந்த முயற்சி, நிரந்தர அமைதியை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இருப்பினும், போர் நிறுத்தம் மிகவும் பலவீனமான நிலையிலேயே உள்ளது. இஸ்ரேல்-லெபனான் விவகாரம் மற்றும் ஈரானின் ஏவுகணைத் திட்டங்கள் குறித்த சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படாத நிலையில், இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை உலக அரசியலில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

'4 மணிக்கு முதல்வர் முன்னிலையில் கட்சியில் இணையுங்கள்...' - பிரஷர் போடும் திமுக; குழப்பத்தில் அஜிதா!

முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை 4 மணிக்கு தூத்துக்குடிக்குச் செல்லவிருக்கிறார். அதற்குள் தவெக நிர்வாகி அஜிதாவை திமுக முகாமுக்கு இழுத்து முதல்வர் முன்னிலையில் கட்சியில் இணைத்து விட வேண்டுமென ஒரு டீம் தீவி... மேலும் பார்க்க

பேச்சுவார்த்தை தோல்வி: "ஈரானுக்கு கெட்ட செய்தி; ஆனாலும் ஒரு நல்ல செய்தி" - அமெரிக்கா சொல்வது என்ன?

அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பேசியதாவது..."எங்களுடைய நிபந்தனைகளை ஈரான் ஒத்துக்கொள்ளவில்லை. ... மேலும் பார்க்க

அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை: 21 மணி நேரம் நடந்தும் கைக்கூடாதது ஏன்? Quick Points

கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி தொடங்கிய போர், நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் நல்ல முடிவை எட்டும் என்று உலகமே நினைத்திருந்தது.ஆனால், பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லமாபாத்தில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வா... மேலும் பார்க்க

பாலக்கோடு: கே.பி.அன்பழகனுக்கு டாக்டர் செந்தில்குமாருக்குப் போட்டி எப்படி இருக்கு? களநிலவரம் என்ன?

ஐந்து முறை தொடர்ந்து வெற்றிபெற்று ஆறாவது முறையாக பாலகோட்டில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு எதிராக, முன்னாள் எம்.பி டாக்டர் எஸ்.செந்தில்குமாரை தி.மு.க நிறுத்தியுள்ளது.கே.பி.அன்பழகன்... மேலும் பார்க்க

பாஜக பூத் கமிட்டி: "தமிழக பாஜக செயல்வீரர்களை எண்ணி பெருமைப்படுகிறேன்" - மோடி பாராட்டு; காரணம் என்ன?

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களின் பிரசாரம் தீவிரமாகியிருக்கிறது.தமிழ்நாட்டில் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என தேசிய ஜனநாயகக் கூ... மேலும் பார்க்க

திருவள்ளூர்: "விஜய் ஒரு நல்ல நடிகர்; அவ்வளவுதான் தெரியும்" - நடிகை நளினி

திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வி.ஜி. ராஜேந்திரனை ஆதரித்து, பிரபல நடிகை நளினி இன்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடு... மேலும் பார்க்க